Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றி தமிழீழத்துக்கான பாதையைத் திறந்த மகிந்தவுக்கு நன்றி: சுரேஸ் பிரேமச்சந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றி தமிழீழத்துக்கான பாதையைத் திறந்த மகிந்தவுக்கு நன்றி: சுரேஸ் பிரேமச்சந்திரன் [வெள்ளிக்கிழமை, 8 யூன் 2007, 11:37 ஈழம்] [சி.கனகரத்தினம்]

சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றி தமிழீழம் உருவாவகுவதற்கான பாதையைத் திறந்திருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன் பேசியதாவது:

கொழும்பில் தமிழர்கள் வெளியேற்றப்படுவது இது முதல் முறையல்ல.

கடந்த 50 ஆண்டுகால வரலாற்றில் இந்த வெளியேற்றல் நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் அங்கே நீங்கள் போய் குடியேற வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் கொழும்பு விடுதிகளிலிருந்து இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றன

சிறு பான்மைவெள்ளையனை பலவந்தமாக வெளியேற்றுகிறார் என்று சிம்பாபே அதிபர் முகாபேக்கு பொருளாதார தடை. பயணத்தடை என பல நெருக்கடிகளை மேற்குலகம் கொடுத்து வருகிறது. இந்த தமிழர்களை நாய்களை போல் பிடித்து பஸ்சில் ஏற்றி நாடு கடத்திய சிரிலங்காவுக்கு மேற்குலகம் என்ன செய்ய போகிறது.?

பொருளாதார தடை கொண்டு வருமா?

பயனத்தடை வருமா?

உதவிகள் நிறுத்தபடுமா?

Edited by நேசன்

இதற்கு நன்றி தெரிவிக்க ஓரு முறை இருக்கு அதை விடுத்து வெறுமனமே வாய் சொல்லால் நன்றி தெரிவிப்பதில் அர்த்தம் இல்லை.

முறை 1

இதே பாணியில செல்வீச்சுக்கள் முலமாக எல்லைப்புறத்தில் வாழும் சிங்களவர்களை வெளியேற்றுவது.

முறை 2

தொடர்ந்தும் சிங்களவர்கள் வாழும் பகுதிகளை நோக்கி கிளைமோர்களை வெடிக்க வைப்பது.

இதற்கு நன்றி தெரிவிக்க ஓரு முறை இருக்கு அதை விடுத்து வெறுமனமே வாய் சொல்லால் நன்றி தெரிவிப்பதில் அர்த்தம் இல்லை.

முறை 1

இதே பாணியில செல்வீச்சுக்கள் முலமாக எல்லைப்புறத்தில் வாழும் சிங்களவர்களை வெளியேற்றுவது.

முறை 2

தொடர்ந்தும் சிங்களவர்கள் வாழும் பகுதிகளை நோக்கி கிளைமோர்களை வெடிக்க வைப்பது.

இந்த இரண்டுமே சிங்களவரின் கையாலாகாத்தனம்.

புலிகளின் பாணியில் செய்வதானால் அது இராணுவ நிலைகள் மீதாக மட்டுமே இருக்கும்.

சரி லிசான் ஆனால் எந்த சிங்களவனும் தமிழருக்கு உபவத்திரம் நடக்கும் பொழுது என்ன செய்கிறார்கள் அது புலிகளிற்கு தான் நடக்கிறது என்று தான் பாடம் கற்பிக்க நிற்கின்றார்கள் ஆகவே சிங்கள இனத்திற்கும் இழப்புக்கள் இடப்பெயர்வுகள் அழிவுகள் ஏற்படும் பொழுது தான் சிறிதாவது புரிய யோசிப்பார்கள்.

புலிகளை சிங்கள மக்களிடத்தில் கோரமாகச் சித்தரித்துள்ளனர் இனவாதிகள். தமிழர்களின் நியாயமான போராட்டம் சிங்கள மக்களுக்கு எப்போதுமே புரியப் போவதில்லை. இராணுவத்தின் தமிழ் மக்கள் மீதான ஊரிமை மீறல்களையோ, புலிகளின் நிர்வாகம் பற்றியோ எதுவுமே அவர்களுக்குத் தெரியப்படுத்தப்படுவதில்லை. சிங்கள கிராமங்களில் நடைபெற்ற வன்முறைகளை வரிசைப்படுத்திக் கூறும் அவர்கள் தமிழர் படுகொலைகளைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள்.

கொழும்பில் தமிழர்கள் சிங்களவருடன் பாதுகாப்பாக இருக்க முடியகிறது, ஆனால் தமிழர் பிரதேசத்தில் சிங்களவர் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பது பல சிங்களவரின் வாதம். பாதுகாப்பிற்காக சந்தேகத்திற்கிடமான தமிழர்களை வெளியேற்றியதில் எத்தனை சிங்களவர் கவலைப் பட்டிருப்பார்கள் ? சில நாட்களில் சர்வதேச நாடுகள் உட்பட எல்லோருமே இந்தச் சம்பவத்தை மறந்து விடுவர்.

சிங்கள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது புலிகளின்மேல் என்றுமே அழியாத மனித உரிமை மீறலாக சர்வதேசத்தில் பதிந்துவிடும்.

ஒரு சிறு துரும்பும் பல்லுக்குத்த உதவும் என்பது போல, இது சிங்களவர்களின் எதிர்கால தமிழர் எதிப்பு நடவடிக்கைகளின் மொத்த வெளிப்பாட்டுடன் ஒப்பிடுகையில் ஒரு சிறிய குச்சிதான்.

அதை இந்த உலக நாடுகள் எப்படி எடுக்கப்போகின்றன என்பதை பார்ப்பதினை விடுத்து, அது தமிழர்களுக்கு ஒரு தனியான ஒரு பிரதேசம் தேவை என்ற ஒரு பெரும் உண்மையை உலகிற்கு எடுத்து இயம்புகிறது. காலம் கனிகிறது என்பது எம் கண்முன்னே தெரிவது எமக்கு ஒரு பெரும் பலம் தான்.

இதனால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற தமிழர்களுக்கு வெளிநாடுகளில் வாழும் தமிழ மக்கள் எப்படியான பங்களிப்பினை செய்து உலக அரங்கில் தமிழனின் உண்மையான் தேசிய உணர்வை வெளிக்காட்டலாம் என்பதை பற்றி சிந்திப்பது தான் காலத்திற்கு ஏற்ற கட்டாய தமிழ்ச்சேவை!! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.