Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

64 மாத காலத்தின் பின்னர் நேற்று குடாநாட்டு வானில் "கிபிர்' விமானங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sun Jun 17 11:05:28 EEST 2007

64 மாத காலத்தின் பின்னர் நேற்று குடாநாட்டு வானில் "கிபிர்' விமானங்கள்

சுமார் 64 மாத கால இடைவெளியின் பின்னர் நேற்று நண்பகல் இரு "கிபிர்' விமானங்கள் இரண்டு தடவைகள் குடா நாட்டு வானில் நுழைந்து சுற்றிவட்டமிட்டன.

முதலில் நேற்று நண்பகல் 12 மணிக்கும் பின்னர் ஒரு மணிக்கும் வான்பரப்பில் நுழைந்த "கிபிர்' விமானங்கள் ஒவ்வொரு தடவையிலும் இரண்டு முறைகள் சுற்றி வட்டமிட்டன. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரிதாகப் பதற்றம் தோன்றவில்லை.

இதுவரை குண்டுவீச்சு விமானங்களின் எமகாதச் சத்தத்தைக் கேட்காத சிறுவர் களில் சிலர் அவற்றின் கொடூரம் புரியாமல் காதுகளைக் பொத்திக் கொண்டு மேலே பார்த்தனர் என்றும்

இன்னும் சில சிறுவர்கள் குண்டுவீச்சு விமானங்களின் சத்தத்தைக் கேட்டு ஓடோடிச் சென்று தமது பெற்றோரையும் உறவினர்களையும் கட்டிப்பிடித்து அழுத னர் என்றும் உதயனுக்குத் தெரிவித்த னர்.

3 வயதுக் குழந்தையின் பெற்றோர்கள் விமானச் சத்தம் கேட்டதும் அதனை அர வணைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளே கூட்டிச் சென்றதை நேரில் காணக்கூடிய தாக இருந்தது.

முந்திய அனுபவம் உடையவர்கள் உடனடியாகக் கிபிர் தாக்குதல் சூழ்நிலை தோற்றியிருக்க முடியாத எண்ணத்துடன் தமது அலுவல்களைப் பதற்றமின்றிச் செய்தனர். பலர் கிபிர் விமானங்கள் பறந்ததை அண்ணாந்து பார்த்துக்கொண்டி ருந்தனர்.

கிபிர் விமானங்கள் யாழ்.நகரின் கரை யோரங்களில் குண்டுவீச்சு நடத்திவிட்டு மேலேழுந்த சமயம் பெரும் சத்தம் கேட் டது என்றும் சிலர் தெரிவித்தனர். ஆனால் அது அவர்களின் ஊகமாகவே அமைந்தது.

யாழ்.நகரத்தின் கடற்கரையோரப் பகுதியிலோ, பூநகரிப் பகுதியிலோ குண்டு வீச்சு ஏதும் இடம்பெறவில்லை என நேற் றிரவு அப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

வடமராட்சி கிழக்குப் பகுதியில் சமா தான காலத்தில் பல தடவைகள் "கிபிர்' விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தியமை குறிப்பிடத்தக்கது. (அ168)

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.