Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதையல் ஆசை; மந்திரவாதி பேச்சை கேட்டு சொந்த குழந்தைகளை பலி கொடுக்க துணிந்த சகோதரர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதையல் ஆசை; மந்திரவாதி பேச்சை கேட்டு சொந்த குழந்தைகளை பலி கொடுக்க துணிந்த சகோதரர்கள்

புதையல் ஆசை; மந்திரவாதி பேச்சை கேட்டு சொந்த குழந்தைகளை பலி கொடுக்க துணிந்த சகோதரர்கள்

 

அசாமில் மரத்தின் கீழ் தங்க புதையல் கிடைக்கும் என்ற மந்திரவாதியின் பேச்சை கேட்டு இரு சகோதரர்கள் சொந்த குழந்தைகளை பலி கொடுக்க துணிந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பதிவு: நவம்பர் 17,  2020 04:58 AM
கவுகாத்தி,

அசாமின் கவுகாத்தி நகரில் இருந்து கிழக்கே அமைந்த திமோவ்முக் கிராமத்தில் ஜமியூர் உசைன் மற்றும் சரிபுல் உசைன் என்ற இரு சகோதரர்கள் வசித்து வந்துள்ளனர்.  இவர்கள் இருவருக்கும் தலா 3 குழந்தைகள் உள்ளனர்.


சமீப நாட்களாக இவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கிராமவாசிகள் போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர்.  இதன்படி, போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த சகோதரர்களிடம் பெஜ் என்ற மந்திரவாதி, உங்களுடைய குழந்தைகளை பலி கொடுத்து விட்டால், உங்களது வீட்டில் உள்ள மாமரத்தின் கீழ் மறைந்துள்ள தங்க புதையலை கண்டறிவீர்கள் என கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பி அவர்கள் இருவரும் தங்களுடைய குழந்தைகளை அடைத்து வைத்துள்ளனர்.  இதனை அறிந்த கிராமத்தினர் சகோதரர்கள் இருவரையும், அவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

முறையாக புகார் அளிக்காமல், சாட்சிகள் இல்லாமல் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அந்த குடும்பத்தினரை தங்களது காவலின் கீழ் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அவர்கள், குழந்தைகளின் உடல்நலனுக்காக பெஜ்ஜிடம் ஆலோசனை கேட்டோம் என கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் மந்திரவாதியை பிடித்து விசாரணை மேற்கொண்டால் வழக்கில் தெளிவு வரும் என்ற சூழலில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/17045832/Treasure-desire-Brothers-who-dared-to-sacrifice-their.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மந்திரவாதியின் பேச்சை கேட்டு சூனியம் செய்ய 6 வயது சிறுமியை கொலை செய்து நுரையீரலை எடுத்த கும்பல்

மந்திரவாதியின் பேச்சை கேட்டு சூனியம் செய்ய 6 வயது சிறுமியை கொலை செய்து நுரையீரலை எடுத்த கும்பல்
 

புதுடெல்லி: 

உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் இறந்த நிலையில் 6 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாகவும் அவரது நுரையீரல் உடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. கட்டம்பூர் பகுதியிலிருந்து இந்த சிறுமி தீபாவளியன்று இரவு காணாமல் போய் உள்ளார்.


ஒரு பெண், குழந்தை பாக்கியத்தைப் பெற ஒரு சிறுமியின் நுரையீரல் கொண்டு சில சடங்குகள் செய்ய வேண்டும் என்ற மூட நம்பிக்கையால், நுரையீரல் சிறுமியின் உடலிலிருந்து அகற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான அங்குல் குரில் (20) மற்றும் பீரன் (31) ஆகியோர் முக்கிய குற்றவாளியும்  பரசுராம் குரிலிடம் சூனியம் செய்ய சிறிமியின் நுரையீரலை அளித்ததாக மூத்த போலீஸ் அதிகாரி பிரஜேஷ் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

பரசுராம் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பரசுராமின் மனைவிக்கும் தெரிந்திருந்தும் அவர் இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்ததால், அவரும் கைது செய்யப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பரசுராம் ஆரம்பத்தில் போலீசார் விசாரணையை திசை திருப்ப முயன்றார். ஆனால் தீவிர விசாரணையை எதிர்கொண்ட அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் 1999 இல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இதுவரை அவருக்கு குழந்தை பிறக்கவில்லை. அதைத் தொடர்ந்து அவர் தனது மருமகன் அன்குல் மற்றும் அவரது நண்பர் பீரன் ஆகியோரிடம் சிறுமியைக் கடத்தி, நுரையீரலை அகற்றும்படி வற்புறுத்தினார்.

அதிக அளவில் குடிபோதையில் இருந்த குற்றவாளிகள் சிறுமியைக் கடத்திச் சென்று கொலை செய்வதற்கு முன்பு அவரை பாலியல் பலாத்காரம்செய்தனர்.

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விரைவாக தண்டனை வழங்கப்படும் வகையில் இந்த வழக்கு விரைவான நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ .5 லட்சம் நிதி உதவி வழங்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/17124732/Horror-6yrold-girl-gangraped-lungs-taken-out-of-corpse.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாந்திரீகம் என்ற பெயரில் 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! - உ.பி அதிர்ச்சி

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை ( representational image )

`பரசுராம் தம்பதியினருக்கு 1999-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், அவர்களுக்கு இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தால், தங்கள் உறவினர்களான மாந்திரீகர்களின் உதவியை நாடியிருக்கிறார்கள்’ - கான்பூர் போலீஸ்

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசித்துவரும் பரசுராம் தம்பதியினருக்கு பல வருடங்களாக குழந்தை பாக்கியமில்லை. குழந்தை பாக்கியம் வேண்டி மாந்திரீக பூஜை ஒன்றை நடத்தத் திட்டமிட்டு, அதே பகுதியைச் சேர்ந்த மாந்திரீகர்களான அங்குல் மற்றும் பீரன் என்ற இருவரிடம் ஆயிரம் ருபாய் பணம் கொடுத்து பூஜை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

கடந்த சனிக்கிழமை (14.11.2020) அன்று அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை மாந்திரீகர்களான இருவரும் திட்டமிட்டு கடத்தி, பின்னர் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். பிறகு அந்தச் சிறுமியைக் கொடூரமான முறையில் கொலை செய்து, சிறுமியின் கல்லீரலை அறுத்தெடுத்து பரசுராமிடம் கொடுத்திருக்கிறார்கள்.

கொலை செய்யப்பட்ட சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.11.2020) காலை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய கான்பூர் மாவட்ட போலீஸார், அங்குல் மற்றும் பீரன் ஆகிய இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கான்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரியான பிரஜேஷ் ஸ்ரீவாஸ்தவா, ``7 வயது சிறுமிக்கு நடந்திருக்கும் இந்தக் கொடுமைச் சம்பவத்துக்குக் காரணமானவர்களைக் கைதுசெய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறோம். பரசுராம் தம்பதியருக்கு 1999-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், அவர்களுக்கு இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தால், தங்கள் உறவினர்களான மாந்திரீகர்களின் உதவியை நாடியிருக்கிறார்கள். மாந்திரீகர்களான இருவரும் குற்றச் செயலில் ஈடுபடும்போது, மதுபோதையில் இருந்திருக்கிறார்கள். அந்தச் சிறுமியின் கல்லீரல் அறுக்கப்பட்டதோடு, உடலின் மற்ற சில உறுப்புகளும் அறுக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது’’ என்றார்.

பாலியல் வன்கொடுமை
 
பாலியல் வன்கொடுமை Representational Image

``இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்” என்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.

 

https://www.vikatan.com/news/crime/up-7-year-old-child-gang-raped-and-killed

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற மறுத்த 15 வயது சிறுமி எரித்துக் கொலை

பாலியல் வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற மறுத்த 15 வயது சிறுமி எரித்துக் கொலை

 

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சர் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி  15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது அந்த சிறுமியின் பெற்றோர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், அதே ஊரில் பழத்தோட்டத்தின் பராமரிப்பாளராக வேலை செய்து வந்த ஹரீஷ் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.


இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரின் உறவினர்கள், வழக்கை திரும்ப பெறுமாறு புகார் அளித்த சிறுமியின் குடும்பத்தை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று காலை ஹரீஷின் உறவினர்கள் 5 பேர், அந்த சிறுமியின் வீட்டிற்கு வந்து வழக்கை திரும்ப பெறுமாறு மிரட்டியுள்ளனர். இதற்கு அவள் மறுப்பு தெரிவிக்கவே, அவர்கள் கொண்டு வந்த பெட்ரோலை அந்த சிறுமியின் மீதி ஊற்றி கொளுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த போது பெற்றோர் வீட்டில் இல்லாததால், அருகில் இருந்தவர்கள் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து தீயை அணைத்துள்ளனர். உடலில் 65 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருப்பினும் இறப்பதற்கு முன்பாக அவர் அளித்த வாக்குமூலத்தில் சஞ்சய் என்ற நபரை சுட்டிக்காட்டியுள்ளார். 

வழக்கை திரும்ப பெறாததால் தனது மகளை எரித்து கொலை செய்தவர்கள் மீது, உயிரிழந்த பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/18164534/15yearold-girl-burnt-to-death-after-refusing-to-withdraw.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.