Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனித உரிமை மீறல்களுக்கு அரசே பொறுப்பு: நான்கு மதத் தலைவர்களும் கூட்டாக வலியுறுத்தல்.

Featured Replies

மனித உரிமை மீறல்களுக்கு அரசே பொறுப்பு - நான்கு மதத் தலைவர்களும் கூட்டாக வலியுறுத்தல்.

சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என, நான்கு மதத் தலைவர்களும் இன்று கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

சிறீலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் வலுவடைந்துள்ள இந்தக் காலகட்டத்தில், மனித உரிமை மீறல்களும் அதிகரித்துச் செல்வதாக, மதத் தலைவர்கள் விடுத்த அறிக்கையில் கண்டிக்கப்பட்டுள்ளது.

பௌத்த மதத் தலைவர் பெல்லன்வில விமலரத்ன, கிறிஸ்தவ மதத் தலைவர் பேராயர் ஒஸ்வால்ட் கோமிஸ், மற்றும் இந்து, முஸ்லீம் மதத் தலைவர்கள் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகர்கள் மாநாட்டில் தமது கூட்டறிக்கையை வெளியிட்டனர்.

மனித உரிமை மீறல்களை குறைப்பதற்கும், தடுப்பதற்கும் சிறீலங்கா அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் இந்த அறிக்கை, மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தால், உலகில் மிக மோசமான நாடாக சிறீலங்கா மாற்றம் பெறும் எனவும் எச்சரித்துள்ளது.

கொழும்பிலிருந்து தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டதற்கு அரசு மன்னிப்புக் கோரியதை வரவேற்றுள்ள மதத் தலைவர்கள், இருப்பினும் இந்தப் பிரச்சினை இதுவரை சுமுகமாகத் தீர்க்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இனப் பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு உகந்தது அல்ல எனவும், அப்பாவிப் பொதுமக்களின் இடப்பெயர்வுகள், கடத்தல்கள், கொலைகள் என்பன தமக்கு ஆழ்ந்த கவலையைத் தருவதாகவும், நான்கு மதத் தலைவர்களும் விடுத்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-Pathivu-

இந்தப் பிக்குவிற்கு விரைவில் சூடு விழுந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

pikuvo5.jpg

படம் : Associated Press

  • தொடங்கியவர்

சட்டமா அதிபர் அலுவலகத்தின் தலையீடு: விசாரணைகளை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத நிலை.

சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை வெளிநாட்டு பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் விசாரணை செய்துவரும் நிலையில், அதில் சட்டமா அதிபர் அலுவலகத்தின் தலையீடுகள் அதிகரித்து காணப்படுகின்றன.

சிறீலங்கா அதிபரின் உத்தரவுக்கு அமைவாக, இந்திய முன்னாள் தலைமை நீதியாளர் பகவதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அதிபர் ஆணைக்குழு தனது விசாரணைகளை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளது.

சட்டமா அதிபர் அலுவலகத்தின் தலையீடு காரணமாக மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணைகள் தோல்வியில் முடிவடைய சந்தர்ப்பம் இருப்பதாக, சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ ஜெனீவாவில் மனித உரிமைகள் தொடர்பான பிரதிநிதிகளைச் சந்தித்துவரும் நிலையில், இந்த ஆணைக்குழுவின் கருத்து அவரது சந்திப்புக்களுக்கு மேலும் சிக்கலையும், அழுத்தத்தினையும் தோற்றுவித்துள்ளது.

அனைத்துலக வல்லுனர்களை உள்ளடக்கிய இந்த ஆணைக்குழுவிற்கு சாட்சியம் அளிப்பவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் எனவும், தவறினால் சாட்சிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத சூழல் ஏற்படும் எனவும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தக் குழுவின் பிரதிநிதிகள் கூறியிருந்தனர்.

மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என, அனைத்துலக மன்னிப்புச் சபை உட்பட பல அமைப்புகளும், அரசுகளும் சிறீலங்கா அதிபரிடம் வலியுறுத்தி வருகின்ற போதிலும், அவற்றை நிராகரித்துவரும் அதிபர் ராஜபக்ஸ, எதிர்ப்புகளைத் தவிர்ப்பதற்காக இந்த அதிபர் ஆணைக்குழுவை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-Pathivu-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.