Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிக்கும் சமாதானத்துக்குமான, கேள்விகளின் காலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நீதிக்கும் சமாதானத்துக்குமான, கேள்விகளின் காலம் - 1 – நடராஜா குருபரன்! #justice #peace #memories #peace_talk
கொள்கை என்பது ஒரு இலக்கை அடைவதற்குப் பின்பற்றப்படும் வழி முறையையும் ஒழுக்க விதிகளையும் குறிக்கும். ஒரு எண்ணம் சற்று சந்தேகத்துடன் முன்வைக்கப்படும்போது அது கருத்து எனப்படுகிறது. உறுதியாக முன்வைக்கப்பட்டால் அது கொள்கையாகிறது. சொன்னவருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்த பின்பும் பிறருக்கு அதன்மேல் உறுதிப்பாடு ஏற்படும் போது அது கோட்பாடாகிவிடுகிறது.
முன் கூட்டியே தீர்மானிக்கப்படும் நம் கொள்கைகளில், மூலோபாயம் தந்திரோபாயங்களில் காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவைப்படின் அவை மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு புதிய உள்ளீடுகளை புகுத்துவது அவசியமாகிறது. அதேவேளை ஒரே ஒரு முறை நேர்ந்த திருத்தக் கூடிய பிழைகளுக்காகவும், எளிதில் மீண்டும் நிகழாமல் காத்துக் கொள்ளக்கூடிய பிழைகளுக்காகவும் புதிய கொள்கைகளை உருவாக்குவதனையும் தவிர்பது முன்னுதாரணமாகிறது.
இறுக்கமான கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமாகிறதோ, அந்த அளவிற்கு அவை நெகிழ்வுடன் கூடிய, வழிகாட்டல்களுடன் அமைய வேண்டும் என்பதும் வரலாறாகிறது.
உலகலாவிய தேசிய இனங்களின் விடுதலைப் போராட்ட செல்நெறிகளை, இரன்டாம் உலகப் போரின் பின்னான, ரஸ்ய அமெரிக்க பனிப்போர் காலம், அதற்கு பிந்தைய காலம் என பகுப்பாய்வு செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன்.
குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட்ரேகன் மற்றும் ரஸ்ய ஜனாதிபதி கொபர்சேவ் காலமான 1991ல் பனிப்போர் முடிவுக்கு வந்த பின் உலக ஒழுங்கில், அதன் போக்கில், அணிச் சேர்கைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தன. சோவியத் சார்ப்பு கம்யூனிச நாடுகள், அமெரிக்க சார்ப்பு முதலாளித்துவ நாடுகள், அணிசேரா நாடுகள், நேட்டோ உடன்படிக்கை நாடுகள், வார்சோ உடன்படிக்கை நாடுகள் என்ற அணிச் சேர்க்கைகளில் பெரும் மாறுதல்களும், அவற்றையொட்டி கோட்பாட்டு நடைமுறைகளில் மாறுதல்களும் ஏற்பட்டு இருந்தன.
இவற்றிற்கு அப்பால் உலக அளவில் எழுச்சிபெற்று வந்த இஸ்லாமிய தீவிரவாதம், அடிப்படைவாதம், பலஸ்தீன – இஸ்ரேல் முரண்பாட்டில் அமெரிக்காவும், மேலைத்தேசமும் தமக்குள் ஏற்படுத்திக்கொண்ட கொள்கை மாற்றங்கள், மத்தியகிழக்கில் ஏற்பட்ட போர் பதட்டம், இஸ்லாமிய நாடுகள், விசேடமாக லிபியா, ஈராக் – ஈரான் போன்ற நாடுகளின் மீதான அமெரிக்க நிலைப்பாடு, மறுபுறம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் முதலான நாடுகள் மீதான அமெரிக்க மேலைத்தேய நிலைப்பாடுகள் என்பவற்றில் பாரிய மாறுபாடுகளும், ஆக்கிரமிப்புகளும் தொடர்ந்தன.
மறுபுறம் ஆசிய பிராந்நியத்திலும் உலக அளவிலும், சீனாவின் எழுச்சியும், ஆதிக்கமும், பிராந்தியத்தில் இந்திய – பாகிஸ்த்தான் - சீன முரண்பாடுகளும் விஸ்தரிப்புவாத, ஆதிக்க போட்டிகளும் கூர்மையடையத் தொடங்கி இருந்தன.
இந்த நிலையில், 1970களில் ஆரம்பித்து 1980களில் கூர்மையடைந்த இலங்கையின் தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டமும், அதனை முன்கொண்டு சென்ற விடுதலைப்புலிகள் அமைப்பும், 1990களிற்கு பின்னர் ஏற்பட்ட உள்ளக, பிராந்திய, சர்வதேச அரசியல் போக்குகளை கவனத்தில் எடுத்துக்கொண்டனவா?
முக்கியமாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையின் பின் தமிழர்களின் தனிநாட்டு கோரிக்கை தொடர்பாகவும், விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் ஏற்பட்ட இந்திய கொள்கை மாற்றம், 1997ல் உலக பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பும் இணைக்கப்பட்டமை, 2011 செப்டம்பர் 11ல் அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான தாக்குதலின் பின் பயங்கரவாதம், தீவிரவாதம், ஆயுதம் தாங்கிய விடுதலைப் போர் குறித்து உலக அளவில் உருப்பெற்று விரிவடைந்த கொள்கை மாற்றம், ஜோர்ஜ் புஷ் கொண்டுவந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போரென்ற புதிய உலக ஒழுங்கு, முதலான விடயங்கள் குறித்து, விரிவான ஆய்வுகள், விவாதங்கள், ஆலோசனைகள் இடம்பெற்றனவா?
ஆயுத போராட்ட வடிவங்களில் அதாவது இராணுவ மூலோபாயங்களில் தந்திரோபாயங்களில் காலத்திற்கு ஏற்ப வடிவ மாற்றங்களை புகுத்தியது போன்று – (விசேடமாக கெரில்லா போர்முறையில் இருந்து மரபுவழிப் போர் முறைக்கு மாறுதலும், பின்னர் தேவை ஏற்படின் மீண்டும் கெரில்லா போர்முறைக்கு மாறுதலும்) காலத்தின் கட்டாயத்திற்கு ஏற்ப அரசியல் ராஜதந்திர நகர்வுகளிலும் கவனம் செலுத்தப்பட்டதா? என்ற கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
உண்மையில் 80களில் போராளியாக, 90களில் பல்கலைக்கழகத்தில் அரச அறிவியற் துறை சிறப்பு மாணவனாக, பின்னர் அச்சுத்துறை சார் ஊடகவியலாளனாக, 2000 ஆண்டுகளில் இலத்திரணியல் துறை சார் ஊடகவியலாளனாக, இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் அனைத்தினதும் செய்தி சேகரிப்பாளனாக, தெற்கின் முற்போக்காளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள், ஐரோப்பிய ஒன்றிய, இந்திய மற்றும் இணைத்தலமை நாடுகளின் ராஜதந்திரிகளோடு நல்லுறவைப் பேணியவனாக, பின்னர் புலம்பெயர்ந்த ஊடக செயற்பாட்டாளனாக, பெற்றுக்கொண்ட அனுபவங்களின் ஊடாக, என்னுள் எழுந்த கேள்விகளுக்கு விடைகான்பதற்கான ஒரு பதிவாக இந்தத் தொடர் அமைகிறது.
நீண்ட காலமாக என்னுள் இருந்த இந்த வேட்கை, இந்தக் கொரோனா உள்ளிருப்புக் காலத்தில் சாத்தியமாகி இருக்கிறது.
இந்தத் தொடர் இன்றைய காலத்தின் தேவை என உணர்கிறேன். ஆயுதப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின், அகிம்சை வழியிலான சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைப் போராட்டம், மிண்டும் சர்வதேசத்தை நோக்கி நீட்சிபெற்று உள்ள சூழலில் என் சிற்றறிவுக்கும், அனுபவங்களுக்கும் எட்டிய சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைகிறேன்.
குறிப்பாக 1985கள், 1990களிற்கு பின் உருவாகிய அடுத்த தலைமுறையினரே இப்போது அரசியல் முன்னரங்க பகுதிகளில் முட்டி மோதிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தக் காலப்பகுதிகளில் நடந்தவை என்ன? என்பது பற்றி அப்போது சிறுவர்களாக இருந்த இந்த தலைமுறையினர் தெரிந்துகொண்டவை என்ன? என்பது பற்றிய கவலைகள் என்னுள் தொடர்கின்றன.
இவற்றின் பிரதிபலிப்பே இந்தத் தொடர்.
தவிரவும் எவரையும் குறை கூறுவதோ, குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதோ, யார் மீதும் சேறடிப்பதோ என் நோக்கமல்ல என்பதனை திறந்த மனதுடனும், நேர்மையுடனும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அத்துடன் இந்த தொடரில் வரும் கருத்துகள், விமர்சனங்களுக்கு தனிப்பட்ட வகையில் முழுமையாக நானே பொறுப்பு என்பதனால் தனிப்பட்ட எனது முகநூலில் மட்டுமே இதனைத் தொடரவிருக்கிறேன்.
ஆரோக்கியமான விமர்சனங்களையும், விவாதங்களையும், ஆலோசனைகளையும், ஆதரவையும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
Image may contain: one or more people and closeup
 
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.