Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குழந்தைகளிடம் நல்ல பழக்கங்கள் வளர... இந்த சின்ன சின்ன தவறுகளை செய்யாதீர்கள் பெற்றோர்களே!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளிடம் நல்ல பழக்கங்கள் வளர... இந்த சின்ன சின்ன தவறுகளை செய்யாதீர்கள் பெற்றோர்களே!

Parenting

Parenting ( Photo by Juliane Liebermann on Unsplash )

சின்னச் சின்ன விஷயங்களின் மூலம் பெரிய மாற்றத்தை குழந்தைகளிடம் நாம் காண முடியும். எதையும், என்றும் குழந்தைகளிடம் கட்டாயப்படுத்தித் திணிக்க முடியாது என்பதை மனதில்கொள்ள வேண்டும்.

``குழந்தைகளை `வழிக்குக் கொண்டு வருவது' எப்படி என்று பெற்றோரை கேட்டால், பெரும்பாலானவர்கள் `வாய்ப்பே இல்லைங்க' என்பார்கள். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தங்களின் 75% பழக்கவழக்கங்களை, தாங்கள் பார்க்கும் விஷயங்கள் மூலமாக மட்டுமே கற்றுக்கொள்கிறார்கள். எனவே, ஐந்து வயதுக்குள் அவர்களை செம்மைப்படுத்துவதன் மூலம் அவர்களிடம் நல்லொழுக்கப் பண்புகளை வளர்க்க முடியும்'' என்கிறார் மதுரையைச் சேர்ந்த மனநல மருத்துவர் தீப். டாக்டர் சொல்லும் முக்கிய ஆலோசனைகளை டேக் நோட் பெற்றோர்களே...

சொல்லாதீர்கள்... செய்துகாட்டுங்கள்!

மருத்துவர் தீப்
 

``குழந்தைகள் சொல்லிக்கொடுத்துக் கற்றுக்கொள்வதைவிட, தாங்கள் பார்க்கும் விஷயங்கள் மூலம்தான் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். அதனால், உங்கள் குழந்தைகள் என்னென்ன நல்ல பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அவற்றை நீங்கள் முதலில் பின்பற்ற வேண்டும். தினமும் காலையில் எழுந்ததும் குழந்தை நேராகப் பல் துலக்கச் செல்ல வேண்டும் என்றால், பெற்றோர்களும் அதைச் செய்ய வேண்டும். ஆம்... உங்கள் குழந்தை எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியெல்லாம் நீங்கள் முதலில் இருக்க வேண்டும் அல்லது மாற வேண்டும்.

 
 

குழந்தைகள் மற்றவர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொள்கிறார்களா?

`இப்ப இருக்குற குழந்தைங்க எல்லாம் பெரியவங்களை மதிக்கிறதே இல்லங்க' என்று பலரும் புலம்புவதைக் கேட்கிறோம். இது எங்கிருந்து தொடங்குகிறது? குழந்தைகளிடம் பெற்றோர் பேசுவதை மட்டுமே அவர்கள் கவனிப்பதில்லை, பெற்றோர் யாரிடமெல்லாம், எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பதையும் அவர்கள் கவனிக்கிறார்கள். நீங்கள் உங்கள் பெற்றோரிடம் கோபமாகப் பேசுவது, துணையிடம் அலட்சியமாகப் பேசுவது, துணையின் பெற்றோரை தரக்குறைவாகப் பற்றிப் பேசுவது, போனில் கத்தி பேசுவது, வேலையாட்களிடம் அதிகாரமாகப் பேசுவது... இப்படி அனைத்தையும் குழந்தைகள் கவனிக்கிறார்கள். உங்கள் வார்த்தைகளைத்தான் அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். எனவே, எப்போதும் நாகரிகமான, பண்பான வார்த்தைகளையே பேசுங்கள்.

Parenting
 
Parenting Photo by Priscilla Du Preez on Unsplash

செலவிட வேண்டியது பணத்தை அல்ல, நேரத்தை!

முன்பு கூட்டுக் குடும்பங்கள் இருந்தபோது, பலதரப்பட்ட மனிதர்களுக்கு மத்தியில் வாழ்ந்த குழந்தைகள், ஒவ்வொருவரிடமும் பல வாழ்க்கை பாடங்களைக் கற்றுக்கொண்டார்கள். தாத்தா, பாட்டியின் நீதிக்கதைகள் அவர்களை நல்வழிப்படுத்தின. பெரியப்பா, சித்தப்பா குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடியது அவர்களுக்கு `சோஷியல் கெட்டுகெதர்'ரை இயல்பாகக் கற்றுக்கொடுத்தது. காலையில் சண்டையிட்டுக்கொள்ளும் மாமாவும் அத்தையும் மாலையில் சமாதானமாகும்போது, கோபமும் ஈகோவும் ஈசல்போல குறை ஆயுள்கொண்டவையாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டார்கள்.

 

ஏன் நாம் அந்த வாழ்க்கைமுறையை விட்டு வெளியே வந்து, நியூக்ளியர் குடும்பங்களாக மாறினோம்? ``எங்களுக்கு ப்ரைவஸி வேண்டும். நன்றாகச் சம்பாதித்து எங்கள் குடும்பத்தை நன்றாகக் கவனிக்க வேண்டும், குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும்" என்பார்கள் பலர். ஆனால், குழந்தையின் எதிர்காலத்தைக் காரணம் காட்டி தனிக்குடித்தனம் வந்த எத்தனை பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்காக, குழந்தையுடன் நேரத்தைச் செலவிடுகிறார்கள்?

பணத்தை செலவு செய்து கிண்டர் கார்டனில் சேர்த்துவிட்டால், குழந்தை அனைத்தையும் கற்றுக்கொள்ளும் என்று நினைப்பது தவறு. முன்பு, கூட்டுக்குடும்பத்தில் இருந்த 10 பேர் கற்றுக்கொடுத்த அனுபவக்கல்வியை, இப்போது வழங்க வேண்டிய பொறுப்பு பெற்றோர் இருவரிடம் மட்டுமே சேர்கிறது. அதற்கு, அவர்கள் குழந்தையுடன் தங்கள் நேரத்தை செலவு செய்துதானே ஆக வேண்டும்? எனவே, குழந்தைகள் சமர்த்தாக வளர அவர்களுடன் நீங்கள் அதிக நேரம் செலவிட்டு, நல்ல பழக்க, வழக்கங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

உரையாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் க்வாலிட்டி டைம் அவசியம்!

`ஆனா நான் என் குழந்தைகூட அதிக நேரம் செலவிடுறேனே டாக்டர்...' என்பார்கள் பலர். விசாரித்தால், `நான்தான் அவனை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போய்விட்டு கூட்டிட்டு வர்றேன், ஹோம்வொர்க் சொல்லிக் கொடுக்குறேன்' என்பார்கள். தினசரி குறைந்தது ஒரு மணிநேரமாவது அவர்கள் படிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, பிள்ளைகளுடன் செலவிடுங்கள். மேலும், அப்பாவும் அம்மாவும் குழந்தையின் முன்னால், இன்றைய நாள் எப்படி இருந்தது, என்னவெல்லாம் நடந்தது என்று சகஜமாகப் பேசுங்கள். இதைப் பார்த்து வளரும் குழந்தையும் தாமாகவே அனைத்தையும் உங்களிடம் பகிர ஆரம்பிக்கும். குறைந்தபட்சம் தினமும் இரவு உணவையாவது அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணுங்கள். ஒன்றாக என்றால், டிவி பார்த்துக்கொண்டு உண்பது அல்ல. ஒருவருக்கொருவர் பேசியபடி உண்பது. குழந்தையிலேயே இந்தப் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால், பதின் வயதில், `என்ன கேள்வி கேட்டாலும் கடுப்படிக்கிறானே' என்ற புலம்பலை நீங்கள் தவிர்க்கலாம்.

அந்த மூன்று ஒழுக்கங்கள்!

வளர்ந்த நாடுகளில், குறைந்தது 4 வயது வரை குழந்தைகள் வீட்டில் பெற்றோரிடம் அனுபவக் கல்வியைக் கற்க வேண்டும் என்று தீர்மானமாக இருக்கின்றார்கள். குழந்தைகள் சமூக ஒழுக்கத்தைப் (Social values) பற்றி பள்ளியில் தெரிந்துகொள்வதற்கு முன், தன் குடும்பத்தைப் பற்றியும், தன் குடும்பத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பைப் பற்றியும் (Family values) மற்றும் சுய ஒழுக்கத்தையும் (Personal values) தெரிந்துகொள்வது அவசியம். இதுதான் நம் வீடு, இங்கு நாம் எப்படி இருக்க வேண்டும், நம்மால் காரில் செல்ல முடியாது பைக்கில்தான் செல்ல முடியும் என்பது போன்ற விஷயங்களை வீட்டில் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

Parenting
 
Parenting Photo by Daiga Ellaby on Unsplash

இப்படி, வீட்டின் இயல்பை குழந்தைகளுக்கு உணர்த்துவதன் மூலம், `நம் வீட்டில் பொருள்கள் கலைந்திருக்காது, நாமும் நம் விளையாட்டுப் பொருள்களை அடுக்கி வைத்துவிட வேண்டும்' என்பது போன்ற சுய ஒழுக்கப் பழக்கங்களைக் கற்றுக்கொள்வார்கள்.

இப்படி, Family values மற்றும் Personal values இவை இரண்டின் அஸ்திவாரமும் ஸ்திரமாக இருக்கும்போது, வெளியே கற்கும் Social values-ம் இணைந்து குழந்தைகள் சரியாக வளர்வார்கள். முதல் இரண்டு வேல்யூகளையும் 4 வயதுக்குள் சரியாகக் கற்றுக்கொடுக்காமல் நேரடியாக பள்ளியில் சேர்க்கும்பட்சத்தில், அங்கே உடன் இருக்கும் குழந்தைகள், ஆசிரியர் சொல்வதையே குழந்தை பின்பற்றத் தொடங்குகிறார்கள்.

 

அம்மா, அப்பா ஒற்றுமை முக்கியம்!

குழந்தைக்கு, அம்மா, அப்பா இருவரும் சமம்தான். அம்மா சொன்னால் அப்பா கேட்பார் என்றும், அப்பா சொன்னால் அம்மா கேட்பார் என்றும் பழக்கப்படுத்துவது அவசியம். அம்மா நோ சொன்னால் உடனே அப்பாவை தாஜா செய்து வேண்டியதை சாதித்துக்கொள்வது, அப்பா மறுத்தால் அம்மாவிடம் அனுமதி வாங்குவது என்று அவர்களை பழக்கினால், அது காலம் முழுவதும் தொடரும் பிரச்னையாக மாறிவிடும்.

பெற்றோர்களுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் அதைக் குழந்தை முன் காட்டிக்கொள்ளக் கூடாது. அப்பா திட்டினால், உடனே அம்மா, அப்பாவைத் திட்டிவிட்டு குழந்தையை சமாதானப்படுத்துவது கூடாது. `அப்பாக்கு கோபம் வர்ற மாதிரி நீ ஏன் நடதுக்கிற, அதனாலதான் அப்பா திட்டினாங்க, இனிமே பண்ணாத' என்று குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டும்.

Parenting
 
Parenting Photo: Pixabay

மேலே குறிப்பிட்டிருக்கும் சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால், சின்ன சின்ன தவறுகளைத் தவிர்த்தாலே போதும்... குழந்தைகளிடம் பெரிய மாற்றத்தைக் காண முடியும். குழந்தைகளிடம் என்றுமே கட்டாயப்படுத்தி ஒரு விஷயத்தை திணிக்க முடியாது என்பதை மனதில்கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பும்படி உங்கள் குழந்தை இருக்க வேண்டும் என்றால், நீங்கள் முதலில் அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும்'' என்கிறார் டாக்டர் தீப்.

 

https://www.vikatan.com/lifestyle/parenting/how-can-you-encourage-good-habits-in-children

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.