Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா போராட்டக் களத்தில் திருவள்ளுவர்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா போராட்டக் களத்தில் திருவள்ளுவர்..! – ஆங்கிலத்தில் சுப.திருப்பதி (தமிழில்: அ.குமரேசன்)

thiruvalluvar.jpg
 
Spread the love

வள்ளுவன் தந்த சில குறள்கள் இன்றைய கொரோனா போராட்டச் சூழலுக்குப் பொருத்தமாக, குடிமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்களையும், அரசுக்கு இருக்க வேண்டிய பொறுப்புகளையும் சொல்கின்றன.

[எழுத்தாளர் சுப. திருப்பதி தனது நண்பர்கள் ராஜாஜி, வி.வி.எஸ்.ஐயர், கே.சீனிவாசன், கே.எம்.பாலசுப்பிரமணியம், எஸ்.எம்.டயாஸ் உதவியோடு இந்தக் குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்து புதிய விளக்கங்களோடு ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். அவற்றை எனது பாணியில் தமிழாக்கியிருக்கிறேன்.]

அச்சம்:

Digital crisis looms as 'ruthless' fourth industrial revolution ...

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை, அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.

-எதற்கும் அஞ்சமாட்டேன் என்ற வீம்பு வீரம் அறியாமையேயாகும். அறிவுடையோர் எதற்கு அஞ்ச வேண்டுமோ அதற்கு அஞ்சவே செய்வார்கள்.

தொற்று:

Coronavirus: இந்தியாவில் 137 பேருக்கு ...

இலக்கம் உடம்பிடும்பைக்கு என்று கலக்கத்தைக்

கையாறாக் கொள்ளாதாம் மேல்.

-அறிவார்ந்தவர்கள் உடம்பைக் குறிவைத்துத் தாக்குகிற துன்பங்கள் வரவே செய்யும் என்பதைப் புரிந்து வைத்திருப்பார்கள். ஆகவே கலங்கி நொறுங்கிச் செயலிழந்துவிட மாட்டார்கள்.

 

தொற்றுப் பரவல்:

24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 35,900 ...

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்.

-நோய்த் தாக்குதலுக்கு உள்ளான எவரையும் அதன் பாதிப்புகள் தீண்டும். நோய் தொற்றுவதை விரும்பாதவர்கள் யாரும் அது மற்றவர்களுக்கும் தொற்றிவிடக்கூடாது என்ற அக்கறையோடு இருப்பார்கள்.

 

முன்னெச்சரிக்கை:

கேரள மாநிலத்தில் மேலும் 5 பேருக்கு ...

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்

அஃதுஅறி கல்லா தவர்.

-என்ன நடக்கும் எப்படி நடக்கும் என்ற தெளிவு அறிவுடையோருக்கு இருக்கும். அறியாதவர்களோ நிகழ்வதைப் புரிந்துகொள்ளாமலே இருப்பார்கள்.

 

தடுப்பு:

இந்தியாவில் மேலும் 3 பேருக்கு ...

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய்.

-அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் நோயிடம் சிக்க மாட்டார்கள்.

 

தூய்மையும் வாய்மையும்:

Corpn. implementing containment plan in 15 locations - The Hindu

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.

-தண்ணீரைப் பயன்படுத்தி உடல் தூய்மையைப் பராமரிக்கலாம், உண்மை நிலைமைகளைச் சொல்வதுதான் உள்ளத்தூய்மையின் அடையாளம்.

 

பாதுகாப்புக் கவசம்:

Coronavirus: 104 more test positive for covid-19 in Tamil Nadu ...

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.

-முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டுத் தடுக்கத் தவறுகிறபோது வாழ்க்கை நெருங்கிவரும் நெருப்பின் முன் இருக்கிற வைக்கோல் போலாகிவிடும்.

 

சுய கட்டுப்பாடு:

India and coronavirus: lack of access to handwashing facilities ...

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

இன்னுயிர் நீக்கும் வினை.

-தனது உயிரையே இழக்க நேரிட்டாலும் மற்றவர்களின் அரிய உயிருக்குக் கேடுவிளைவிக்கும் வகையில் செயல்படக்கூடாது.

 

தனிமைப்படுத்தல்:

Accepting the New Normal - WHYY

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்

பொருத்தலும் வல்லது அமைச்சு.

-செயல்திறனுள்ள அரசு உரிய வகையில் தனிமைப்படுத்தி, பரிவோடு பராமரித்து, சிகிச்சைக்குப் பின் உறவினர்களோடு முறையாகச் சேர்த்துவைக்கக்கூடியதாக இருக்கும்.

 

ஒத்துழைப்பு:

Assam, Jharkhand report first corona positive cases - india news ...

 

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்.

-சக மனிதர்களுக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டுமென உணர்ந்து செயல்படுவதே உயிரோடு இருப்பதன் பொருள், ஒத்துழைக்க மறுக்கிறவர்கள் பிணமாகவே கருதப்படுவார்கள்.

 

பொறுப்பின்மை:

Coronavirus-Hit Techie Travelled From Bengaluru, Says Minister ...

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவுமோர் நோய்.

-மற்றவர்களிடமிருந்து வரும் ஆலோசனைகளைக் கேட்டும் செயல்படாமல், சொந்த அறிவையும் வளர்த்துக்கொள்ளத் தவறுகிறவர்கள் இருக்கிறவரையில் ஒரு நோயைப் போன்றவர்கள்தான்.

 

கடமை:

Maharashtra: COVID-19 patient among 11 booked for flouting ...

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப

தன்னுயிர் அஞ்சும் வினை.

-மற்ற உயிரினங்களையும் நேசித்துப் பாதுகாக்கிற அருளுள்ளம் படைத்தவர்களுக்கு தனது உயிரை நினைத்து அஞ்சுகிற நிலைமை வராது.

 

பேரிடர் மேலாண்மை:

Disaster Management|பேரிடர் மேலாண்மை - ஓரு ...

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்

ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.

-துன்பம் ஏற்படுத்தக்கூடிய செயல்களைத் தவிர்க்க முயலுதல், அப்படியும் துன்பம் ஏற்பட்டுவிட்டால் தளர்ந்துபோகாமல் கையாளுதல் – இந்த இரண்டுமே திட்டமிட்டுச் செயல்படுகிறவர்களின் வழிமுறைகளாகும்.

 

கட்டமைப்புகள்:

வலுவான மருத்துவ கட்டமைப்பு ...

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்

நல்லாள் உடையது அரண்.

-தேவையான பொருள்கள், கட்டமைப்புகள் அனைத்தும் தயாராக இருந்து, உரிய நேரத்தில் கிடைக்கிறதென்றால் அதுவே மக்களைப் பாதுகாக்கும் அரண்.

 

வழிகாட்டல்கள்:

Biometric Institute Released Updated 2019 Privacy Guidelines | Auraya

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு

-உலகம் முழுக்க எத்தகைய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை முழுமையாகத் தெரிந்துகொண்டு, அவற்றை நமக்கேற்ற முறையில் பயன்படுத்துவதே அறிவு.

 

உலக சுகாதார நிறுவனம்:

What is the World Health Organization (WHO)? | New Scientist

 

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து

எண்ணி உரைப்பான் தலை.

-எந்தக் காலக்கட்டம், எப்படிப்பட்ட இடம் என்ற சூழல்களையும் ஆராய்ந்து சரியான முடிவுக்கு வருவதே தலைமைப் பொறுப்பின் தகுதி.

 

விளக்கு:

கொரோனா-வுக்கு நம் பலத்தைக் காட்ட ...

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.

-அறிவார்ந்தவர்களைப் பொறுத்தவரையில் எல்லா விளக்குகளும் விளக்காகிவிடாது, பொய்மையான நம்பிக்கைகளில் தள்ளிவிடாத விளக்குகளே விளக்காகும்.

 

தேசம்:

என் தேசம் ! என் சுவாசம் ! - A1 Tamil News

 

பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்

அணிஎன்ப நாட்டிற்கு இவ்வைந்து.

பெருந்தொற்றிலிருந்து விடுதலை, போதிய வளம், உற்பத்தி, மகிழ்ச்சி, தற்காப்பு இவை ஐந்தும் ஒரு தேசத்தின் அணிகலன்களாகும்.

 

தற்சார்பு நாடு:

தற்சார்பு இந்தியா Archives | Tamil News Online ...

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்தரும் நாடு.

-ஒரு வளமான நாடு வேறு யாரையாவது நாடித்தான் வளம் சேர்க்க வேண்டும் என்ற நிலைமை ஏற்படாத வகையில் தனது வளங்களைப் பாதுகாத்து வைத்திருக்கும்.

 

புலம்பெயர் தொழிலாளர்:

புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனை ...

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு

இறையொருங்கு நேர்வது நாடு.

-புலம்பெயர்ந்து வருகிறவர்களால் ஏற்படும் எதிர்பாராத சுமைகளைத் தானே தாங்கிக்கொண்டு, தேசத்தைப் பராமரிப்பதற்கான நிதி வருவாயை உறுதிப்படுத்துவதாக நாட்டின் அரசு திகழ வேண்டும்.

 

எல்லைப் பிரச்சினை:

 

 
இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினை ...

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு.

-தீராத பசியும், குணமாகாத நோயும், அழிக்கும் பகையும் தன்னை நெருங்கவிடாமல் இயங்குவது நாட்டிற்குப் பெருமை.

 

முதலீட்டுக்கான இடம்:

 

 
தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் ...

 

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள் வைப்புழி.

-ஏதுமற்றவரின் கொடும் பட்டினியைத் தீர்க்கக்கூடியவராக இருப்போமாயின், அவ்வாறு பசிபோக்கும் இயக்கமே நம் பணத்திற்கான முதலீடாகும்.

 

 
நக்கீரன் கோபால் குடும்பத்திற்கு ...

அ. குமரேசன்

என் வலைப்பூ: அசாக்

Edited by Paanch

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.