Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை | மின்சாரம் தடைப்பட்டமைக்கு நாச வேலை காரணம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை | மின்சாரம் தடைப்பட்டமைக்கு நாச வேலை காரணம்?

 
 

ஆகஸ்ட் 20, 2020: ஆகஸ்ட் 17 அன்று இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டமைக்கு நாச வேலை காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது நுரைச்சோலை மின்சார நிலையத்தில் நடைபெற்றிருக்கலாம் எனவும், இச் சம்பவத்தின் பின்னணியில் ‘டீசல் மாஃபியா’ எனப்படும் டீசல் மூலம் மின்னுற்பத்தி செய்யும் நிறுவனங்கள் காரணமாகவிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

மின்னுற்பத்தி செய்யும் நிலையங்களில் இருந்து வழங்கல் கோபுரங்களுக்கு மின்சாரம் வழங்கப்படும்போது அதன் பரிமாணங்கள் இரண்டு வகைகளில் கொடுக்கப்படுகிறது. இலங்கையில் இவை 240 volts / 50 Hertz எனவும் வட அமெரிக்காவில் இவை 120 volts / 60 Hertz எனவும் கூறப்படும்.

நுரைச்சோலை மின்நிலையத்தின் இது 3030 என்ற சுற்று வீதத்தில் (ஒரு நிமிடத்துக்கு 3030 சுற்றுக்கள்) கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். அதாவது பிறப்பிக்கப்படும் frequency 50.5 Hz இல் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இதற்குக் கூடினாலோ குறைந்தாலோ இவ்வியந்திரம் தானாகவே நின்றுவிடும். சம்பவ தினத்தன்று இவ்வியந்திரத்தின் setting 3060 rpm (51 Hz) இற்கு மாற்றப்பட்டிருந்தது எனக்கூறப்படுகிறது. நுரைச் சோலையில் இப்படி மூன்று ஜெனெரேட்டர்கள் இருப்பதாகவும் அவை மூன்றுமே 3060 rpm இற்கு மாற்றப்பட்டிருந்தன எனவும் அறியப்படுகிறது. இக்காரணத்தால் இவை மூன்றும் தானியக்கமாகத் தமது இயக்கத்தை நிறுத்திக்கொண்டன என்கிறார்கள். இத மீண்டும் இயக்கநிலைக்குக் கொண்டுவர மூன்று நாட்கள் பொறுக்க வேண்டும்.

இச்சம்பவம் பற்றி மின்வழங்கல் சபை தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

 


டீசல் மாஃபியா

நுரைச்சோலை மின்நிலையம் நிலக்கரியை எரிப்பதன்மூலம் மின்னுற்பதி செய்கிறது. தனியாருக்குச் சொந்தமான இது சீன நிறுவனமொன்றால் நிர்மாணிக்கப்பட்டது.

இலங்கையின் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களையும் நாடவேண்டியிருந்தது. அவர்கள் டீசல் எண்ணையை எரிபொருளாகப் பாவித்து மின்பிறப்பாக்கிகளின் மூலம் பொது வழங்கல் கம்பிகளில் (grid) மின்னேற்றி வந்தார்கள். நுரைச்சோலை அனல் மின்னிலையம் பாவனைக்கு வந்ததிலிருந்து மின்சாரசபை டீசல் மின்நிலையங்களிடமிருந்து மின்சாரம் வாங்குவதை நிறுத்திவிட்டது. இதனால் ஆத்திரம் கொண்டு அவர்கள் தான் இந்த நாசவேலையைச் செய்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

நாட்டின் 75 வீதமான மின் வழங்கல் மீளவும் வந்துவிட்டது எனவும், நுரைச்சோலை இன்னும் வழங்கலுக்குத் தயார் செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் மின்சாரம் முற்றாகத் தடைப்படாமல் இருக்க சுழலும் மின்வெட்டு நடைமுறைக்கு வருமென அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

https://marumoli.com/இலங்கை-மின்சாரம்-தடைப்ப/?fbclid=IwAR1bbQX82_QS1ecvXk9L2NKGN0E7ELosXlTMCp7rxW-EaFZdlX57chDJJE0

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.