Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையில் பதற்றம்- பொலீசார் குவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையில் பதற்றம்- பொலீசார் குவிப்பு

 
1-49-696x387.jpg
 54 Views

மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ஆண்டிற்கான பாதீட்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான சபை அமர்வு நடைபெற இருந்த நிலையில் அமைதியற்ற சூழ் ஏற்பட்டதன் காரணமாக சபை கால தாமதமின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள வாழைச்சேனை பிரதேச சபையானது அடுத்த ஆண்டிற்கான பாதீட்டு அறிக்கை கடந்த வாரம் சமர்பிக்கப்படவிருந்த நிலையில் சபை தவிசாளரினால் இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை தவிசாளர் சோபா ஜெயரஞ்சித்தின் தலைமையில் இன்று மீண்டும் சபை அமர்வு கூடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பதாக அமைதியற்ற சூழ் நிலை அங்கு உருவானது. சபை கூடுவதற்கு முன்பதாக அமைதியற்ற சூழ் நிலை அங்கு உருவானதால் பொலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தனர்.

சபை கூடுவதற்கு முன்பதாக சபை மண்டபத்தை விட்டு தவிசாளர் வெளியில் சென்றிருந்த வேளை நுழை வாயிலில் உப தவிசாளர் எதிர் கொண்டதாகவும் இதனை அடுத்து அந்த இடத்தில் அமைதியற்ற சூழ் நிலை இருவருக்கிடையில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சபை வளாகத்தில் அமைதியற்ற சூழ் நிலை இடம்பெ
பொலிசார் அமைதியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். குறித்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

இதேவேளை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் இச் சம்பவம் தொடர்பாக தெரிவித்ததாவது, இன்று சபையில் நடந்த சம்பவம் கசப்பான சம்பவம் என்றும் 15-16 உறுப்பினர்கள் சபையில் இருந்த போது தவிசாளர் தொலை பேசி அழைப்பு வந்து தொடர்பாடல் மேற்கொள்ள சபையினை விட்டு வெளியேறினார்.

அவ் வேளை உப தவிசாளர் கடும் வேகத்தோடு சபையினுள் உள் நுழைந்ததை அவதானித்தேன். தவிசாளரை தாக்கிவிட்டு வந்ததையும் மேலாடை கிழிந்திருந்ததையும் அவதானித்தேன் என்றார்.

இச் சம்பவம் தொடர்பாக தவிசாளர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து ஊடகங்களுக்கு இவ்வாறு தமது கருத்தினை உப தவிசாளர் தர்மலிங்கம் யசோதரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

தமது ஆசனத்தையும் ஊழல் மோசடியையும் தவீர்ப்பதற்கு தவிசாளர் இவ்வாறு நடந்து இருந்திருக்கலாம் என்றார். தவிசாளர் சேபா ஜெயரஞ்சித்தினால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தமது மனைவி பிள்ளைகள் அச்சத்துடன் இருப்பதாகவும் தமக்குரிய பாதுகாப்பு வேண்டி பொலிசாரின் உதவியினை நாடவேண்டியுள்ளதாக உப தவிசாளர் கருத்து தெரிவித்தார்.

இது குறித்து தவிசாளரை தொடர்பு கொண்டபோது தான் சிகிச்சை பெற்று வருவதாகவும் கருத்து கூறுவதனை தவீர்த்துக் கொண்டார். வாழைச்சேனை பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.  மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் நேரில் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

 

https://www.ilakku.org/வாழைச்சேனை-கோறளைப்பற்று/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளருக்கு  மனநோய்  -இரா.சாணக்கியன்

01-7-1-696x406.jpg
 28 Views

வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளருக்கு  மனநோய்  உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்தரப்பினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாத நிலையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

01-8.jpg  

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் ஒத்தி வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து இரண்டு சபை உறுப்பினர் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் உள்ள நிலையில், எதிர்தரப்பினர் சபையை நடாத்தக் கூடாது என்று சபை மண்டப நுழைவாயிலை மூடி போராட்டம் நடாத்தினார்கள்.

இதன்போது வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் திருமதி.ப.லிங்கேஸ்வரன் குறித்த இடத்திற்கு வருகை தந்து உறுப்பினர்களிடம் கலந்துரையாடிய சமயத்தில் சம்பவ இடத்தில் திடீரென மயங்கி விழுந்தார். பின் அவரை உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

01-3.jpg  

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சபை செயலாளரை  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த அவர், “ வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளருக்கு தொடர்ச்சியாக வரக்கூடிய நோய் உள்ளதாக வைத்தியா்  கூறினார். என்னைப் பொறுத்தவரையில் இவருக்கு மனநோய் என்றுதான் பார்க்க வேண்டும். ஏனெனில் இவரின் செயற்பாடு மனநோயாளி போன்று காணப்படுகின்றது.

2008ம் ஆண்டுக்கு முன்னர் எவ்வாறு மக்களை அச்சுறுத்தி அரசியல் செய்தார்களோ அதேபோன்று மறு உருவம் எடுத்துள்ளதை இன்றைய வாழைச்சேனை பிரதேச சபை வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் நிரூபித்துள்ளது.” என்றார்.

 

https://www.ilakku.org/வாழைச்சேனை-பிரதேச-சபை-தவ/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதவுகள் உடைக்கப்பட்டு வாழைச்சேனை வரவு – செலவுத்திட்டம் மீது வாக்களிப்பு – ஆளுங்கட்சி மட்டும் வாக்களித்தது; மயங்கி விழுந்த செயலாளர்

 

v-09.jpgவாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்தரப்பினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாத நிலையில் இன்று வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இரண்டு சபை உறுப்பினர் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் உள்ள நிலையில் எதிர்தரப்பினர் சபையை நடாத்தக் கூடாது என்று சபை மண்டப நுழைவாயிலை மூடி போராட்டம் நடாத்தினார்கள்.

v-08.jpgஇதன்போது வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் திருமதி.ப.லிங்கேஸ்வரன் குறித்த இடத்திற்கு வருகை தந்து உறுப்பினர்களிடம் கலந்துரையாடிய சமயத்தில் சம்பவ இடத்தில் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன் பிற்பாடு குறித்த இடத்திற்கு வருகை தந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடலை நடாத்தியதுடன், உள்ளே வருவதற்கு நுழைவாயிலை திறக்குமாறு கோரியதற்கு இணங்க திறக்கப்படவில்லை.

v-06.jpgஅத்தோடு சபையின் தவிசாளர் சபை மண்டபத்திற்குள் உள்ள தனது அறையில் வெளியே வரதா வண்ணம் இருந்தார். இதனை தொடர்ந்து சபை உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் ஆகியோருக்கு இடையில் பல்வேறு காரசாரமான சம்பவங்கள், வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக பொலிஸ் கலகம் அடக்கும் படையினர் குவிக்கப்பட்டு கூடி நின்றவர்களை கலைத்தனர்.

பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சபை உறுப்பினர்கள் சபை மண்டபத்தினுள் இருந்து வெளியில் வந்து சபை மண்டப நுழைவாயிலை உடைத்த நிலையில் வெளியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் மற்றும் கட்சி ஆதரவாளர்களை உள்ளே வரவழைத்ததோடு, தவிசாளரின் அறையினை உடைத்து தவிசாளரையும் வெளியில் சபை உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.

அதன்பிற்பாடு எதிர்கட்சி உறுப்பினர்கள் சபையை நடாத்த விடாது தடுத்த போது இரண்டு சபை உறுப்பினர்களை தாக்கிவாறு உள்ளே சென்று ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பதினொரு பேருடன் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதில் எதிர்கட்சி உறுப்பினர்கள் எவரும் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆறு உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சி ஒரு உறுப்பினர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு உறுப்பினர், சுயேட்சைக்குழு (கருணா கட்சி) ஒரு உறுப்பினருமாக பதினொரு பேர் ஆதரவு வழங்கினார்கள்.

அத்தோடு வாழைச்சேனை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் த.யசோதரன், சபை உறுப்பினர் எம்.வாஸ்தீன் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதுடன், ஊடகங்களுக்கு அனுமதி வழங்காத வகையில் இன்று வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

 

https://thinakkural.lk/article/97247

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.