Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறையின் மற்றொரு கொடூர வடிவம் இது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-06-08

தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறையின் மற்றொரு கொடூர வடிவம் இது!

ஈழத் தமிழர்களை அவர்களது பாரம்பரிய பிரதேசத்தில் வறுத்தெடுத்து வதைக்கும் அரச ஒடுக்குமுறை, இப்போது தலை நகரிலும் அவர்களை கருவறுக்கும் தனது வேலையைக் கனகச் சிதமாக முழு அளவில் ஆரம்பித்து விட்டது.

கொழும்பு விடுதிகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நித் திரைப் படுக்கையில் இருந்து உடுத்த உடையோடு கால் நடைகள் போல அள்ளிச் செல்லப்படும் கொடூரம் முழுத் தமிழினத்துக்கும் இழைக்கப்பட்டிருக்கும் பெரும் அவமான மாகும்.

மாற்று இனத்துப் பிச்சைக்காரர்கள் கூட தலைநகர் வீதியோரங்களில் கேட்பாரின்றி விசாரிப்பாரின்றி ஆனந் தமாக, சாவகாசமாகப் படுத்துத் தூங்கி மகிழும்போது தமிழர்கள் மட்டும் அவர்கள் தமிழர்களாகப் பிறந்த குற் றத்துக்காக தலைநகர் விடுதிகளில், தங்களது சொந்தப் பணத்தில் தங்கியிருக்கக் கூட உரிமை இல்லாதவர்களாக, கூண்டு பஸ்களில் கூண்டோடு அள்ளிச் செல்லப்படுகின் றார்கள்.

தமிழர் தாயகமான வடக்கிலும், கிழக்கிலும் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் பெரும் இராணுவக் கெடுபிடி யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. தினசரி மோதல்கள், தாக்குதல்கள், கடத்தல்கள், வீடுகளுக் குள் சீருடையினர் புகுந்து நள்ளிரவில் நடத்தும் கொடூரங் கள், கொள்ளைகள், கொலைகள், இம்சைகள், தொல்லை கள் என்று பெரும் வன்முறைப் புயலே அங்கு வீசுகின்றது.

போதாக்குறைக்குத் தமிழர் தாயகத்தின் பல பகுதிகள் மீதும் வான் வழி விமானக்குண்டு வீச்சுகள், ஷெல், பீரங் கித் தாக்குதல்கள், கிளைமோர் வெடிகள், கடல்வழி நடவடிக் கைகள் என்று பெரும் உயிராபத்து ஏற்படுத்தும் கொடூர யுத்த நிகழ்வு கள் இடம்பெறுகின்றன.

இவை எல்லாவற்றிலிருந்தும் உயிர் பிழைத்துத் தப்பு வதே முக்கியமானது என்று கருதி, உயிரைப்பிடித்துக் கொண்டு, உடைமைகளைத் துறந்து, அகப்பட்ட சொத்தை அறா விலைக்குத் தன்னும் விற்றுச் சுத்தி, கிடைத்த பணத்துடன் தலைநகர் வந்துசேரும் அப்பாவித் தமிழர் குடும்பங்கள், ஏதேனும் நாடொன்றுக்குத் தப்பிச் சென்று, தஞ்சம் புகுந்து, பிச்சை எடுத்தேனும் பிழைத்து, உயிர் தப்புவோம் என ஏங் கித் தவிக்க

"மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல' தலை நகரில் அரச ஒடுக்குமுறை அந்த மக்கள் மீதும் தனது பேரின வாத மேலாண்மைத் திமிரை, கொடூரக் கைவரிசையாகக் காட்டி நிற்கின்றது.

ஈழத் தமிழர்களின் உரிமைக்கான விடுதலைப் போராட் டம் ஆயுதம் தாங்கிய எதிர்க்கிளர்ச்சி வடிவத்தை எடுப்பதற் குப் பின்புலக் காரணமாக விளங்கிய புரட்சிகர உட்கிடை களை இன்னும் சரிவரப்புரிந்து கொள்ளாத சிங்களம், அப்பா வித் தமிழர்களையும் மீண்டும், மீண்டும் தூண்டி, நெட்டித் தள்ளி, அந்த ஆயுதம் தாங்கிய எதிர்ப்புரட்சிப் பாதைக்குள் ளேயே தள்ளிவிடுகின்றது. அதனால் அதன் எதிர்விளைவு களை எதிர்கொண்டு அல்லாடுகின்றது சிங்களம்.

அத்தகைய தவறை இழைத்தும் இன்னும் கூடப் பட்ட றிந்து தெளியவில்லை தென்னிலங்கைச் சிங்களம். இப் போதும் அதே பாணி நடவடிக்கைகளை எடுத்து, அதே வழிக் குத் தமிழர்களை முட்டித் தள்ளி, உந்தித்தள்ளத் தொடங்கி யிருக்கிறது.

யுத்தப் பிரதேசங்களில் இருந்து ஓடித்தப்பி எங்காவது சென்று பிழைத்துக் கொள்வோம் என்று நிலை தெரியாது குழம்பி வரும் அப்பாவித் தமிழர்களை, சிறைப்பிடித்து மீண்டும் யுத்த அரங்குக்குள் பலவந்தமாகக் கொண்டு போய்த் தள்ளுவது யுத்தத்தை எதிர்கொண்டு மீட்சி காண் பதைத் தவிர உங்களுக்கு வேறு வழியே மாற்று மார்க் கமே இல்லை என்பதை அந்த அப்பாவித் தமிழர்களுக்கு நெத்தியடியாக உறைப்பாக உரைப்பதாகும்.

விரிவாக்கம் கண்டுவரும் விடுதலைப் புலிகளின் போராட் டம் வடக்கு, கிழக்குக்கு வெளியிலும் விரிந்து, பல புதிய முனைகளைத் திறந்து நிற்கின்றது என்பதும், அந்த முனை களில் அவற்றை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டும் கட் டாயமும் கொழும்பு அரசுக்கு இருக்கின்றது என்பதும் புரிந்து கொள்ளத் தக்கவைதான். அதுவும் தலைநகர் கொழும்பின் பாதுகாப்பு பிரதானமானது என்பதால் அதற்காக ஏதேனும் செய்தாக வேண்டிய பலவந்தம் கொழும்பு அரசுக்கு உள்ளது என்பதும் ஏற்கத்தக்கதே.

ஆனால் அதற்காக நிழலோடு போர் புரிய அரசு முயலக் கூடாது. விரும்பின் நிஜத்தோடு மோதமுனையவேண்டும்.

யுத்தத்துக்கு அஞ்சி வெளிநாடு எதற்கும் ஓடித் தப்பு வோம் என்று கருதி தலைநகரில் தஞ்சம் புகுவோராலும் அல்லது அது போன்ற காரணங்களுக்காகத் தலைநகரில் தங்கியிருப்போராலும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற கருத்து வெறும் அபத்தப் போக்கும் பொய்மையான முட்டாள்வாதமுமாகும். அத்தகைய அப்பாவிகளைக் கூண்டோடு அள்ளி யுத்த பூமிக்குத் திருப்பி அனுப்புவதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்பது "மலையைக் கெல்லி எலியைப்பிடிக்கும்' வேலையாகும்.

குற்றம் அல்லது தவறு ஏதும் இழைக்காமல், தமது சொந் தப் பணத்தில் சொந்தச் செலவில் தலைநகரில் தங்கி யிருக்கக்கூடத் தமிழனுக்கு உரிமை இல்லை என்பதை அடித்துக்கூறும் சிங்கள அரசு அதற்காகத் தமிழர்களை அவர்களது தாயகத்துக்கு சிறைக் கைதிகளாகக் கடத்தும் சிங்கள அரசு அந்த மக்கள் தம்பாட்டில், தம் தலைவிதி யைத் தாங்களே தீர்மானித்து, தங்கள் தாயகத்தில் சுதந் திரமாக வாழ்வதை அங்கீகரித்து, ஒதுங்கி விட்டால், இந்தச் சிக்கல்கள் எல்லாம் தீர்ந்து விடுமே....!

கொழும்பிலிருந்து தமிழர்களை சுருட்டி அள்ளி அவர் களின் தாயகத்துக்கு வல்வந்தமாக அனுப்பி வைக்கும் கொழும்பு அரசின் நடவடிக்கை, தமிழர்களுக்கு அவர்களது தாயகத்தில் தான் நிம்மதியான பாதுகாப்பான கௌரவ மான நியாயமான வாழ்க்கை முறையை அவர்கள் அமைத்துக்கொள்ள முடியும் என்பதையும் அவர்களுக்கு உறுதிப்படுத்தி உணர்த்துகின்றது. அதைத் தமிழர்கள் ஆழமாகக் கருத்தில் கொள்வதோடு கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவும் வேண்டும்.

உதயன்

மாற்று இனத்துப் பிச்சைக்காரர்கள் கூட தலைநகர் வீதியோரங்களில் கேட்பாரின்றி விசாரிப்பாரின்றி ஆனந் தமாக, சாவகாசமாகப் படுத்துத் தூங்கி மகிழும்போது தமிழர்கள் மட்டும் அவர்கள் தமிழர்களாகப் பிறந்த குற் றத்துக்காக தலைநகர் விடுதிகளில், தங்களது சொந்தப் பணத்தில் தங்கியிருக்கக் கூட உரிமை இல்லாதவர்களாக, கூண்டு பஸ்களில் கூண்டோடு அள்ளிச் செல்லப்படுகின் றார்கள்.

இது மட்டுமின்றி விலையுயர்ந்த விடுதிகளில் வெளிநாட்டு பாலியல் தொழிளாளர்களும், மாபியா கும்பல்களும் மாதக்கணக்கில் தங்கியிருக்கின்றனர். இந்தக் குற்றவாளிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்களுடன் நல்ல உறவையும் காவல்துறை பேணி வருகின்றது.

தமிழர் தாயகமான வடக்கிலும், கிழக்கிலும் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் பெரும் இராணுவக் கெடுபிடி யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. தினசரி மோதல்கள், தாக்குதல்கள், கடத்தல்கள், வீடுகளுக் குள் சீருடையினர் புகுந்து நள்ளிரவில் நடத்தும் கொடூரங் கள், கொள்ளைகள், கொலைகள், இம்சைகள், தொல்லை கள் என்று பெரும் வன்முறைப் புயலே அங்கு வீசுகின்றது.

போதாக்குறைக்குத் தமிழர் தாயகத்தின் பல பகுதிகள் மீதும் வான் வழி விமானக்குண்டு வீச்சுகள், ஷெல், பீரங் கித் தாக்குதல்கள், கிளைமோர் வெடிகள், கடல்வழி நடவடிக் கைகள் என்று பெரும் உயிராபத்து ஏற்படுத்தும் கொடூர யுத்த நிகழ்வு கள் இடம்பெறுகின்றன.

சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களை தமிழர் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதன் மூலம் இதற்கு விரைந்து தீர்வு காணலாம்.

சிங்கள அரசு அந்த மக்கள் தம்பாட்டில், தம் தலைவிதி யைத் தாங்களே தீர்மானித்து, தங்கள் தாயகத்தில் சுதந் திரமாக வாழ்வதை அங்கீகரித்து, ஒதுங்கி விட்டால், இந்தச் சிக்கல்கள் எல்லாம் தீர்ந்து விடுமே....!

அரசியல்வாதிகளில் பிடியில் இருந்து விடுபட்டு சிங்கள மக்கள் சுயமாக சிந்தித்தால்தான் இந்த உண்மையை உணர முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.