Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதவி உயர்வுகள் கிடைப்பது போன்று தடை உத்தரவுகள் கிடைக்கின்றன-இரா.சாணக்கியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதவி உயர்வுகள் கிடைப்பது போன்று தடை உத்தரவுகள் கிடைக்கின்றன’-இரா.சாணக்கியன்

 
1-4.jpg
 22 Views

எதிர்வரும் 3ஆம் திகதி பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலாக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் பங்கேற்பதற்கு நீதின்றத்தினால் தனக்கு தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மூன்றாம் திகதி முதல் ஆறாம் திகதி வரையிலான போராட்டத்தில் கலந்து கொள்வதனை தடை செய்யுமாறு களுவாஞ்சிக்குடி பொலிஸினால் நீதிமன்றங்களை நாடி பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவு என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் வேடிக்கையான விடயம் என்னவென்றால், இந்த நிகழ்வில் நான் பங்குபெறுவதை தடுப்பதற்கு கொரோனா காலப்பகுதியினை காரணம் காட்டி, சமூக இடைவெளி பேணப்பட வேண்டும், சமூக இடைவெளியினை பேணாமல் ஆர்ப்பாட்டங்கள் செய்யப்படக் கூடாது எனக் கூறி நீதிமன்றங்களை நாடியுள்ளனர்.

No photo description available.

கொழும்பில் கிழக்கு முனையம் துறைமுகத்தினை இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு காவல்துறையினரால் தடை உத்தரவு வழங்கப்படவில்லை. ஏனென்றால் அது அரசாங்கத்துடன் தொடர்புடைய விடயம். கடந்த காலத்தில் அரசியல்வாதிகளுடைய விடுதலை குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையானை விடுதலை செய்த போது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இணைந்து முன்னெடுத்த வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு  எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அத்துடன் கொரோனா அதிகமாக இருந்த காலப்பகுதியில் கூட இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் அமைச்சர்கள் பதவிப்பிரமானம் செய்து கொண்டதற்கு நடைபவணி மேற்கொண்டமைக்கு தடை உத்தரவு விதிக்கப்படவில்லை.

ஒரு ஜனநாயக விரோதமான அரசாங்கத்திற்கு எதிராக நாங்கள் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு தடை உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை ஒரு வேடிக்கையான விடயம்.

இது நான் எதிர்பார்த்த ஒரு விடயம் தான். எனக்கு பதவி உயர்வுகளோ அல்லது பதவிகளோ கிடைப்பது போன்று நீதிமன்ற தடை உத்தரவுகள் கிடைத்துக் கொண்டிருகின்றன. நான் நினைகின்றேன் கடந்த  ஆறுமாத காலமாக 10 இற்கும் மேற்பட்ட தடை உத்தரவுகள் எனக்கு கிடைத்துள்ளன. தடை உத்தரவுகள் கிடைப்பது தற்போது மதியம் உணவருந்துவது போல ஒரு இயல்பான விடயமாக எனக்கு மாறியுள்ளது.

இதில் குறிப்பாக ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு இனங்களுக்களுக்கெதிராக, மதங்களுக்கு எதிராக பிரச்சினைகளை தூண்டும் விதமாக நாங்கள் செயற்படுவோம் எனக்கூறி இந்த தடை உத்தரவினை எடுத்திருந்தாலும் கூட, உண்மையில் அப்படியாக இருந்தால் இந்த நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராகவே இந்த தடை உத்தரவு எடுக்கப்பட வேண்டும்.

இனங்களுக்கு எதிரான குழப்பங்களை அவர்களே செய்கின்றனர். அதாவது எங்களுடைய தமிழ் ஆலயங்களில் மத வழிபாடுகள் செய்வதை தடை செய்து, அந்த இடங்களில் பௌத்த விகாரைகளை அமைத்து வருகின்றனர். இந்த அரசாங்கம், இந்த ஜனாதிபதி, ஆளுநர் போன்று தொல்பொருள் அதிகாரிகளே இனங்களுக்கெதிரான பிரச்சனைகளை தூண்டிவிடுகின்றனரே தவிர நாங்கள் செய்யவில்லை.

இந்த போராட்டம் கூட அமைதியான போராட்டம். 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை பல்வேறு விடயங்களை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான நீதி, ஜனாசா எரிப்பு, மாவீரர் தினத்தன்று முகப்புத்தகத்தில் தலைவர் பிரபாகரன் தொடர்பாக பதிவிட்ட 40 இளைஞர்களின் விடுதலை, தோட்டத்தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய் சம்பள விவகாரம் உள்ளிட்ட ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது” என்றார்.

 

https://www.ilakku.org/?p=40974

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.