Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகனங்களையெல்லாம் மறித்து ஒரு கலவரம் கூட உருவாகுவதற்கு வாய்ப்பிருக்கின்றது: இரா. சாணக்கியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

வாகனங்களையெல்லாம் மறித்து ஒரு கலவரம் கூட உருவாகுவதற்கு வாய்ப்பிருக்கின்றது: இரா. சாணக்கியன்

  • December 14, 20201:26 am

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பிரதேச சபைகளுக்குள் அத்துமீறி நுழைவதும், கதவை உடைப்பதும் என அராஜகமான வேலைகளில் ஈடுபட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மோசமான நிலைமையை உருவாக்கி வருகின்றார்.

அவர் 2009ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதியில் இன்னும் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,
மயிலத்தமடு,மாதவனை பகுதிகளில் இருக்கின்ற சூழலை பார்க்கின்றபோது மிகவும் வேதனையாக இருக்கின்றது. தொடர்ச்சியாக நாங்கள் மகாவலி அதிகாரசபை அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அவர்களுக்கும் நாங்கள் சொன்ன விடயம் என்னவென்றால் இவ்வாறான நிலைமை ஏற்படப்போகின்றது என்பதாகும்.

அதனை சரியான முறையில் செவிமடுக்காது அவர்கள் செய்த சில காரியங்களினால் மிக மோசமான நிலைமை இந்தப் பகுதிகளில் உருவாகியிருக்கின்றது.

இங்கு சோளப்பயிர்ச் செய்கையை மேற்கொண்டுள்ள சிங்கள விவசாயிகள் மாடுகளை தடுக்க முடியாத நிலையில் இருக்கின்ற அதேவேளை, கால்நடை வளர்ப்பாளர்கள் சோளன் பயிர் செய்த சிங்கள விவசாயிகளிடமிருந்து தங்களது கால்நடைகளை பாதுகாப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த அரசாங்கத்தில் ஒரு ஒழுங்கான திட்டமிடல் இல்லாமல் இந்தப் பிரதேசங்களில் இனரீதியாக வாழும் மக்களின் எண்ணிக்கையை மாற்றுவதற்காக செய்கின்ற முயற்சியின் காரணத்தினால் இன்று மூவின மக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இந்தப் பிரதேசத்தில் மூவினத்தைச் சேர்ந்த பண்ணையாளர்களும் இருக்கின்றார்கள். இந்த அரசாங்கமானது மக்களின் கவனத்தை நாட்டிலிருக்கின்ற பொருளாதார ரீதியான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பி இவ்வாறான திட்டங்களை செய்வதற்கு முயற்சி எடுத்த காரணத்தினால் இன்று அனைவரும் மிகவும் கஷ்டமான சூழலுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இது தொடர்பில் நாங்கள் ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் ஒத்திவைப்புப் பிரேரணையொன்றை முன்மொழிந்த போது இராஜாங்க அமைச்சர் மூன்று மாத காலத்திற்குள் அவர்களை அங்கிருந்து அகற்றுவதாக சொல்லியிருந்தார்.

இந்தப் பிரதேச மக்களுக்கும் இவ்விடயம் சொல்லப்பட்டதாக அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். உண்மையில் மழையை நம்பி விவசாயம் செய்பவர்கள் மூன்று மாத காலத்தின் பின்னர் சென்றுவிடுவார்கள்.
இந்த அரசாங்கமானது தங்களுடைய இயலாமையை மறைப்பதற்காக செய்கின்ற சில நடவடிக்கைகள் தான் இவை.

மேய்ச்சற்தரைக் காணிக்குள் சோளன் பயிர்ச்செய்கை மேற்கொண்டால் என்ன நடக்கும்? அதனை அறிந்தும் எங்களுடைய நிலங்களை அபகரிப்பு செய்வதால் என்ன நடக்கும். இந்த நாட்டில் மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி தங்களுடைய அரசை தக்கவைக்கின்ற ஒரு முயற்சியாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம்.

குழுநிலை விவாதத்தின் போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சேர்ந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சென்று எங்களுடைய மாவட்டத்தின் பிரச்சினைகளை தொடர்ச்சியாக அங்கு கதைத்திருந்தோம்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் அந்தக் கூட்டங்களுக்கு வரவேயில்லை. அடுத்த வருடம் இந்த மாவட்டத்தில் எந்த அபிவிருத்தியும் நடக்காது. ஏனென்றால் மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் கூட்டத்திற்கு வரவேயில்லை. அவர் பிரதேச சபைகளுக்குள் அத்துமீறி நுழைவதும் கதவை உடைப்பதும் என அராஜகமான வேலைகளில் ஈடுபட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மோசமான நிலைமையை உருவாக்கி வருகின்றார்.

2009ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதியில் அவர் இருக்கின்றார். மற்றைய இராஜாங்க அமைச்சர் பாவம். அவருக்கு எந்தப் பதவியையும் கொடுக்கவில்லை போலும்.மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் வெளியில் வந்த பிறகு இராஜாங்க அமைச்சரின் பதவிகள் இல்லாமல் போனதா என்ற சந்தேகம் இருக்கின்றது.

அவர்களின் நிலைமையை பார்த்தால் சிரிப்புத்தான் வருகின்றது. தமிழ் மக்கள் பாவம்.
கொவிட் கொவிட் என்று கூறி எந்த ஆர்ப்பாட்டங்களையும் நடத்தவிடாமல் மக்களை தனிமைப்படுத்துவோம் என்று கூறி பயமுறுத்தி வைத்திருப்பதன் மூலம் அரசாங்கம் இம்முறை தப்பியிருக்கின்றது. ஆனால் அடுத்த முறை மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுத்தலைவர் கூட மாவட்டத்தை விட்டு வெளியேற முடியாதளவிற்கு மக்கள் செயற்படுவார்கள்.

வாகனங்களையெல்லாம் மறித்து ஒரு கலவரம் கூட உருவாகுவதற்கு வாய்ப்பிருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

https://www.meenagam.com/வாகனங்களையெல்லாம்-மறித்/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.