Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேசப் போக்குப் புரியாமல் "கிணற்றுத் தவளை'யாகக் கொழும்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-06-16

சர்வதேசப் போக்குப் புரியாமல் "கிணற்றுத் தவளை'யாகக் கொழும்பு

இலங்கையின் சார்பில் கடந்த தடவை ஐ. நா. செய லாளர் நாயகம் பதவிக்குப் போட்டியிட்டவரும், பிரபல இராஜ தந்திரியும், இலங்கை அரசின் சமாதானச் செய லகத்தின் முன்னாள் பணிப்பாளருமான ஜயந்த தனபால நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற நூல் வெளி யீடு ஒன்றில் உரையாற்றும் போது, இலங்கையில் தற் போது சில விடயங்கள் கையாளப்படும் விதம் குறித்து விச னமும் விரக்தியும் தெரிவிக்கும் விதத்தில் சில கருத்துக் களை முன்வைத்தார்.

""கிணற்றுத் தவளைகள் உலக அறிவு இல்லாமல் கத் திக் கொண்டு இருக்கின்றன. உலகின் போக்கை அவை புரிந்து கொள்ளவில்லை. இலங்கை இனப்பிரச்சினை யைக் கிணற்றுத் தவளைச் சிந்தனையில் கையாளக்கூடாது; கையாளவும் முடியாது. இது இலங்கையின் உள்நாட்டு இன விவகாரம் என்றாலும் சர்வதேச மட்டத்துக்கு வந்து விட்ட விடயம். எனவே அந்தப் பின்னணி யதார்த்தத் தைப் புரிந்துகொண்டு, அந்தச் சூழலை ஏற்று, அதன் அடிப் படையில் இவ்விடயங்களைக் கையாள்வதே பொருத்த மானதாகவும் சரியானதாகவும் இருக்கும். இதை விடுத்து, இது உள்நாட்டு விடயம் என்ற கருத்தில் சர்வதேசப் பங் களிப்பைத் தூக்கி வீசி கிணற்றுத் தவளைகள் போல கத்துவதில் எந்த அர்த்தமுமில்லை.'' என்ற சாரப்படக் கூறினார் ஜயந்த தனபால.

யாரையும் அவர் பெயர் சுட்டிக் குறிப்பிடவில்லை. கிணற்றுத் தவளையாக உலக அறிவின்றி இவ்விட யங்களைக் கையாண்டு (கத்தும்) நபர் யார் என்பதையும் அவர் பெயர் சுட்டி வெளிப்படுத்தவில்லை.

எனினும், அவர் யாரைச் சுட்டி அவ்வாறு குறிப்பிட் டார் என்பது ஊகிப்பது அப்படி ஒன்றும் கஷ்டமான விடயமே அல்ல.

இனப்பிரச்சினை விடயத்தில் இலங்கைத் தரப்பின் பொறுப்பற்ற போக்கை இப்போது கடுமையாக விமர்சிக் கின்றது சர்வதேச சமூகம். ஆனால் சர்வதேச சமூகத்துக்கு பதிலடி கொடுக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு கொழும்பு மேற்கொள்ளும் அறிவிலித்தனமான செயற்பாட் டையே "கிணற்றுத் தவளைப் போக்கு' என்று ஜயந்த தன பால சாடுகின்றார் என்பதைப் புரிந்து கொள்வது அப்படி ஒன்றும் சிரமமான காரியமே அல்ல.

ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழு, யுனிசெவ் மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகளுக் கான கண்காணிப்பகம், ஆசிய மனித உரிமை மையம் முதலிய சர்வதேச அமைப்புகளும் ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், அமெரிக்கா என்று பல்வேறு நாடுகளும் கொழும்பின் போக்குக் குறித்து கடும் விசனமுற்று அதிருப்தி தெரிவிக்கும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

போதாக்குறைக்கு, இலங்கையில் இடம்பெற்ற குறிப்பிடப்பட்ட மோசமான மனித உரிமை மீறல் சம் பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஜனா திபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் செயற்பாடு குறித்து, அந்த விசாரணைகளைக் கண்காணிக்க நிய மிக்கப்பட்ட சர்வதேச ஆணைக்குழுவும் கடும் விசனமும் அதிருப்தியும் வெளியிட்டிருக்கின்றது. தமது கவலை யைத் தெரிவிக்கும் இரண்டாவது அறிக்கையை மேற்படி பதினொரு சர்வதேச நிபுணர்களைக் கொண்ட குழு ஒரு வாரத்துக்குள் அடுத்தடுத்து வெளியிட்டு விட்டது.

ஒட்டுக்குழுக்களை வைத்துக் கொண்டு அரசுப் படை கள் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல் நடவடிக்கை கள் சர்வதேச சமூகத்தின் கடும் கண்டனங்களுக்கு இலக் காகியிருக்கின்றன.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இடம்பெறும் ஆட் கடத்தல்கள், கப்பம் கோரல்கள், படுகொலைகள், ஊடகங் களுக்கு எதிரான அடக்கு முறை அராஜகங்கள், அரசுடன் இணைந்துள்ள ஒட்டுக்குழுக்களினால் சிறுவர்கள் பல வந்தமாகப் படைகளுக்கு சேர்க்கப்படல் போன்றவை குறித்து இலங்கைக்கு வரும் மேற்கு நாட்டு இராஜதந்திரிகளும், அரசியல் தலைவர்களும் விசேட கவனமும், அக்கறை யும், சிரத்தையும் எடுத்து வருகின்றார்கள் என்பது அப்பட்டமாக வெளிப்படும் ஒன்று.

இவை குறித்து இலங்கை அரசுத் தலைவரான ஜனா திபதியிடம் நேரில் முறையிட்டு, அவரது கவனத்தை ஈர்த்து, நிலைமையை சீர் செய்யலாம் என்று கருதி, இலங் கைக்கு வரும் இராஜதந்திரிகளும், அரசியல் தலைவர் களும் ஜனாதிபதியை நாடுகின்றனர்.

ஆனால் நாட்டின் ஜனாதிபதியோ மேற்குலகின் இந்தக் கரிசனையை கவனத்துடன் உள்வாங்குவதை விடுத்து, வரும் மேற்கு நாட்டு இராஜதந்திரிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் வாயை நல்ல ஆங்கிலத்தில் வாதிட்டு, அடக்கக் கூடிய பிரகிருதிகளைத் தம்முடன் கூட வைத் துக்கொண்டு, வரும் அரசியல்வாதிகளை வாய்த் தர்க்கம் செய்து மடக்குவது தமது இராஜதந்திர சாதனை எனக் கருதி அதில் முழு மூச்சுடன் ஈடுபடுகின்றார்.

மேற்குலகை மேலும் சீண்டி, சீறவிடும் இந்த முட் டாள் தனமான போக்கையும், மேற்குலகின் ஆழம் புரியா மல் அதனை வலிந்து பிணக்குக்கு அழைக்கும் விதத் தில் ஜனாதிபதியை நெருங்கியுள்ள அதிகார வர்க்கம் பகிரங்கக் கருத்துக்களை வெளியிடுகின்றமையுமே "கிணற்றுத் தவளை' ப்போக்கு என ஜயந்த தனபால குறிப் பிட்டிருப்பார் என்பதை சுலபமாக ஊகிக்க முடிகின்றது.

சர்வதேச நல்லுறவுகள், தாற்பரியங்கள், அவற்றைக் கையாளும் இராஜதந்திரங்கள் போன்றவற்றைப் புரியாமல் "கிணற்றுத் தவளை' யாகக் கொழும்பு நடந்து கொள்வது செயற்படுவது மறுமுனையில் புலிகளுக்கும் தமிழர் தரப்புக்கும் சர்வதேச ஆதரவைத் திரட்டித் தரும் வரப்பிரசாதமாக இருப்பதும் நாம் கவனிக்கத்தக்கது.

நன்றி - உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.