Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொலிஸ்மா அதிபர் உரைக்கும் செய்தி தமிழருக்கு உறைப்பாக உணர்த்தும் பாடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Date: 2007-06-04

பொலிஸ்மா அதிபர் உரைக்கும் செய்தி தமிழருக்கு உறைப்பாக உணர்த்தும் பாடம்

பேரினவாத மேலாண்மைப் போக்கில் மும்முரமாக இருக்கும் இலங்கை அரசின் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா கடந்த வார இறுதியில் புதிய கண்டுபிடிப்பு ஒன்றைக் கண்டுபிடித்து வெளி யிட்டிருக்கின்றார்.

""யுத்த நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் வடக்கு, கிழக்கிலிருந்து தலைநகர் கொழும்புக்கு வந்து, இங்கு சுமார் ஆறு மாதங் களுக்கு மேலாக வேலையின்றி அலைந்து திரியும் மக்களால் நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது. எனவே இத்தகையோர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப் படுவர். இதற்கான போக்குவரத்து ஒழுங்குகளை நாங்களே (பொலி ஸாரே) வழங்குவோம்'' இப்படிக் கூறியிருக்கின்றார் பொலிஸ் மா அதிபர்.

கொழும்பு புறக்கோட்டைப் பிரதேசத்தில் உள்ள குறைந்த கட்டண தங்குமிட விடுதிகளான லொட்ஜ்களின் உரிமையாளர்களை அழைத்த பொலிஸார், அந்த விடுதிகளில் தங்கியிருக்கும் வடக்கு கிழக்குப் பிரதேச மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் வெளியேற் றப்பட வேண்டும் என்று இத்தகைய சுமார் அறுபது விடுதி உரிமை யாளர்களைப் பணித்தனர் என வெளியான அதிர்ச்சித் தகவல் அடங்கு வதற்கு இடையில், அந்த உத்தரவுக்குக் காரணமான தமது கண்டு பிடிப்பை வெளியிட்டிருக்கின்றார் இலங்கைப் பொலிஸ் துறையின் தலைவர் பொலிஸ் மா அதிபர்.

சிங்கள அரசின் காவல்துறை எடுத்திருக்கும் இத்திடீர் முடிவு மற்றும் அதிரடித் தீர்மானத்தின் பின்னணியை, இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சிபாரிசுகளைச் செய்யவென அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு இந்த நாட்டின் பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய சமர்ப்பித்த திட்டத்தில் காணலாம்.

""இந்த நாட்டில் நிலவுவது இனப்பிரச்சினையே அல்ல. இன அடிப்படையில் மக்கள் துருவப்படுத்தப்பட்டு, முரண்படுத்தப்பட வில்லை. மாறாக விடுதலைப்புலிகளின் பயங்கரவாதச் செயல் களால் தமிழ் மக்கள் தங்களின் வாழிடப் பிரதேசங்களை விட்டு வெளியேறி வந்து, சிங்களவரின் பிரதேசங்களை ஆக்கிரமித்து நிற் கின்றார்கள். அதுவே இங்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இலங்கையில் உள்ள பிரதேச செயலர் பிரிவுகளில் மிகவும் முக்கிய மானது தலைநகரில் உள்ள கொழும்பு பிரதேச செயலர் பிரிவு. இப் போது கொழும்பு பிரதேச செயலர் பிரிவில் தமிழர்கள்தான் பெரும் பான்மையினர்.

இப்படி அந்த யோசனைத்திட்டத்தில் பௌத்த சிங்களப் பெரும்பான்மையினருக்காக நீலிக் கண்ணீர் வடித்திருந்தது ஜாதிக ஹெல உறுமய.

அவ்வளவுதான். அந்த யோசனைத் திட்டம் வெளிப்படுத்தப்பட்டு ஒரு சில நாட்களுக்குள் கொழும்பில் தமிழர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, பௌத்த சிங்களப் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தை சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்தும் பெரும் திட்டம் செயற்படுத்தப்பட ஆரம்பித்து விட்டது. அதன் முதல் பூர் வாங்க கட்ட நடவடிக்கைகளே விடுதிகளில் தங்கியிருக்கும் தமி ழர்களும் கொழும்பில் "அலைந்து திரியும்' தமிழர்களும் அப்புறப் படுத்தப்படுதல் என்ற பெயரில் ஆரம்பமாகியிருக்கும் செயற்பாடு களாகும். தலைநகரில் பேரினவாத அரசு முன்னெடுக்கும் இனச் சுத்திகரிப்பு(Ethnic Cleansing) நடவடிக்கைக்கு பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா தலைமை வகிக்கப் புறப்பட்டிருக்கின்றார்.

1983 இல் பெரும் இனக்கலவரம் ஒன்றை அப்போதைய ஜே. ஆர். ஜெயவர்த்தன அரசு, திட்டமிட்டுத் தூண்டி, தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடச் செய்து விட்டு, அதிக உரிமைகளைக் கோரும் தமிழர்கள் பட்டுத் தெளியட்டும் என்று பார்த்திருந்தார். கொழும்பு நகரிலிருந்து தமிழர்களை அப்புறப்படுத்தி, தனிச் சிங்களத் தலை நகராக அதை மிளரச் செய்யும் நோக்கோடு, இனக்கலவரம் என்ற "இனச்சுத்திகரிப்பு' முயற்சியை முட்டாள்தனமாக மேற்கொண்டது ஜே.ஆர். அரசு.

அந்த விவேகமற்ற செயற்பாட்டின் விளைவைத் தென்னிலங்கை இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. அதிலிருந்து அந் தப் பாதிப்பிலிருந்து முழு நாடும் இன்னும் மீள முடியவில்லை. தமிழர்களின் உரிமைக்கான பிரிவினைவாதப் போராட்டம் முழு அள விலான தேச விடுதலைப் போராட்டமாக உருக்கொண்டு விஸ்வ ரூபம் எடுப்பதற்கான பலமான அத்திபாரத்தை வழங்கியதே இந்த இனக்கலவரம்தான் என்ற பேருண்மை காலம் தாழ்த்திப் புரிய வர, அந்தக் கொடூரத்தைப் புரிந்து, தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதன் மூடறிவை எண்ணிச் சிங்களம் தன்னைத்தானே நொந்துகொண்டது.

அத்தகைய பிறிதொரு முட்டாள் தனத்துக்கு மீளவும் தயாராகி றது போலும் தென்னிலங்கை.

தமிழர் தாயகம் எங்கும் பெரும் போர் கட்டவிழ்ந்திருக்கின்றது.

தரைவழிப் பாதை துண்டிக்கப்பட்டு, திறந்த சிறைக்குள் பெரும் இராணுவ மயப்படுத்தப்பட்ட பிரதேசத்துக்குள் போக்குவரத்து வசதியின்றிச் சிக்கிப்போயிருக்கின்றார்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.