Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா, பிரிட்டனுடன் சேர்ந்து ஈழத்தமிழர் மீதான கொடுமைகளை இந்தியாவும் கண்டிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sat Jun 16 8:38:54 EEST 2007

அமெரிக்கா, பிரிட்டனுடன் சேர்ந்து ஈழத்தமிழர் மீதான கொடுமைகளை இந்தியாவும் கண்டிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

இலங்கையில் தமிழினத்தை ஒட்டு மொத்தமாக அழித்துவிட வேண்டும் என் பதில் ராஜபக்ஷ சகோதரர்கள் தீவிரம் காட்டுகின்றனர். இதை உணர்ந்து பிரிட் டன், அமெரிக்கா நாடுகள் கண்டிக்கின் றன. இந்திய அரசும் இந்த நாடுகளுடன் சேர்ந்து கண்டிக்கும் அணுகுமுறை யைக் கடைப்பிடிக்கவேண்டும்.

இப்படிக் கோரியுள்ளார் பாட்டாளி மக் கள் கட்சியின் நிறுவுநர் டாக்டர் ராம தாஸ்.

தைலாபுரத்தில் பத்திரிகையாளர் களுக்கு அளித்த பேட்டியில் அவர் இப் படிக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

"எவரும் எங்களை தனிமைப்படுத்த விடமாட்டோம். எங்கள் துணைக்கு சார்க் நாடுகள் உள்ளன' என்று இலங்கை பாதுகாப்புத் துறை செயலர் தெரிவித் துள்ளார்.

அதிபர் ராஜபக்ஷ சகோதரர்கள் நால் வரும் ஒன்று சேர்ந்து இலங்கையில் தமி ழினத்தை ஒட்டுமொத்தமாக அழித்து விடவேண்டும் என்பதில் தீவிரம் காட்டு கின்றனர். இதை பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் புரிந்து கொண்டுள்ளன. அங்குள்ள தமிழர்கள், இலங்கை படை யினரால் துன்புறுத்தப்படுவதையும் கொடுமைப்படுத்தப்படுவதையும் மனித உரிமைகள் மீறப்படுவதையும் கண்டித்து வருகின்றன.

கொழும்பில் நூற்றுக்கணக்கான தமி ழர்களை துப்பாக்கி முனையில் இராணு வமும், பொலிஸூம் தமிழர் பகுதிக்குக் கடத்தியுள்ளன.

இதனை அமெரிக்கா மற்றும் ஐரோப் பிய நாடுகள் உணரத் தொடங்கியுள் ளன. இந்திய அரசும் காலம் கடந்தபோதி லும் இந்த உண்மையை உணர்ந்து செயற் பட வேண்டும். இலங்கைப் பிரச்சினை யில் இந்தியா தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவேண்டும்.

ஈழத் தமிழர்கள் மனித உரிமை, அர சியல் உரிமையோடு வாழ வேண்டுமென இந்தியா விரும்பினால், அதற்கு ஒரே தீர்வு தமிழர் பகுதியில் தமிழர்கள் சுய அரசியல் அதிகாரத்துடன் வாழ வேண் டும். இதைத் தவிர வேறு தீர்வு தெரிய வில்லை.

பாலஸ்தீனத்தில் கூட இதுதான் நடந் துள்ளது. இஸ்ரேல் நாட்டுக்குள் பாலஸ் தீனர் தனிநாடாக வாழ்ந்து வருகின்ற னர். இதை உலகமும் இந்தியாவும் அங் கீகரித்துள்ளன. இதே கோணத்தில் இந் தியா தனது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தனி ஈழம்தான் இப்பிரச் சினைக்குத் தீர்வு.

இலங்கையின் இறையாண்மையை பற்றிக் கவலைப்படும் கட்சிகள் இதைப் பற்றி சிந்தித்து குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்றார். (1)

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.