Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Facebook தமது இரத்த தான அம்சத்தினை இலங்கையில் அறிமுகப்படுத்திட சுகாதார அமைச்சுடன் கைகோர்க்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Facebook தமது இரத்த தான அம்சத்தினை இலங்கையில் அறிமுகப்படுத்திட சுகாதார அமைச்சுடன் கைகோர்க்கிறது

 

மக்களுக்கு இரத்த தானம் செய்வதை எளிதாக்கும் முயற்சியாக. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் ஆதரவுடன் சுகாதார அமைச்சின் தேசிய இரத்த பரிமாற்றுச் சேவையுடன் கூட்டிணைந்து Facebook தமது தளத்தில் இரத்த தானத்திற்கான புதியதோர் அம்சத்தினை அறிமுகப்படுத்தியது. இக்கூட்டிணைவு முயற்சியின் ஒரு பகுதியாக இன்று வரை 24 இரத்த வங்கிகள் இதில் பங்கேற்று செயற்படுகின்றன.

உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கிலான உயிர்கள் பாதுகாப்பானதும் நிலையானதுமான இரத்த விநியோக அணுகலில் தங்கியுள்ளன. கொவிட் 19 தொற்றின் பரவலானது மக்கள் எங்கு எப்படி இரத்த தானம் செய்கிறார்கள் என்பதையும் மாற்றியுள்ளது. வழமையான இரத்த பரிமாற்றத்தின் போது அல்லது சாலை விபத்துக்கள், சிக்கலான அறுவைச்சிகிச்சைகள் அல்லது கொவிட் 19 தொடர்பான சிக்கல்கள் போன்ற அவசர நிலைமைகளாக இருந்தாலும் உயிரைக்காப்பாற்றிட இரத்தத்தைப் பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியம். இதைக் கருத்திற்கொண்டு ஆர்வமுள்ளோரை இரத்த வங்கிகளுடன் இணைக்கவும் ஆதரவு மிக்கதோர் சமூகத்தினை கட்டியெழுப்பிட உதவிடவும் Facebook இன் இந்த இரத்த தான அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது.

“சமூக ஊடகங்களினால் உலகம் பெருமளவில் இணைக்கப்பட்டு வருகிறது” என இலங்கையின் சுகாதார அமைச்சர் கௌரவ. பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார். “சுகாதாரநல முறைமையை டிஜிட்டல்மயமாக்கவும் வலுப்படுத்தவும் மற்றும் அறிந்திருத்தலையும், இரத்த தானம் செய்தலையும் இலகுவாக்கிடவும் Facebook மற்றும் பங்காளர்களுடன் இணைந்து செயற்பட எதிர்ப்பார்க்கிறோம். இதில் sign up செய்வதன் மூலம் சமூகத்தின் நலனுக்காக தங்கள் பங்களிப்பினை வழங்கிடக் கோரி முடியுமானவர்களையும் விருப்பமுள்ளவர்களையும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புகள் மற்றும் சமூகத்தின் சக்தியால் Facebook இன் இரத்த தான அம்சம் உலகம் முழுவதிலும் தன்னார்வ இரத்த தானங்களை அதிகரிக்க உதவியது. இந்த இரத்ததான அம்சம் (Facebook Blood Donations feature) 18இலிருந்து 55 வயதுக்கு இடைப்பட்ட எவருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்கும். நீங்கள் இரத்த தானம் செய்வதற்கு ஆர்வமுடையவர் எனின் நீங்கள் ஒருமுறை sign up செய்தீர்களேயானால் உங்களுக்கு அருகில் இருக்கும் இரத்த வங்கியில் இரத்தம் தேவைப்படும் போது உங்களுக்கு அறியத்தரப்படும்(notifications). எனவே

இவ்வம்சத்தின் மூலம் உங்களை அணுகவும், உங்களால் இரத்த தானம் செய்திடவும் உங்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

Facebook இன் இரத்த தான அம்சத்தின் அறிமுகம் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஓஷத சேனாநாயக்க, பணிப்பாளர் நாயகம் - தொலைத்தொடர்பு ஒழுங்குமறை ஆணையம், டாக்டர். ஜீ.எஸ்.கே. தர்மரத்ன, பிரதி பணிப்பாளர் நாயகம் - சுகாதார சேவைகள்(ஆய்வுகூட சேவைகள்) மற்றும் டாக்டர். பாலித கருணப்பெம, பணிப்பாளர் - சுகாதார மேம்பாட்டு பணியகம்., ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

“தேசிய இரத்த பரிமாற்றுச் சேவை, ஊதியம் பெறாமல் தன்னார்வத்துடன் இரத்த தானம் செய்பவர்களால் இயக்கப்படுகிறது.” என பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய இரத்த பரிமாற்றுச் சேவையின் பணிப்பாளரான டாக்டர் லக்ஷ்மன் எதிரிசிங்ஹ தெரிவித்தார். “Facebook இன் இரத்த தான அம்சமானது நாடு முழுவதும் இரத்த தானம் செய்பவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள உதவுகிறது. விஷேடமாக இந்த கொவிட் 19 தொற்றுநொய் பரவலின் போது எங்கள் சேவைக்கு ஒரு மதிப்புமிக்க சொத்தாகவும் இவ்வம்சம் கருதப்படுகிறது.” என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் ஒன்லைனின் மூலம் நம்பகமான சுகாதார தகவல்களை மக்கள் அணுகுவதை உறுதி செய்வதற்காக Facebook, சுகாதார மேம்பாட்டு பணியகம் மற்றும் உள்நாட்டு அமைப்புக்களுடன் கூட்டிணைந்துள்ளது. இது தவறான சிகிச்சைகள் உட்பட தவறான தகவல்களின் பரவலைத் தடுக்கவும் உதவிடும். சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் ஆதரவுடன் Facebook, சுகாதார நிபுணர்களுக்கு பயனுள்ள சுகாதார தகவல் தொடர்புகளுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்த பயிற்சிகளை வழங்கியுள்ளது. மனநலம் மற்றும் நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வினை அதிகரித்திட தேசிய மனநல நிறுவனத்துடன் கு Facebook மிகவும் நெருக்கமாக செயற்படுகிறது.

“தேவைப்படும் நேரத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவளித்திடும் சமூகங்களை உருவாக்கிட Facebook எதிர்ப்பார்க்கிறது.” என கு Facebook இன் இலங்கைக்கான கொள்கை நிகழ்வு முகாமையாளரான யசஸ் விசுத்தி அபயவிக்ரம தெரிவித்தார். “உலகளாவிய தொற்று நோய் பரவல் காரணமாக அதிகமான மக்கள் சுகாதார விழிப்புணர்வினை உருவாக்கிட மற்றும் ஆதரவு அமைப்பினை உருவாக்கிட டிஜிட்டல் தளங்களை பயன்படுத்துகின்றன. இரத்த தானம் செய்தலை எளிதாக்குவதற்கும் அதிகளவான மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான இரத்த விநியோகத்துக்கான அணுகலை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் மற்றும் பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நாம் பெருமகிழ்ச்சியடைகிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு உலகளாவிய ரீதியில் 85 மில்லியனுக்கும் அதிகமான Facebook பயனர்கள் இரத்த தான அம்சத்தின் மூலம் அறிவிப்புக்களைப் பெற பதிவு செய்துள்ளனர். இவ்வம்சமானது தற்போது இலங்கை உள்ளடங்கலாக 28 நாடுகளில் கிடைக்கக்கூடியதாய் உள்ளது. மேலும் அறிய பிரவேசியுங்கள்: www.facebook.com/donateblood.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.