Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்களத்தின் தவறான பிரசாரத்துக்கு துணைபோகும் தமிழ், முஸ்லிம் கட்சிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-06-17

சிங்களத்தின் தவறான பிரசாரத்துக்கு துணைபோகும் தமிழ், முஸ்லிம் கட்சிகள்

இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிரான பெரும்பான்மை பௌத்த, சிங்கள அதிகார வர்க்கத்தின் கெடுபிடி குரூர அடக்கு முறையாகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இதற்காக சர்வதேச அரங்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறது தென்னி லங்கை அரசு.

இந்தக் குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் சிக்கியிருக்கும் கொழும்பு, அதற்காக இப்போது பதவி ஆசைக்காகத் தன் னுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழ் முஸ்லிம் கட்சி களைத் தனக்கு சாட்சியாக அழைக்க விழைகிறது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) ஆகிய தமிழ்க் கட்சிகளும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, அமைச்சர் பேரி யல் அஷ்ரப்பின் தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ), அமைச்சர் ரியாத் பதியுதினின் அகில இலங்கை முஸ் லிம் காங்கிரஸ், அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங் கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகளும்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசில் இடம் பெற்றிருக்கின்றன.

இந்தத் தமிழ் கட்சிகளில் இ.தொ.காவும், மலையக மக்கள் முன்னணியும் மலையகத் தமிழர்களின் கட்சிகள். ஈழத்தமிழரின் ஒரேயொரு கட்சிதான் ஜனாதிபதி மஹிந்தவின் அரசில் இடம்பெற்றுள்ளது. அது ஈ.பி.டி.பி. மட்டுமே. அது கூட நாடாளுமன்றில் உள்ள 24 தமிழ் எம்.பி.க்களில் ஆக ஒரேயொருவரை மட்டுமே கொண்ட கட்சி. ஏனைய 23 ஈழத்தமிழ் எம்.பிக்களும் எதிர்க் கட்சி களின் தரப்பில்தான் இருக்கின்றனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழமக்கள் புரட்சிகர முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) ஆகிய நான்கு கட்சியினரும் தமிழரசுக் கட்சியின் சின் னத்தின் கீழ் ஒன்றுபட்டு 22 எம்.பிக்களுடன் மஹிந்த வுக்கு எதிரணியில் உள்ளனர். மற்றொரு ஈழத் தமிழ் எம்.பியான தி.மகேஸ்வரன் ஐ.தே.கட்சியிலும், மேலக மக்கள் முன்னணியைச் சேர்ந்த தமிழ் எம்.பியான மனோ கணேசன் அக்கட்சியின் சார்பிலும் நாடாளுமன்றில் எதிரணியில் உள்ளனர்.

ஆக, ஈழத் தமிழர்களின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 23 எம்.பிக்கள் எதிரணியில் இருக்க ஒரேயொரு ஈழத்தமிழ் எம்.பியை மட்டும் அமைச்சர் பதவிகொடுத் துத் தமது அரசில் இணைத்து வைத்திருக்கும் ஜனாதிபதி மஹிந்தர், ஏதோ முழுத் தமிழர்களும் முஸ்லிம்களும் தம்முடன் உள்ளனர் என்பது போல சர்வதேச சமூகத் துக்குப் புதுக்கதை அவிழ்த்து விடுகின்றார்.

ஜெனீவாவில் நேற்று முன்தினம் உலகத்தொழிலாளர் சம்மேளனக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, அந்த உரையிலேயே இவ்வாறு கயிறு அவிழ்த்து விட்டி ருக்கிறார்.

""இலங்கையின் நாடாளுமன்றத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகளில் ஒன்றைத் தவிர மிகுதி அனைத்தும் எனது அரசில் உள்ளன. இவ்வாறு பல்லின மக்களைக் கொண்டது எனது அரசு. இத்தகைய அரசு சிறுபான்மை மக்களைப் பாரபட்சமாக நடத்துமா? நடத்தவே நடத் தாது'' என்று அங்கு முரசறைந்திருக்கிறார் ஜனாதிபதி.

"வேலிக்கு ஓணான் சாட்சி' என்பதுபோல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நியாயம் பிளத்தலுக்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் சாட்சியமாக வந்து அமைகின்றன.

ஜனாதிபதி கூறிய இந்த "நியாயத்தில்' இரண்டு அம்சங்கள் நோக்கத்தக்கவை.

ஒன்று ஈழத்தமிழரின் 24 எம்.பிக்களில் ஒரேயொரு எம்.பியை மட்டும் தம்முடன் வைத்துக் கொண்டு ஒரு தமிழ்க் கட்சியைத் தவிர மற்றெல்லாம் தம்முடனேயே உள்ளன என்று ஜனாதிபதி விதண்டாவாதம் புரிவது.

இரண்டாவது தமிழர்களுக்கு எதிராகத் தான் மேற் கொள்ளும் அடக்குமுறைகள் மற்றும் கொடூரங்களை மூடி மறைத்துத் தன்னை நீதியாகச் செயற்படும் பல்லின அரசாக சர்வதேசத்துக்கு நிரூபிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு எடுக்கும் "சுத்துமாத்து' நியாயங்களுக்கு அந்த அரசுடன் இணைந்துள்ள காரணத் துக்காக இ.தொ.கா, மலையக மக்கள் முன்னணி மற்றும் முஸ்லிம் கட்சிகள் நேரடியாக உதவுகின்றன என்பது.

மலையக மக்களின் சுபீட்சத்துக்காக அரசில் இணை கிறோம் என்ற மலையகக் கட்சிகள் மலையக மக்களுக்கு குறிப்பிடத்தக்க எதையுமே பெற்றுக் கொடுக்கவில்லை. முஸ்லிம் கட்சிகளின் நிலையும்கூட இதுதான். இக் கட்சிகளின் எம்.பிக்கள் அமைச்சர்களாகித் தங்களை வளர்த்துக் கொண்டார்களே தவிர, தமது சமூகத்துக்கு காத்திரமான ஆக்கபூர்வமான விடயங்கள் எதையும் சாதிக்கவில்லை. அதேநேரம் ஈழத் தமிழர்களுக்குக் கொடூரம் புரியும் ஓர் அரசுக்கு முண்டு கொடுத்து, அந்த அரசு அப்படி ஈழத் தமிழர்களுக்குப் பாரபட்சம் ஏதும் காட்டவில்லை என்ற அப்பட்டமான பொய்ப் பிரசாரத் துக்கு இந்த எம்.பிக்கள் ஆதாரமாக சான்றுகளாக மாறியிருக்கின்றனர்.

இவ்வாறு ஈழத்தமிழர்களின் நியாயமான அபிலாசை களை நிராகரித்து, அவர்களை அடக்கும் ஓர் அரசுக்கு அது தொடர்பான விவகாரத்தில் சர்வதேச நியாயப்படுத் தலுக்குத் துணைபோகின்றன, இந்த மலையகக் கட்சி களும் முஸ்லிம் கட்சிகளும்.

ஈழத்தமிழர்களுக்கு எதிராக போரியல் வெறி கொண் டலையும் தென்னிலங்கைச் சிங்கள அரசுக்கு முண்டு கொடுக்கும் இக்கட்சிகள் தமிழர்களுக்குச் செய்யும் இத் துரோகத்துக்கு என்ன பதில் கூறப் போகின்றன?

உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Posted on : 2007-06-17

சிங்களத்தின் தவறான பிரசாரத்துக்கு துணைபோகும் தமிழ், முஸ்லிம் கட்சிகள்

இவ்வாறு ஈழத்தமிழர்களின் நியாயமான அபிலாசை களை நிராகரித்து, அவர்களை அடக்கும் ஓர் அரசுக்கு அது தொடர்பான விவகாரத்தில் சர்வதேச நியாயப்படுத் தலுக்குத் துணைபோகின்றன, இந்த மலையகக் கட்சி களும் முஸ்லிம் கட்சிகளும்.

ஈழத்தமிழர்களுக்கு எதிராக போரியல் வெறி கொண் டலையும் தென்னிலங்கைச் சிங்கள அரசுக்கு முண்டு கொடுக்கும் இக்கட்சிகள் தமிழர்களுக்குச் செய்யும் இத் துரோகத்துக்கு என்ன பதில் கூறப் போகின்றன?

உதயன்

இந்தக் கவலைகளுக்கும் அவர்கள் அரசியல் கொள்கைகளுக்கும் சம்பந்தம் எப்பவாவது இருந்திருக்கிறதா?

அவர்கள் அரசியல் இருப்புக்கு அடைக்கலம் கொடுப்பதே கோடரிக்காம்புகளாய் அவர்கள் அரசியல் செயற்பாடுகள் இருப்பதால்த்தானே.

அதைவிடுத்து இவர்களிடம் இப்படிப்பட்ட எதிர்பார்ப்புக்களை வைத்திருப்பதைவிட சிங்களத்தரப்பிடம் வைத்திருப்பது நியாயமல்லவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.