Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை நடத்திய ஐ.தே.க. இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை நடத்திய ஐ.தே.க. இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறது

[18 - June - 2007]

* அமைச்சர் மித்ரபால தெரிவிப்பு

1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தை ஏற்படுத்தி அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்து எஞ்சியோரை வடக்கே விரட்டியடித்த ஐ.தே.க.வினர் இன்று தமிழ் மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனரென வர்த்தக நுகர்வோர் அமைச்சர் எச்.ஆர். மித்ரபால தெரிவித்தார்.

தெரணியகலை தெமத தோட்டத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று மனித உரிமைகள், ஜனநாயகம் குறித்துப் பேசிவருவதை எண்ண சிரிப்பு வருகிறது. இந்த நாட்டில் இனவாதத்தை தோற்றுவித்து தமிழ், சிங்கள மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரே.

1977, 1983 இனக்கலவரங்களின் சூத்திரதாரிகளும் அவர்களே.1983 இல் அப்பாவித் தமிழ் மக்களை அடித்து விரட்டி வடக்கே அனுப்பியவர்கள் . அப்பாவித் தமிழர்களை கொன்றும் அவர்களின் சொத்துகளை சூறையாடியவர்கள். தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவர்கள். இது உலகுக்கு தெரியும், ஆனால் இன்று தமிழர்கள் வெளியேற்றப்பட்டதை மனித உரிமை மீறல், இனவாதம் என்று எல்லாம் கூறிவருகின்றனர்.

1983 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நட்ட ஈட்டை வழங்க ஆணைக்குழு நியமித்து நட்டஈடு வழங்கவும் நடவடிக்கை எடுத்தது எமது அரசாங்கமே. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி இதனைச் செய்யவில்லை.

அன்று தமிழ் மக்களுக்கெதிராக செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று தமிழ் மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.

தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று மனித உரிமைகள் பற்றிப் பேசி வருகின்றனர். இதனை இந்த நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது அரசும் தமிழ் மக்களுக்கு உரியவற்றைச் செய்து வருகின்றது. வடக்கு, கிழக்கு அபிவிருத்தி வேலைகள் தொடர்கின்றன.

விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுகளை நடத்த அரசு தயார். ஆனால், விடுதலைப் புலிகள் ஒரு பலமான இயக்கமாக இயங்குவதால் அவர்களை பலவீனப்படுத்தி பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதே அரசின் நோக்கம்.

அதனால்தான் தற்போது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இராணுவ நடவடிக்கை நிரந்தரமல்ல. பேச்சுவார்த்தை மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கிறார்.

பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். ஒரு நாட்டில் பொருளாதார கஷ்டங்கள் ஏற்படுவது வழமை. அதனை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியா, சீனா போன்ற நாடுகள் பல கஷ்டங்களின் மத்தியில் தான் அபிவிருத்தியடைந்துள்ளன

தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரேயொரு வித்தியாசம் மகிந்தர் பஸ்சில ஏற்றி அனுப்பினேர் அனுமார் கோச்சியில ஏற்றி அனுப்பினேர் அவ்வளவுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.