Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேசிய கீதமும் சைமன் காசிச் செட்டியின் நினைவும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தேசிய கீதமும்
சைமன் காசிச் செட்டியின் நினைவும்.
 
84490013_2665492250153699_26899658316930
 
தேசிய கீதம் தோன்றுவதற்கு முன்னரே,இலங்கையின் நீளத்தையும் சுற்றளவையும் அளந்து அறிவித்தவர் ஒரு தமிழர் என்ற நினைவை இந்நாட்களில் பதிவிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
'இலங்கையின் அட்ச தேசாந்திரத்தையும் நீள அகலத்தையும், சுற்றளவையும் முதன்முதலாக ஐரோப்பிய நில அளவையாள நிபுணர்கள் வியக்கும் வகையில் அளந்து கணித்து நிதானமாக அறிவித்த பெரியார் சைமன் காசிச்செட்டி என்னும் தமிழரே.
இன்றைக்கு உடனுக்குடன் வரும் சட்ட மாற்றங்களை அறிக்கைகளை வெளியிடும் அரசாங்க வர்த்தமானி (கசற்) வருவதற்கு முன்னோடி அவரே.
பிரித்தானிய அரசுக்கு முதலே, இலங்கை பற்றிய செய்திகளையும், எல்லாவிதமான தகவல்களையும் திரட்டி 'சிலோன் கசற்றியர்' என்று நூலாய் வெளியிட விரும்பினார்.
அப்போது இவர் புத்தளத்தில் மாவட்ட முதலியாராகப் பணி புரிந்து கொண்டிருந்தார்.
தமது அவவாவை அன்றைய தேசாதிபதி சேர் ரொபேட் வில்மட்டுக்கு விண்ணப்பிக்க, அவரும் பாராட்டி இவரை ஊக்குவித்து, குடியேற்ற நாட்டு மந்திரிக்கும் அறிவித்தார்.
செட்டியார் தயாரித்த நானாவித செய்தித் தொகுப்பான 'சிலோன் கசற்றியர்' 1834 இல் வெளிவந்தது.
இலங்கைப் பிரதம நீதியரசர் சேர் சார்ள்ஸ் மார்ஷல் பிரபு, பிரதம படைத்தலைவர் சேர் ஜோன் வில்சன் என்போர் அவரைப் பாராட்டி மகிழ்ச்சியுடன் வாழ்த்தி, மதிப்புரையும் வழங்கி 150 பவுண் அன்பளிப்பாக வழங்கியிருந்தனர்.
பின் நாட்களில் வந்த கசற் எனப்படும் வர்த்தமானிக்கு முன்னோடி இதுவேயாகும்.
செட்டியாரின் புகழ் இலண்டன் வரை பரவியது.
இலங்கை வாழ் தமிழன் இவ்வாறொன்றைப் படைத்தான் என்பது பிரமிப்புக்குரியதாயிற்று'.
-தகவல்கள்:
-o க. சி. குலரத்தினம்
செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்
-oகட்டுரை (தலையங்கம் நினைவில்லை) பேரா. கைலாசபதி.
இலங்கையில் எத்தனையோ மாவட்ட முதலிகள் அக்காலத்தில் பணியிலிருந்தும், நில அளவையாளர்களிருந்தும் முழு இலங்கைக்குமான வர்த்தமானி பற்றியும், முழு இலங்கைக்கான நில அளவை வரைபடத்தையும் உருவாக்கியவர் சைமன் காசிச் செட்டி என்ற தமிழரே.
ஒருகாலத்தில், போத்துக்கேயரும், ஒல்லாந்தரும் ஒருவர் பின் ஒருவராக ஆண்ட இலங்கைக் கரை நாடுகளின் பரப்பு 10,520 சதுர மைல் என்றும், நடுவில் மலைநாடு எனக் கண்டியரசன் ஆட்சிக்குட்பட்ட நிலம் 14,144 சதுர மைல் என்றும் நவீன அளவைக் கருவிகள் எவையுமின்றி அளந்தறிந்து கூறிய பெருமையும் இலங்கையர் என்று தனை நினைந்து இப்பணியை ஆற்றிய சைமன் காசிச் செட்டி என்ற தமிழருக்குரியதே.
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழில் பாடினால், தமிழ் ஈழம் தோன்றிவிடும் என்று சொல்பவர்களுக்கு
இந்த வரலாறுகள் தெரியுமோ தெரியாது.
அவர்களை அழைத்து, தமிழர் திருநாள் கொண்டாடும் எம் தமிழர்களாவது அன்னாருக்குச் சொல்வார்களாக.
நன்றி - வரதராஜன் மரியாம்பிள்ளை - நியூசிலாந்து
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.