Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சந்திரிகா மீண்டும் அரசியலில் ஈடுபட ஜனாதிபதி வழங்கிய உயர் பாதுகாப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிகா மீண்டும் அரசியலில் ஈடுபட ஜனாதிபதி வழங்கிய உயர் பாதுகாப்பு

[19 - June - 2007]

தற்போது லண்டனில் வசித்து வரும் ஷ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகளாகிய யசோதாவுக்கு கடந்த 15 ஆம் திகதி லண்டனில் திருமணம் நடந்தது. இவ்வாறு யசோதாவை மணம் முடித்திருப்பவர் றொஜர் வாக்கர் என்னும் வைத்திய கலாநிதியாகும். வெள்ளை இனத்தவரும் பிரிட்டிஷ் பிரஜையுமாகிய இவர் லண்டனிலுள்ள சென்ற் ஜோன் வைத்தியசாலையில் தற்போது பணியாற்றி வருகின்றார். கடந்த 15 ஆம் திகதி லண்டனில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இவருடைய திருமண வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் உறவினர்கள் மட்டுமன்றி ஷ்ரீலங்காவையும் லண்டனையும் மற்றும் வெளிநாடுகளையும் சேர்ந்த பிரமுக நண்பர்களும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவருடைய மகளின் திருமணத்தின் பின்னர் ஷ்ரீலங்காவிற்கு வந்து மறுபடியும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாகவும் இதற்காக வெகு விரைவில் அவர் ஷ்ரீலங்காவிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கான முக்கிய ஏற்பாடாக ஷ்ரீலங்காவிற்கு வந்து வசித்துக்கொண்டு அரசியலில் ஈடுபடப்போகும் அவருக்கு வேண்டிய பாதுகாப்பை வழங்கும்படி அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியதாகவும் இதற்கேற்ப முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு வேண்டிய பாதுகாப்பை வழங்கும்படி ஜனாதிபதி ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கேற்ப ஜனாதிபதியின உத்தரவின் பேரில் 69 பாதுகாப்புப் படை உத்தியோகத்தர்கள் அடங்கிய பாதுகாப்புக் குழுவினர் ஷ்ரீலங்காவுக்கு வரப்போகும் சந்திரிகாவுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல்களை லண்டனிலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் அரசியல் நடவடிக்கைகளை மறுபடியும் ஆரம்பிப்பதற்கு ஷ்ரீலங்கா வருவதற்காக உரிய பாதுகாப்பை வழங்கியிருப்பதால் எதிர்காலத்தில் இந்நாள் ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியும் ஒரு இசைவான முறையில் அரசியல் நடவடிக்கைகளைத் தொடருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

லங்காதீப:17.06.2007

தினக்குரல்

ஒரெ குட்டையில் ஊரிய மட்டைகள் சந்திரிக்கா என்றால் என்ன, மகிந்தா, ரணில் மாறி மாறி பதவிகளிலிருந்து காலத்தைக்கடத்தி தமிழர்களை நசிக்கு அழித்து இல்லாமல் பண்ணுவதே இவர்களின் ஓற்றுமை

யார் கூடுதலாக அழிப்பது என்பது தான் போட்டி....

கேட்டுப்பெறுவதல்ல சுதந்திரம்.....? காட்டுவாசிகளின் கீழ் தமிழர்களின் தலை? தலையை தொடர்ந்து வைத்திருப்பதில் எம்மில் சிலருக்கும் மகிழ்ச்சி?

வான் படையினால் உலகம் இருட்டில் இருந்து சிறிது வெளிச்சத்திற்கு வந்துள்ளது......

உலக மனிதவுரிமை உலகை விழிப்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளது?

தொடரட்டும் எம் போரட்டங்கள்......

சந்திரிக்கா பழைய குருடி கதவைத்திறவடி?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Wed Jun 20 6:50:16 EEST 2007

சந்திரிகாவின் பாதுகாப்பு அதிகரிப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கான பாதுகாப்பு அலுவலர்களின் எண்ணிக்கை 7 இல் இருந்து 69 ஆக உடனடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை குமாரதுங்கவின் தனிப்பட்ட உதவியாளரான பி.திசாநாயக்க வெளியிட்டுள்ளார். கடந்த மே மாதம் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்றுக்கமைய அவரது பாதுகாப்பு அலுவலர்களின் எண்ணிக்கை 198 இல் இருந்து 7 ஆகக் குறைக்கப்பட்டது.

தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இலங்கையில் தமது நடமாட்டங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருப்பதாக குமாரதுங்க சமீபத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியி ருந்தார். (ப)

உதயன்

சந்திரிகா நாடு திரும்பியதும் மகிந்த அரசுக்கு பலத்த நெருக்கடி ஏற்படும்.

ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்கள மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவதற்கான ஏற்பாடுகள் மெற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சூரியாராட்சி ஆகியோர் உருவாக்கியுள்ள சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவு என்ற புதிய கட்சியின் முக்கிய பதவியினையும் சந்திரிகா ஏற்றுக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதன் மூலம் அரசாங்கத்தரப்பில் உள்ள மேலும் பல சுதந்திர கட்சியினரை தமது கட்சியில் இணைத்துக் கொள்ள முடியும் என மங்கள சமரவீர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்களை மீண்டும் பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசிய கட்சி முழுமையான ஆதரவை வழங்க முன்வந்துள்ளது

இதன் ஒரு கட்டமாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளதாகவும் அவருடைய இடத்திற்கு சந்திரிகா பண்டாரநாயக்கா நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுப்பதற்கு எத்தகைய உதவிகளையும் தமது கட்சி வழங்கும் என்று ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவிடம் உறுதியளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது

அடுத்த மாதம் நாடு திரும்பவுள்ள சந்திரிகாவின் புதிய அரசியல் வியூகங்கள் மகிந்த ராஜபக்சவின் அரசுக்கு பலத்த நெருக்கடிகளை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது

தற்போதை அமைச்சரவையில் உள்ள சந்திரிகாவின் விசுவாசிகள் பலர் சந்திரிகா தலைமையிலான புதிய அணிக்கு மாறுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

-Pathivu-

Edited by யாழ்வினோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.