Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொடர் மௌனத்தின் மூலமாக `டில்லி' வெளிப்படுத்தும் நிலைப்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் மௌனத்தின் மூலமாக `டில்லி' வெளிப்படுத்தும் நிலைப்பாடு -(கலைஞன்)

[10 - June - 2007]

* ஈழப்பிரச்சினையும் இந்தியாவும்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இலங்கை தொடர்பாக கூறிய கருத்துக்கள் இலங்கை பேரினவாதிகள் மத்தியில் புயலைக் கிளப்பிவிட்டுள்ள நிலையில், அவற்றை பற்றியெல்லாம் கவலைப்படாமல் இலங்கையரசுக்கு எந்த வழிகளில் இராணுவ உதவிகளை வழங்கலாம் என்பது குறித்து புது டில்லி தீவிரமாக சிந்தித்து வருகிறது.

இலங்கை இந்தியாவை தவிர சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமிருந்து ஆயுதங்களை,இராணுவ தளபாடங்களை வாங்க முற்படக் கூடாதென தான் கூறிய கருத்துத் தொடர்பாக இலங்கையில் ஏற்பட்டுள்ள சீற்ற நிலை குறித்து எவ்வித விளக்கங்களையும் வழங்க இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முன்வரவில்லை. மாறாக இலங்கை கட்சிகளின் விளங்காத் தன்மை குறித்தே இவர் கவலைப்பட்டுள்ளார்.

ஆசியாவின் வல்லரசு இந்தியா. எனவே சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் இலங்கை இராணுவத் தளபாடங்களை கொள்வனவு செய்வதை இந்தியா விரும்பவில்லை. இலங்கைக்கு எது தேவையானாலும் எம்மிடமே வரவேண்டுமென நாராயணன் கூறியிருந்தார். இதன் மூலம் அவர் இலங்கைக்கு தேவையான சகல உதவிகளையும் வழங்க இந்தியா தயாராகயிருப்பதாக வெளிப்படுத்தியிருந்தார். வேறு இடம் செல்லாதீர்கள் எம்மிடம் வாருங்கள் நாங்கள் தருகிறோமென நாராயணர் கூறியதை இலங்கை கட்சிகள் புரிந்து கொள்ளவில்லை.

இந்தியா தமிழருக்கு சார்பாக செயற்படும் நாடென்ற தப்பான அபிப்பிராயத்தை கொண்டுள்ள இலங்கை பேரினவாத கட்சிகள் நாராயணனின் கருத்து தமிழருக்கு சார்பானவையென தவறாக எடை போட்டு விட்டனர். அதனால் தான் நாராயணனின் கருத்துக்கு எதிராக இலங்கை பாராளுமன்றத்திலும் எமது பிரசாரக் கூட்டங்களையும் நாராயணனுக்கு எதிராக கூச்சலிடுகின்றனர். இலங்கையின் இறைமையில் யாரும் தலையிட முடியாதென கூப்பாடு போடுகின்றன.

சிங்கள கடும் போக்கு கட்சியான ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, இலங்கையிலுள்ள இந்திய தூதுவருக்கு கண்டனக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில், இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதென மகிழ்ந்திருந்தோம். ஆனால், நாராயணனின் கருத்து எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டதென கூறி தனது சிந்திக்கும் திறனற்ற முட்டாள் தனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

ஜே.வி.பி.யினரைப் பொறுத்தவரை அவர்கள் எப்போதும் அமெரிக்கா இந்தியாவின் உதவிகளை இலங்கை பெறுவதை விரும்புவதில்லை. ஏனென்றால் இலங்கையில் தமது அதிகாரத்தை திணிக்க அமெரிக்காவும் இந்தியாவும் போட்டியிடுகிறார்களென்பது அவர்களின் குற்றச்சாட்டு. இலங்கையில் ஆதிக்கம் செலுத்த விரும்பாத சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் உதவிகளை பெற வேண்டுமென்பதே ஜே.வி.பி.யின் நிலைப்பாடு. இதனால் இலங்கையின் இறைமைக்கு ஆபத்தில்லையென்கிறார்கள்.

ஆனால், இந்தியாவோ, சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவிகளை வழங்கி இலங்கையின் ஆதரவை பெற்று விட்டால் அது இந்தியாவின் இறைமைக்கு ஆபத்தென நினைக்கின்றது. குறிப்பாக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஏ .உளவுப் பிரிவின் செயற்பாடுகளுக்கே இந்தியா அச்சப்படுகிறது. அதனாலேயே சீனா, பாகிஸ்தான் நாடுகளிடமிருந்து உதவிகளை பெறுவதை தாம் விரும்பவில்லையென கூறியுள்ளது.

இதனை வலியுறுத்தியே பாரதிய ஜனதாக் கட்சியின் துணைத் தலைவரும் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.` இலங்கையின் கிழக்குப் பகுதியில் பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஏ.யின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம். எனவே அயல்நாட்டுக் கொள்கைகளில் இந்தியா மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அத்துடன், இலங்கை பிரச்சினையில் இந்தியா உடனடியாக தலையிட வேண்டும்' என வலியுறுத்தியிருந்தார்.

இலங்கை பிரச்சினையில் நேரடியாக தலையிட வேண்டும். ஆனால், அது தமிழருக்கு சார்பானதாக இருக்கக் கூடாதென்ற நிலைப்பாட்டிலேயே மத்திய அரசும் உள்ளது. அதற்கு முன்னேற்பாடான நாட்டின் கைகளிலேயே தற்போது மத்திய அரசும் உளவுப் பிரிவுகளும் தீவிரமாக செயற்படத் தொடங்கியுள்ளன.

இதற்கு இலங்கை அமெரிக்காவுடன் செய்து கொண்ட `பெற்றுக் கொள்ளுதலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுதலும் 'என்ற பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. இராணுவ விடயம் தொடர்பாக இலங்கை அரசுடன் ஒப்பந்தமொன்றை செய்ய அமெரிக்கா கடந்த சில வருடங்களாகவே முயற்சித்து வந்தது. ஆனால், இந்தியாவின் அழுத்தங்கள் காரணமாக அமெரிக்காவின் முயற்சிக்கு இலங்கை இணங்கவில்லை.

ஆனால், இந்தியாவின் அழுத்தங்களையும் மீறி கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி அமெரிக்காவுடன் இலங்கை பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திட்டது. அமெரிக்க தரப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபேட் பிளக்கும் இலங்கை சார்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோதாபய ராஜபக்ஷவும் இந்த பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

அமெரிக்காவுடனான இலங்கையின் ஒப்பந்தம் இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்தியா, அமெரிக்கா இடையேயான அண்மைக்கால உறவு வளர்ச்சியினாலும் பொருளாதார மற்றும் உத்திகள் தொடர்பான கூட்டுச் செயற்பாடுகளினாலும் இந்த ஒப்பந்தத்துக்கான எதிர்ப்பை இந்தியா கைவிட்டுவிட்டதாக கூறி இந்தியா அரசியல் விமர்சகர்கள் தம்மை சமாதானப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால்,இந்த ஒப்பந்தத்தின் பின்னரே நாராயணனின் சீற்றம் வெளிப்பட்டதுடன் இலங்கையில் நேரடியாக தலையிடவும் முடிவு செய்யப்பட்டது.

அமெரிக்காவுடனான இலங்கையின் ஒப்பந்தத்தை தொடர்ந்தே வேறு எந்த நாடுகளிடமும் இலங்கை இராணுவ தளபாட உதவிகளைக் கேட்கக்கூடாது . எது தேவையானாலும் எம்மிடமே வர வேண்டுமென இந்தியா இலங்கைக்கு உத்தரவிட்டது. இலங்கைத் தமிழர் எக்கேடுகெட்டுப் போனாலும் பரவாயில்லை. இந்தியாவின் பாதுகாப்பே முக்கியமென்ற சுயநல முடிவுக்கு இந்தியா வந்தது.

தற்போது இந்தியாவின் உதவிகள் இலங்கைக்கு தாராளமாகக் கிடைக்கத் தொடங்கியுள்ளன. அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய இலங்கைப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நாம் கேட்பவற்றை எல்லாம் தந்து இந்தியா எமக்கு பேருதவி புரிகின்றது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில் இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்குவது தொடர்பில் இந்திய பாதுகாப்புத் துறையில் வெவ்வேறான கருத்துகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் மோசமடைந்து வரும் நிலைமை அதனால் இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதக நிலைமைகளை ஆராய்வதற்கான பாதுகாப்பு உயர்மட்ட கூட்டமொன்று கடந்த திங்கட்கிழமை டில்லியில் பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் எம்.கே.நாராயணன், அமைச்சரவை செயலர் பி.கே.சதுர்வேதி, இராணுவத் தளபதி ஜே.ஜே.சிங், கடற்படைத்தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா, விமானத்தளபதி எஸ். எச். மேயர் , பாதுகாப்பு அமைச்சு செயலர் சேகர் தத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்காலகட்டத்திலேயே இலங்கைக்கு இராணுவ உதவிகள் வழங்குவது தொடர்பில் வெவ்வேறான கருத்துகள் முன் வைக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களை இலங்கையரசுக்கு கொடுத்தால் அது தமிழகத்தில் அரசியல் ரீதியான உணர்வலைகளை அதிகரிக்குமென சுட்டிக் காட்டப்பட்டுள்ளதால் மத்திய அரசு குழப்பத்தில் உள்ளது.

ஆனாலும் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் உருவாக்கப்பட்ட வடக்கு, கிழக்கு இணைப்பை உயர் நீதிமன்ற உத்தரவுக்கமைய இலங்கையரசு மீண்டும் பிரித்தமை, தமிழர் மீதான படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கொழும்பிலிருந்து தமிழ் மக்கள் இலங்கையரசினால் வெளியேற்றப்பட்டமை போன்ற நிகழ்வுகளின் போது இந்திய அரசு காட்டி வரும் மௌனம் இலங்கையரசுக்கு ஆதரவாக இந்தியாவின் நிலைப்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இதேவேளை, வான் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை இலங்கை படைகளுக்கு வழங்குவதற்காக இந்திய வான் பாதுகாப்புத் தொடர்பான நிபுணர்கள் குழுவொன்று இலங்கை சென்றுள்ளது. அவர்களின் தேவைக்கென இரு எம்.ஐ.17 ரக ஹெலிகொப்டர்களையும் இந்தியா அனுப்பியுள்ளது. அத்துடன், ஏ.என். 32 ரக அன்ரனோவ் விமானமொன்றும் இந்தியாவிலிருந்து அடிக்கடி இலங்கை சென்று வருகிறது.

இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டில் இலங்கை இந்தியாவின் உதவிகள் வேண்டாமென நிராகரித்தாலும் வலுக்கட்டாயமாக வேனும் இராணுவ உதவிகளை வழங்கும் நிலைமையிலேயே இந்தியா உள்ளது.

இதற்காக தமிழகத்தின் களநிலைகளை மாற்றும் முயற்சியில் எம்.கே.நாராயணனும் உளவுத் துறையினரும் தீவிரமாக செயற்பட்டு வருவதனால் தமிழகத்தில் இன்னும் பல நாடகங்கள் அரங்கேறக்கூடும் ..

தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

விசேடமாகக் கவனிக்க வேண்டியது, சிறி லங்காவோடு தொடர்புடைய எல்லா நாடுகளும் தமிழர் வெளியேற்றத்தைக் கண்டித்தன. இந்தியா, ஜப்பான் இன்னும் அமைதி காக்கின்றன. தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என்று இன்னும் கெஞ்சும் பேர்வழிகள் இப்போதாவது உணர வேண்டும்.இந்தியா தமிழர்களின் எதிரி நாடு.

கொழும்பில் இருந்து தமிழர்களை வெளியேற்றியமையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் : இந்தியப் பிரதமர்

Written by Ellalan - Jun 10, 2007 at 06:04 PM

கொழும்பிலுள்ள விடுதிகளிலிருந்து ஆயுதமேந்திய பொலிஸாரினால் தமிழர்கள் வெளியேற்றப்பட்டது, அவர்களின் உரிமைகளை மீறும் செயலென இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களும் வாழ்கின்றார்கள், அவர்களும் அந்நாட்டு பிரஜைகள் என்று குறிப்பிட்டுள்ள இந்தியப் பிரதமர், அவர்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியமையை தாம் வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஜேர்மனியில் இடம்பெற்ற ஜி-8 மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் புதுடில்லியில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போது நேற்று சனிக்கிழமை இதனைத் கூறினார்.

கொழும்பில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டமை குறித்து வெளிநாட்டு தலைவர்களுடன் கலந்துரையாடியதாகவும், சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையில் தமிழர்களும் சுதந்திரமாகவும், சுயாதினமாகவும் வாழ்வதற்குரிய உரிமை உள்ளவர்கள், அவர்களை பலவந்தமாக கொழும்பில் இருந்து வெளியேற்றியது சட்டவிரோதமானது என்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.

இதனிடையே கொழும்பில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டதை கண்டித்துள்ள இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, இதன் மூலம் தமிழ்ர்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்குவதற்கு இலங்கை ஆட்சியாளர்கள் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கம் சிறிலங்காவுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள பாரதிய ஜனதாவின் துணைத் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு, அந்த ஆயுதங்களைக்கொண்டு சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களையே அழிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவித்துவித்துள்ள நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழர்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே அவர்களை அழிப்பதாக தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளை இந்தியா தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் இல்லாவிட்டால், எமது சகோதரர்களை நாம் இழக்க வேண்டியேற்படும் என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.

--sankathi--

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.