Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் பாவனைக்கு வந்து விட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் பாவனைக்கு வந்து விட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி

  • குரு அரவிந்தன்

kuru-aravinthan.jpg

தினக்குரல் வாசகர்களுக்கு முதற்கண் இனிய புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். புத்தாண்டு எமக்கு நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையின் அடையாளமாக கொரோனா வைரசுக்கான தடுப்பூசி உலகம் முழுவதும் அறிமுகமாகின்றது. இந்த வருடம் அதாவது 2020 ஆம் ஆண்டு கோவிட் -19 தாக்கம் காரரணமாக ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். அதில் இருந்து மீள்வதற்கான மருந்துகள், தடுப்பூசிகள் நடைமுறைக்கு வரத் தொடங்கிவிட்டன. வெகுவிரைவில் பழைய நிலைக்குத் திரும்பி விடலாம் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கின்றது. கொரோனா வைரஸிடம் இருந்து இப்போது தப்பி விட்டாலும், இக்கட்டான பொருளாதார சூழலில் இருந்து வெளிவர இன்னும் சிறிது காலம் எடுக்கலாம். மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்ற நிலைக்கு எல்லோரும் தள்ளப்படுவோம். அதையும் சமாளித்து அதில் வெற்றி பெற்றால்தான் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வாய்ப்புண்டு. பொறுமையோடு இருந்தால் காலமும் கடந்து போகும்.

கனடாவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பமாகிவிட்டது. முதற்கட்டமாக முதியோர் இல்லங்களில் இருப்பவர்களுக்கும், களத்தில் நின்று பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படுகின்றது. பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியே இப்போது பாவிக்கப்படுகின்றது. கனடாவின் அவசர தேவைக்கு இது போதாது என்பதால் அமெரிக்காவின் மொடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ள ஹெல்த் கனடா ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்காவில் இந்தத் தடுப்பூசி பாவனைக்கு வந்துவிட்டது. சுகாதார நிறுவனத்தின் அனுமதி கிடைத்ததும் மொடர்னா தடுப்பூசிகளும் கனடாவில் பாவனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. இதில் முதற்கட்டமாக 168,000 குப்பி மருந்து டிசெம்பர் மாதம் கிடைக்கும். மிகுதி 2 மில்லியன் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற் கிடையில் கிடைக்கும். அடுத்த கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், அதன் பின் 40 வயதிற்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி வழங்கப்படும். அதற்கு இன்னும் 4 மாதங்களாவது எடுக்கலாம். அப்படி வழங்கபபப்படும் போது தானும் மக்கள் முன்னிலையில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வேன் என்று சென்ற வாரம் 49 வது வயதில் காலடி வைத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். பிரதமரும், மனைவி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுத் தனிமைப் படுத்தப்பட்டு, குணம் அடைந்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

0-1.jpg
இந்த தடுப்பூசியால் ஏற்படும் நன்மைகள் இன்னும் சரியாக தெளிவு படுத்தப் படவில்லை. பைசர் மற்றும் மொடர்னா நிறுவனங்களின் தடுப்பூசிகள்தான் முதலில் பாவனைக்கு வரஇருக்கின்றன. ஐனவரி மாத இறுதிக்குள் 1.2 மில்லியன் தடுப்பூசி மருந்துகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் பைசர் நிறுவனத்தினம் இருந்து 20 மில்லியன் தடுப்பூசி மருந்துகளும், மொடர்னா நிறுவனத்திடம் இருந்து 40 மில்லியன் தடுப்பூசிகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். தடுப்பூசி போட்ட ஒருவரிடம் இருந்து மற்றவருக்குத் தொற்றுமா, அல்லது குறிக்கப்பட்ட கால எல்லையின் பின் மீண்டும் இந்தக் கொரோனா வைரஸ் ஒருவருக்குத் தொற்றுமா என்பது போன்ற கேள்விகளுக்குச் சரியான பதில் பெறவேண்டுமானால், நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் கோவிட் – 19 தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளப் பல நாடுகள் காத்திருக்கின்றன. காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்பதால் யாரும் இப்போது சொல்லத் தயாராக இல்லை. எனவே தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், கைகளைச் சுத்தமாகக் கழுவி, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது நல்லது. வெளியே பொது இடங்களுக்குச் செல்லும் போது, முகக்கவசம் அணிவதும் நல்லது. நிரந்தரமாக இதற்கு ஒரு தீர்வு காணும்வரை எங்களை மட்டுமல்ல, சமூகத்தையும் பாதுகாப்பது எமது கடமையாகும்.

இங்கிலாந்தில் புதிய வகையான வைரஸ் நோய் பரவத் தொடங்கி இருப்பதால் கனடா இங்கிலாந்துடனான விமானப் போக்குவரத்தை உடனடியாக நிறுத்தி உள்ளது. எப்படிச் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதோ அதே போல இங்கிலாந்தில் இருந்தும் இந்தப் புதிய வைரஸ் பரவுவதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு. இதனால்தான் அனேகமான நாடுகள் உடனடியாகவே இங்கிலாந்துடனான விமானப் போக்குவரத்து தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டன. இது மட்டுமல்ல, தரைவழிப் பாதையையும் சில நாடுகள் தடைசெய்து விட்டன. இந்தியாவும் இங்கிலாந்துடனான விமான சேவைகளை 22 ஆம் திகதி இரவுடன் தடைசெய்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து வேறு வழியாக இந்தியாவிற்குள் வருபவர்களையும் தடை செய்துள்ளது. ஒரு காலத்தில் உலகையே கட்டி ஆண்ட, சூரியன் மறையாத சாம்ராச்சியமாக இருந்த இங்கிலாந்தை இன்று வைரஸின் மிரட்டல் காரணமாக எல்லா நாடுகளும் சேர்ந்து தனிமைப்படுத்திவிட்டன. பொதுமக்கள் ஒத்துழைத்தால் அல்லாமல், வைரஸை ஒழிப்பது மிகவும் கடினமானது. இப்படியே போனால் யார் உயிரோடு இருக்கிறார்கள், யார் எம்மைவிட்டுப் பிரிந்து விட்டார்கள் என்பது கூடத் தெரியாமல் போய்விடலாம். புதிய வைரஸ் பரவத் தொடங்கினால் அதற்குத் தடுப்பூசி கண்டு பிடிக்கும் வரையும் மீண்டும் திண்டாட்டம்தான். அப்படிப் பரவினால் மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதையாகப் போய்விடும்.

கொரோனா வைரஸ் காரணமாக ஓன்ராறியோ மாகாணத்தில் டிசெம்பர் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட இருக்கின்றது. சுமார் இரண்டு வாரங்கள்வரை வடஒன்ராறியோவுக்கும், நான்கு வாரங்கள் வரை தென் ஒன்ராறியோவுக்கும் இது நீடிக்கும். பண்டிகைக் காலத்தில் இன்னும் பரவுவதற்கான சந்தர்ப்பத்தைத் தவிர்ப்பதற்காக வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது. இக்காலத்தில் வணிகம் தடைப்படுவதால் சிறு வணிக உரிமையாளர்களுக்கு மானியாகப் பண உதவி வழங்கப்படும் என ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் அறிவித்திருந்தார். விண்ணப்பப் பத்திரத்தின் விபரங்களைப் பொறுத்து, குறைந்தபட்சம் 10,000 டொலர் தொடக்கம் 20,000 டொலர் வரை மானியம் கிடைக்கும் என்பதையும் அவர் தெரிவித்தார். 2021 அதாவது அடுத்த வருடம் ஐனவரி மாதத்தின் பின் இதுபற்றி மேலதிக விபரங்கள் வெளியிடப்படும்.

0-2.jpgகனடாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாகப் பரவுவது கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 7,519 போர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 104 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். கனடாவில் இந்த வாரம் வரை கொரோன வைரஸ் காரணமாக 521,509 பேர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களில் இதுவரை 14,425 பேர் மரணமாகி இருக்கிறார்கள். 431,561 பேர் இதுவரை குணமடைந்து இருக்கிறார்கள். இந்த மாதம் உலக நாடுகளின் பட்டியலில் 26 வது இடத்தில் கனடா இருக்கின்றது. கியூபெக்கில் 181,276 பேரும், ஒன்ராறியோவில் 160,255 பேரும், அல்பேர்டாவில் 72,480 பேரும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 47,510 பேரும், சஸ்கச்சுவான் 13,942 பேரும், மனிற்ரோபாவில் 23,180 பேரும், நோவாஸ்கோஷியாவில் 1,454 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை கியூபெக்கில் 7,794 பேரும், ஒன்ராறியோவில் 4,188 பேரும், அல்பேர்டாவில் 871 பேரும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 777 பேரும், சஸ்கச்சுவான் 125 பேரும், மனிற்ரோபாவில் 590 பேரும், நோவாஸ்கோஷியாவில் 65 பேரும் மரணம் அடைந்திருக்கிறார்கள். நோவாஸ்கோஷியாவில் கடந்த மாதம் மரணம் எதுவும் சம்பவிக்கவில்லை. கனடா முழுவதும் 13,254,556 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். கியூபெக்கில் 2,426,005 பேரும், ஒன்ராறியோவில் 7,226,990 பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். ஒன்ராறியோ அரசாங்கம் அவசரகால உத்தரவுகளை ஐனவரி மாதம் 20 ஆம் திகதிவரை நீடித்திருக்கின்றது. கனடா – அமெரிக்க எல்லைகள் ஐனவரி மாதம் 21 ஆம் திகதி வரை பொதுமக்கள் பாவனைக்கு மூடப்பட்டிருக்கும். அவசர தேவை காரணமாக வருபவர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப் படுவார்கள்.

அமெரிக்காவில் மூன்று மாதங்களின் முன் கொரோன வைரஸ் காரணமாக 7,447,282 பேர் பாதிக்கப் பட்டிருந்தார்கள். இந்த வாரம் அதாவது டிசெம்பர் மாதம் 24 ஆம் திகதி கொரோன வைரஸ் காரணமாக 18,917,152 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மூன்று மாதங்களின் முன் கொரோன வைரஸ் காரணமாக இவர்களில் 211,740 பேர் மரணமாகி இருந்தார்கள். பாதிக்கப்பட்டவர்களில் இந்த வாரம்வரை 334,218 பேர் மரணமாகி இருக்கிறார்கள். அதாவது கொரோலனா வைரஸால் அமெரிக்காவில் சராசரி 33,420 பேர் ஒவ்வொரு மாதமும் மரணத்தைச் சந்தித்திருக்கிறார்கள். இது வெறும் எண்ணிக்கை அல்ல, கொரோனா வைரஸை அலட்சியப் படுத்தும் ஒவ்வொருவருக்கும் இது ஒரு பாடமாக அமைய வேண்டும். மூன்று மாதங்களின் முன் கொரோன வைரஸ் பாதிப்பில் இருந்து 4,699,706 பேர் குணமடைந்து இருந்தார்கள். இந்த வாரம் வரை 11,101,866 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். அமெரிக்காவில் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட இடங்களில் கலிபோர்ணியாவில் 2,010,813, ரெக்ஸாஸில் 1,656,659, புளோரிடாவில் 1,234,399 பேர்; பாதிக்கப் பட்டிருக்கின்றார்கள். நியூயோர்க், இல்லிநோய்ஸ், ஒஹியோ, ஜோர்ஜியா, பென்ஸில்வேர்ணியா, ரெனேஸி, மிச்சிக்கன் ஆகிய ஏழு மாகாணங்களில் ஐந்து லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸால் ஏற்பட்ட மரணங்களை எடுத்துப் பார்த்தால் நியூயோர்க் மாகாணத்தில் தான் அதிக மரணம் ஏற்பட்டிருக்கின்றது. இதுவரை நியூயோர்க்கில் 36,883 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். அடுத்து ரெக்ஸாஸ், கலிபோர்ணியா ஆகியன மாகாணங்கள் இருக்கின்றன. உலகிலே அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் மொடர்னா மருந்து நிறுவனத்தின் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் இம்மாதம் பாவனைக்கு வந்து விட்டன.

 

இந்தியாவில் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை டிசெம்பர் மாதம் 24 ஆம் திகதி 10,123,544 ஆக அதிகரித்து இருக்கின்றது. மரணமானவர்கள் எண்ணிக்கை இந்த டிசெம்பர் மாதம் 24 ஆம் திகதி 146,778 ஆக மாறியிருக்கின்றது. இதுவரை குணமடைந்தவர்கள் தொகை 9,692,061 ஆக இருக்கின்றது. தற்போதைய நிலையில் மகாராஷ்ட்ரா 1,902,458 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் முதலாவது இடத்திலும், கர்நாடகா 911,382 பேராக மாறி இரண்டாவது இடத்திலும், ஆந்திரபிரதேசம் 879,339 பேராக மாறி மூன்றாவது இடத்திலும், தமிழ்நாடு 809,014 பேராகமாறி நாலாவது இடத்திலும் இருக்கின்றன. இந்த மாகாணங்களைவிட டெல்கி, கேரளா, உத்திரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகியனவும் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்ப்பட்டிருக்கின்றன.

இதுவரை உலகத்தில் மொத்தமாக 79,051,432 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். உலகில் கொரோனா வைரஸால் மொத்தமாக 1,737,518 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். ஆகக்கூடிய மரணங்களாக அமெரிக்காவில் 334,218 பேரும், பிரேசில் நாட்டில் 189,264 பேரும், இந்தியாவில் 146,778 பேரும், மெக்ஸிகோவில் 120,311 பேரும் மரணமடைந்திருக்கிறார்கள். இதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து 55,645,258 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். அமெரிக்கா, இந்தியா, பிறேசில், ரஸ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், ஆஜன்ரைனா, கொலம்பியா, ஜேர்மனி, மெக்ஸிகோ, போலாந்து, ஈரான் ஆகிய 14 நாடுகளிலும் பத்து லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். உலக நாடுகளின் பட்டியலில் 80 வது இடத்தில் இருக்கும், கொரோனா வைரஸ் ஆரம்பமான நாடான சீனாவில் மொத்தமாக 86,899 பேர்தான் நோய்வாய்ப் பட்டிருக்கிறார்கள்.

✂️😄

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.