Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தவை ஜனாதிபதியாக்க புலிகளுக்கு பணம் கொடுத்த பலர் அரசில் அங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவை ஜனாதிபதியாக்க புலிகளுக்கு பணம் கொடுத்த பலர் அரசில் அங்கம்

[19 - June - 2007]

* ரிரான் அலஸ் கூறுகிறார்

கே.பி.மோகன்

மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்காக புலிகளுக்கு பணம் கொடுத்து உதவிய பலர் அரசாங்கத்தில் அங்கம் வகித்து வருவதாக விமான நிலைய விமான சேவைகள் திணைக்களத்தின் முன்னாள் தலைவர் ரிரான் அலஸ் நேற்று திங்கட்கிழமை மாலை அவரது இல்லத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது குற்றம்சாட்டினார்.

கடந்த சில நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவர் கொழும்பு கொம்பனித் தெருவிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததோடு சுகம் பெற்று நேற்று அங்கிருந்து வெளியேறிவந்த பின்னரே பொறளையிலுள்ள அவரது வீட்டில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

என்னை தனது சகோதரராக ஏற்றுக் கொண்டிருந்த ஜனாதிபதி தன்னுடன் இருந்த முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் மங்கள சமரவீரவை அரசியல் ரீதியில் பழிவாங்கியதுடன் நானும் போது மோசமான வகையில் பழிவாங்கப்பட்டேன். ஏன் இவ்வாறு நடந்து கொண்டனர் என்பது சிலருக்கு தெரியும். உயர் மட்டத்தில் இடம் பெற்ற பல சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு தொடர்புபடுத்தி எங்களையும் பங்காளர்களாக்க முயற்சித்தனர். அதற்கு இடமளிக்காத போதே மங்கள சமரவீர, ஷ்ரீபதி சூரியாராச்சி ஆகியோருடன் என்னையும் அரசியல் குற்றம் சுமத்தி பழிவாங்கினர்.

இந்த நடவடிக்கைகளுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர்களை விட்டு ஒதுங்கும் படியும் எனக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது. அமைச்சர் மங்களவை விட்டு விலக முடியாதென தெரிவித்த பின்னர் விமானநிலைய விமான சேவைகள் திணைக்கள பதவியிலிருந்து நான் அகற்றப்பட்டேன். பின்னர் புலிகளுக்கு பணம் கொடுத்த விடயத்தை மறைப்பதற்காக சட்ட நடவடிக்கையென பொலிஸாரை விட்டுத் துன்புறுத்தி நோயாளராக்கின்றனர்.

எனது வெளிநாட்டு பயணங்களை தடுத்தனர். சிலர் வீட்டை உடைத்தார்கள். இதுபோன்று மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. பொலிஸாருக்கு அளித்துள்ள வாக்கு மூலத்தில் புலிகளுக்கு பணம் கொடுத்து பதவிக்கு வந்தது தொடர்பாக கூறி இருந்தேன்.

மேலும், பல இரகசியங்கள் உள்ளன. அவற்றை புள்ளி விபரங்களுடன் விரைவில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவேன்.

நான் மங்களவை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன். அதேபோல் ஷ்ரீபதியுடனான சகவாசத்தையும் விடமாட்டேன். அரசாங்கத்தின் ஊழல் மோசடி நடவடிக்கைகளையும் வெளிப்படுத்தாமல் இருக்கமாட்டேன்.

என்னை விலை கொடுத்து வாங்க முடியாது. எனது பத்திரிகை நிறுவனத்தை மூடிவிட்டனர். நிறுவன வங்கிக் கணக்கை முடக்கி விட்டனர். இதனால், நான் பாரிய நிதி நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருக்கிறேன் என்றார்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.