Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பின் தவறான போக்கினால் ஈழத் தமிழர்களுக்குக் கிட்டும் நன்மை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-06-19

கொழும்பின் தவறான போக்கினால் ஈழத் தமிழர்களுக்குக் கிட்டும் நன்மை

தலைநகர் கொழும்பின் தங்குமிட விடுதிகளில் இருந்து அதிகாலை வேளையில் படையினராலும் பொலிஸாராலும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழர்கள், அந்தக் கட் டாயத்தின்போது தாங்கமுடியாத பெரும் மன உளைச்சலுக் கும், அசௌகரியத்துக்கும், நெருக்கடிக்கும், சிக்கலுக்கும் ஆளானார்கள் என்பது உண்மைதான். ஆனால் அரச அதி காரவர்க்கத்தின் அந்த அறிவிலித்தனமான செயற்பாட்டின் பெறு பேறாக, தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் எழுந்த அதிர்வலைகள், அந்த நடவடிக்கையால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் பலருக்கும் சாதக மான புதிய நிலைப்பாட்டைத் தோற்றுவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இலங்கை அரசு, தமிழர்களுக்கு எதிராக இனப்பாகு பாட்டுக் கொள்கைப் போக்கைத் தீவிரமாகக் கடைப்பிடிக் கின்றது என்பதை முத்திரை குத்தி அப்பட்டமாக நிரூபிக் கும் சம்பவமாக இப்படி ஆள்களைப் பலவந்தமாகத் தலை நகரிலிருந்து வெளியேற்றும் செயல் அமைந்து விட்டது. இத்தகைய பெரும் தவறை இழைத்துவிட்டு, அரசின் சார் பில் அதற்காகப் பிரதம மந்திரியே வருத்தம் தெரிவித்த பின் னரும், அந்த நடவடிக்கை நியாயமானதே என்று சாதிக்கி றது இலங்கை அரசின் பாதுகாப்புத் தரப்பின் உயர்பீடம். இவ்வாறு இன ஒதுக்கல் செயற்பாட்டை நியாயப்படுத்தும் பிரகிருதிகளின் கைகளில் இலங்கை அரசின் பாதுகாப்பு அதிகாரம் இருக்கும் வரையில், இனப்பாகுபாடும், சிறு பான்மையினர் ஒடுக்கப்படுதலும் இலங்கையில் நிரந்தர விவகாரங்களாக இருக்கும் என்பதை சர்வதேசம் புரிந்து கொள்ளும் நிலைமையும் இப்போது ஏற்பட்டிருக்கின்றது.

இலங்கை அரசின் இத்தகைய பாகுபாட்டுப் போக்குக் காரணமாக, தற்சமயம் மேற்கு நாடுகள் தத்தமது தேசங் களில் அரசியல் புகலிடம் அல்லது அகதி அந்தஸ்துக் கோரி யுள்ள ஈழத் தமிழர்களை, அவர்களது விண்ணப்பங்களை நிராகரித்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே அகதி அந்தஸ்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, மேன்முறையீட் டின் பேரில் காத்திருக்கும் தமிழர்களைக் கூட, இலங்கை யில் தற்போது ஏற்பட்டு வரும் அசாதாரண சூழ்நிலை காரண மாக இனிமேல் இப்போதைக்கு திருப்பி அனுப்பவே முடியாத நிலைமை மேற்கு நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.

போதாக்குறைக்கு கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படும் அவலத்துக்கு உள்ளான பல நூறு தமி ழர்கள் உட்பட எதிர்காலத்தில் மேற்கு நாடுகளுக்குச் சென்று அகதி அந்தஸ்தும் அரசியல் தஞ்சமும் புதிதாகக் கோரக் கூடிய ஈழத் தமிழர்களை, "இலங்கையில் நிலைமை நன் றாக இருக்கின்றது. நீங்கள் அங்குபோய் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழலாம்' என்று தெரிவித்து திருப்பி அனுப் பக்கூடிய சந்தர்ப்பம் எந்த மேற்கு நாட்டுக்கும் இப் போதைக்குக் கிட்டவே கிட்டாது என்பதும் தெளிவு. அத் தகைய உறுதிப்பாட்டை இலங்கை அரசு தவறாது பேணும் என்பதும் திண்ணம்.

அதாவது

இனப்பாகுபாட்டுப் போக்கை சர்வதேசத்தின் கடும் ஆட்சேபத்துக்கு மத்தியிலும் பகிரங்கமாக நடைமுறைப் படுத்த முயலும் கொழும்பின் செயற்பாடு, புலம் பெயர்ந்த மேற்கு நாடுகளில் ஈழத் தமிழர்களின் அகதி அந்தஸ்து விண்ணப்பங்களை நிராகரிக்கவே முடியாத நிரந்தரத் தளையை முட்டுக்கட்டையை அந்தந்த நாடுகளுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது என்பதுதான் இன்றைய யதார்த் தம்.

கொழும்பிலும் பிற இடங்களிலும் இலங்கை அரசின் இனக்குரோதக் கெடுபிடிப் போக்கால் தமிழர்கள் அவதிப் பட்டு அல்லாடுவதைக் கண்டு பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே மேற்கு நாடுகளுக்கு அது குறித்து விளக்கமளித்து வருகின்றார் என்பதும் கவனிக்கத்தக்க விடயமாகும்.

""இந்தியத் தூதரகத்தோடும் இவ்விடயம் குறித்துப் பேசியிருக்கிறேன். கொழும்பில் அவலப்படும் தமிழர்கள், இத்தகைய பலவந்த வெளியேற்றக் கொடூரங்களையும் நெருக்கடிகளையும் தவிர்ப்பதற்காக இந்தியாவில் போய் தங்கியிருக்க விரும்புவார்கள். எனவே அப்படி முயற்சிக் கும் சகல தமிழர்களுக்கும் தாராள மனதோடு "விஸா' வழங்கி ஒத்துழையுங்கள் என்று இந்தியத் தரப்பை வலியுறுத்திக் கேட்டிருக்கிறேன்'' எனத் தமக்கு நெருக்கமானவர்களி டம் தகவல் வெளியிட்டிருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர்.

புலம் பெயர்ந்த நாடுகளில் ஈழத் தமிழர்கள் தம்மை நிலைநிறுத்தி, ஸ்தாபித்து, உறுதிப்படுத்திக் கொள்வதன் விளைவு தாயகத்தில் தமிழர்களின் உரிமைப் போராட்டத் துக்கு உந்து சக்தியாகவும், ஊக்கமளிக்கும் விவகாரமாக வும் அமையும் என்பது வெளிப்படையாக நமக்குத் தெரிந்த விவகாரமே.

தன்னுடைய தவறான செயற்பாடுகள், நடவடிக்கைகள் மூலம் மேற்கு நாடுகளுக்கு ஈழத்தமிழர்கள் பெரும் எண் ணிக்கையில் இடம்பெயர்ந்து சென்று, அங்கு நிலை கொண்டு, தம்மை வலுப்படுத்தி, அதன் மூலம் தாயக மண் ணில் விடுதலைப் போராட்டத்துக்கு அவர்கள் உயிரும், உணர்வும், உரமும் அளிக்க இதுவரை தாராளமாக வாய்ப் பளித்து வசதி செய்து கொடுத்து வந்திருக்கின்றது கொழும்பு அரசு.

அந்தப் போக்கைத் தொடர்வதில் கங்கணம் கட்டி முழு முனைப்புடன் நிற்கும் கொழும்பு நிர்வாகத்துக்கு உண் மை யில் ஈழத்தமிழர்கள் அதற்காக நன்றி கூறவேண்டியவர்களே.

நன்றி - உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.