Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தில்லையில் மீண்டும் தமிழுக்குத் தாழ்ப்பாள்

Featured Replies

சிதம்பரம் நடராசன் கோயிலில் திருவாசகம் பாடலாம் என்று இந்து அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த ஆணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்து விட்டது.

இந்து அறநிலையத் துறை ஆணையர் திரு. பிச்சாண்டி அவர்கள் விசாரணை செய்து, நடராசன் கோயிலில் தேவாரம், திருவாசகம் பாடுவதற்கு அனுமதியளித்துள்ளார். நீதிமன்றத்தின் பழைய தீர்ப்பினை எடுத்துக்காட்டியும், சம்பிரதாயங்களை மேற்கோள்காட்டியும் இந்து அற நிலையத்துறை ஆணையர் அத்தகைய ஆணை ஒன்றினைப் பிறப்பித்தார்.

ஆறுமுகசாமி என்ற சிவ பக்தர் (வயது 73) இந்தப் பிரச்சினைக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டும் வருகிறார். அவரை தில்லை நடராசன் கோயில் தீட்சதர்கள் அடித்து கையையும் முறித்தனர். அதுபற்றி காவல்துறையில் அவர் புகார் கொடுத்தும், தீட்சதர்களின் செல்வாக்குக்கு உட்பட்ட காவல்துறை, அதனைக் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் போராடினார். நீதிமன்றம் சென்றார். நீதிமன்றத்தின் ஆணைப்படி விசாரணையை இந்த அறநிலையத் துறை ஆணையர் தக்க முறையில் நடத்தி ஆணை பிறப்பித்த பிறகு உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

தமிழ்நாட்டில் தமிழர்களால் கட்டப்பட்ட ஒரு கோயிலில் தெய்வத் தமிழ் என்று பக்தர்கள் ஏற்றுக் கொள்ளும், மொழியில், தமிழ்க் குரவர்கள் என்று போற்றப்படும் அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்களால் பாடப்பட்ட பாடல்களைப் பாடக் கூடாது என்று தடை விதிப்பது எந்த வகையில் சரி என்றே தெரியவில்லை!

பக்தியின் பெயரால் தமிழர்களைக் கீழ் ஜாதியாகவும், தமிழ்மொழியை நீசப் பாஷையாகவும் கருதும் மனப் பான்மை 2007-லும் தொடர்கிறதா என்ற கேள்விதான் எழுகிறது.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது சட்டப்படியாக ஆக்கப்பட்டுள்ள ஒரு நிலையில், கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தலாம் என்று அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ள ஒரு கால கட்டத்தில், சிதம்பரம் கோயிலுக்கு மட்டும் தனி சட்டமும், தனி அரசாட்சியும் இருக்கிறதோ!

பக்தர்களாக இருக்கக்கூடிய தமிழர்கள் இதில் தலையிட வேண்டாமா? தமிழ்ப் புலவர்கள் கொந்தளித்துக் கிளம்ப வேண்டாமா? எதிலும் தமிழ், எங்கும் தமிழ் என்ற முழக்கம் தமிழ்நாட்டில் கேட்பது வரவேற்கத்தக்கதே! எங்கும் தமிழ் - ஆனால் கோயிலில் மட்டும் விதி விலக்கு என்ற நிலையை எடுத்துள்ளார்களா? பக்தி என்று வந்துவிட்டால் தமிழ் உணர்ச்சியும், இனவுணர்ச்சியும் பதுங்கு குழிகளைத் தேடி விடுமா? ஒரே ஒரு ஆறுமுக சாமிக்குத் தோன்றிய உணர்ச்சி மற்ற பக்தர்களுக்கு வராமல் போன மர்மம் என்ன?

இந்தப் பிரச்சினையில் தில்லை தீட்சதப் பார்ப்பனர்களின் மனப்பான்மை எத்தகையது? பக்தி என்றாலும்கூட அதில் ஜாதி மனப்பான்மையுடனும் தமிழ் துவேஷத்துடனும் நடந்துகொள்வதைப் புரிந்து கொள்ள முடியவில்லையா?

பார்ப்பனர்கள் இப்படியெல்லாம் நடந்துகொள்வது துவேஷம் இல்லையாம்! இப்படி அவர்கள் நடந்து கொள்வதை நாம் சுட்டிக் காட்டினால் மட்டும் அது துவேஷப் பிரச்சாரமாம். ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் பார்ப்பனர்களின் இந்தப் பம்மாத்து வேலையைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பார்ப்பனர்கள் முன்பு போல் இல்லை; எவ்வளவோ திருந்திவிட்டார்கள் என்று வெண்டைக்காய் விளக்கெண்ணெய் வியாக்கியானம் செய்யும் தமிழர்களே, காலங் கடந்தாவது, தில்லை நடராசன் கோயில் தீட்சதர்களைப் பார்த்தாவது புரிந்து கொள்ளுங்கள்.தொடக்க முதலே தில்லை தீட்சதர்களுக்குப் பாதுகாப்பு வளையமாக நீதிமன்றங்களே இருந்து வருகின்றன என்பதையும் கவனிக்கத் தவறக் கூடாது

http://kuppaikal.blogspot.com/2007/06/blog-post_3810.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.