Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

65 கோடி ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணைகளை பாராளுமன்றத்தில் 19 ஆம் திகதி சமர்ப்பிக்க ஏற்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

65 கோடி ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணைகளை பாராளுமன்றத்தில் 19 ஆம் திகதி சமர்ப்பிக்க ஏற்பாடு

வீரகேசரி நாளேடு

இந்த ஆண்டிற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படாத அமைச்சுக்களின் செலவுகளுக்காக 65 கோடி ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணைகளை அரசாங்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து அரசாங்கத்தில் இணைந்துகொண் டதையடுத்து ஏற்படுத்தப்பட்ட 7 புதிய அமைச்சுக்களின் ஆறுமாதகால செலவுக்காகவே 65 கோடி ரூபாவிற்கான இந்த குறைநிரப்பு பிரேரணைகள் பாராளுமன்றத்தில் சம ர்ப்பிக்கப்படவுள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்ற அத்தியாவசிய பொருட்களின்

விலைகள் அதிகரிப்பினால் அப்பாவி பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துவருகின்ற இந்நிலையில் அமைச்சுக்களின் செலவுகளுக்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவுள்ள குறைநிரப்பு பிரேரணையை கடுமையாக விமர்சித்துள்ள ஜே.வி.பி அந்த குறைநிரப்பு பிரேரணைகளுக்கு எதிராக வாக்களிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

புதிய ஏழு அமைச்சுகளின் ஆறுமாதகால செலவுகளுக்காக பாராளுமன்றத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவுள்ள 65 கோடிரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணைகள் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தலை தூக்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ள போது புதிதாக ஏற்படுத்தப்பட்ட சில அமைச்சுகளுக்கு 65 கோடி ரூபா ஒதுக்குவதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

2007 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட யோசனை சமர்ப்பிக்கப்பட்ட போது உள்ளடக்கப்படாத அமைச்சுக்களுக்கே இந்த பாரிய தொகையை குறைநிரப்பு பிரேரணை மூலம் ஒதுக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட அந்த குழுவினருக்காக இந்த பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உலகத்திலேயே கூடுதலான அமைச்சுக்களை கொண்டு அமைச்சரவையை உருவாக்கிய அன்றிலிருந்தே நாம் மக்களின் பணத்தை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்த வேண்டாம் என அரசாங்கத்தை அறிவுறுத்தி வந்துள்ளோம்.

அமைச்சரவையில் கூடுதலான அமைச்சர்கள் இருப்பதனால் மேலதிக செலவுகள் அதிகரிக்கும் என்பதையும் எடுத்துக்கூறியுள்ளோம். 7 அமைச்சுக்களுக்கான 6 மாத காலத்துக்கு 65 கோடி ரூபாவை ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பது இந்நாட்டு மக்கள் முகம் கொடுத்து வருகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தும்.

வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்த முடியாத இந்த சூழ்நிலையில் பிரிவினைவாத புலி பயங்கரவாதிகளை தோற்கடிப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு இந்த நிதியை பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தினால் அத்தியõவசிய பொருட்களின் விலையேற்றத்தையும் இந்த மக்கள் பொறுத்துக்கொள்வார்கள்.

அதனை விடுத்து நாட்டிற்கே பாரமான அமைச்சரவையை முன்னெடுப்பதற்காக இவ்வளவு பெரிய தொகை ஒதுக்குவதை இந்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்கெதிராக இந்நாட்டு மக்களை குரல் கொடுப்பதற்கு அழுத்தம் கொடுப்போம். பதவி மற்றும் சிறப்புரிமைகளை கணக்கில் எடுக்காது மக்கள் பணத்தை நாசமாக்காமல் இந்த நாட்டின் மீதும் மக்களின் மீதும் நம்பிக்கை கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் மக்கள் படுகின்ற துன்பத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் 19 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள குறைநிரப்பு பிரேரணைகளுக்கு எதிராக தங்களது வாக்குகளை பயன்படுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற குழுவுக்கு கட்சியின் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் மீது பாரத்தை சுமத்தி அத்தியõவசிய பொருட்களின் விலைகளை ஏற்றி மக்களை துன்பபடுத்துகின்ற இந்த அரசாங்கத்தின் அமைச்சரவையை நடத்துவதற்கு கோடிக்கணக்கான ரூபாவை செலவழிப்பதற்கு இடமளிக்கக் கூடாது. இந்த பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதோடு அரசாங்கம் கொண்டு வருகின்ற குறைநிரப்பு பிரேரணை தொடர்பாக மக்களை தெளிவு படுத்தி அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு வழி சமைப்போம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.