Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லுங்கள் – தமிழ்த் தரப்பு கூட்டாக கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லுங்கள் – தமிழ்த் தரப்பு கூட்டாக கோரிக்கை

 
geneva-2021-696x348.png
 13 Views

இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது வேறு ஏதாவது பொருத்தமான பயனுள்ள சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறைக்கோ பாரப்படுத்துவதற்கான நடவடிக்கையை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அங்கத்துவ நாடுகள் எடுக்கவேண்டும் என தமிழ் அரசியல் தலைவர்களும் சிவில் சமூக பிரதிநிதிகளும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம்வகிக்கும் 42 நாடுகளின் தூதரகங்களின் தலைவர்களிற்கு எழுதியுள்ள கடிதமொன்றில் தமிழ் அரசியல் தலைவர்களும் சிவில் சமூகபிரதிநிதிகளும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

samanthan0.pngதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் ஆகியோர் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளிற்கு தமிழ் அரசியல் தலைவர்களும் சிவில்சமூக பிரதிநிதிகளும் பின்வரும் மூன்று கோரிக்கைகளை முக்கியமாக முன்வைத்துள்ளனர்.

gajen.02-171x300.pngஐக்கியநாடுகளின் ஏனைய உறுப்புகளான ஐக்கியநாடுகள் பாதுகாப்புசபை- ஐக்கியநாடுகள் பொதுச்சபை போன்றவை இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது வேறு ஏதாவது பொருத்தமான பயனுள்ள சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறைக்கு இந்த விடயத்தினை பாரப்படுத்துவதன் மூலம் இனப்படுகொலை மனித குலத்திற்கு எதிரான குற்றம் யுத்த குற்றம் ஆகியன குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என உறுப்புகள் மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள் புதிய தீர்மானத்தில் கேட்டுக்கொள்ளவேண்டும்

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தலைவர் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறும் விடயங்களை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.

cv.w2-188x300.pngஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள்; மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அலுவலகம் தொடரும் மனித உரிமை மீறல்களிற்காக இலங்கையை தொடர்ந்து கண்காணிப்பதற்கான ஆணையையும்,இலங்கையில் மனித உரிமை உயர்ஸ்தானிகரின அலுவலகத்தின் பிரசன்னம் காணப்படுவதற்கான ஆணையையும் வழங்கவேண்டும்.

முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ள விடயத்திலிருந்து கவனத்தை திருப்பாமல் சிரியாவிற்கான சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறை போன்ற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என தமிழ் அரசியல் தலைவர்களும் சிவில் சமூகபிரதிநிதிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

geneva-4-300x169.jpg

 

https://www.ilakku.org/?p=39562

இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கான நடவடிக்கையை மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள் முன்னெடுக்கவேண்டும்- தமிழ் அரசியல் தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள்

Digital News Team 2021-01-16T07:32:45

இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது வேறு ஏதாவது பொருத்தமான பயனுள்ள சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறைக்கோ பாரப்படு;த்துவதற்கான நடவடிக்கையை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அங்கத்துவ நாடுகள் எடுக்கவேண்டும் என தமிழ் அரசியல் தலைவர்களும் சிவில் சமூக பிரதிநிதிகளும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

sampanthan-july-8.jpg

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம்வகிக்கும் 42 நாடுகளின் தூதரகங்களின் தலைவர்களிற்கு எழுதியுள்ள கடிதமொன்றில் தமிழ் அரசியல் தலைவர்களும் சிவில் சமூகபிரதிநிதிகளும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

Gajendrakumar-Ponnambalam-300x227.jpg

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் ஆகியோர் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளிற்கு தமிழ் அரசியல் தலைவர்களும் சிவில்சமூக பிரதிநிதிகளும் பின்வரும் மூன்று கோரிக்கைகளை முக்கியமாக முன்வைத்துள்ளனர்.

cv-300x181.jpg
ஐக்கியநாடுகளின் ஏனைய உறுப்புகளான ஐக்கியநாடுகள் பாதுகாப்புசபை- ஐக்கியநாடுகள் பொதுச்சபை போன்றவை இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது வேறு ஏதாவது பொருத்தமான பயனுள்ள சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறைக்கு இந்த விடயத்தினை பாரப்படுத்துவதன் மூலம் இனப்படுகொலை மனித குலத்திற்கு எதிரான குற்றம் யுத்த குற்றம் ஆகியன குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என உறுப்புகள் மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள் புதிய தீர்மானத்தில் கேட்டுக்கொள்ளவேண்டும்
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தலைவர் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறும் விடயங்களை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.

un-lettr-266x300.png
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள்; மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அலுவலகம் தொடரும் மனித உரிமை மீறல்களிற்காக இலங்கையை தொடர்ந்து கண்காணிப்பதற்கான ஆணையையும்,இலங்கையில் மனித உரிமை உயர்ஸ்தானிகரின அலுவலகத்தின் பிரசன்னம் காணப்படுவதற்கான ஆணையையும் வழங்கவேண்டும்.
முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ள விடயத்திலிருந்து கவனத்தை திருப்பாமல் சிரியாவிற்கான சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறை போன்ற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என தமிழ் அரசியல் தலைவர்களும் சிவில் சமூகபிரதிநிதிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

https://thinakkural.lk/article/105049

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.