Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களின் தனித்துவ உரிமைகளை ஏற்காத தீர்வினால் பயனே இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-06-20

தமிழர்களின் தனித்துவ உரிமைகளை ஏற்காத தீர்வினால் பயனே இல்லை

""நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மாவட்ட மட்டத்திலேயே பகிர்ந்தளிக்கலாம் என்ற தனது நிலைப்பாட்டில் இருந்து பிரதான ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விட்டுக்கொடுத்து இறங்க வேண்டும். பெரும்பாலான கட்சிகள் முன்வைத்துள்ள மாகாண மட்ட அதிகாரப்பரவலாக்கல் திட்டத்தை அக்கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காணும் முயற்சி முறிந்துபோகும்.''

இப்படித் தெரிவித்திருக்கின்றார், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆலோசனைகளை முன்வைப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருமே தீர்வைக் கொண்டு வருவதற்கு அச்சாணியாகத் திகழ வேண்டியவர்கள் என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் திஸ்ஸ விதாரண, அத்தகைய பொறுப்பை சம்பந்தப்பட்டோர் உணராமல் இருப்பது குறித்துத் தமது கவலையையும், அதிருப்தியையும் கூட வெளியிட்டிருக்கின்றார்.

ஆனால், அவர் இப்படி ஆளும் தரப்பின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பார்த்துக் குறைகூறும் விதத்தில் கருத்து வெளியிடுகின்றமையை நோக்கும்போது "சட்டியைப் பார்த்து பானை கறுப்பு என்றதாம்' என்ற பழமொழியே தமிழர்களுக்கு நினைவுக்கு வருகின்றது.

ஈழத் தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை ஆதங்கங்களை வேணவாக்களை புரிந்து கொள்ளவே முடியாத அல்லது புரிந்து கொள்ள எத்தனிக்காத சில இடது சாரித் தலைவர்கள் தங்களை நடுநிலையான அதி மேதாவிகளாகக் கருதிக்கொண்டு, பௌத்த சிங்களப் பேரினவாதிகளைப் பார்த்து நியாயம் உரைப்பதும், தத்துவம் பேசுவதும் மிகுந்த வேடிக்கையான விவகாரமாகும்.

அமைதித் தீர்வுக்கு வழி என்ன என்பது குறித்து ஆளும் தரப்பின் பிரதான கட்சிக்கு "நல்லுபதேசம்' செய்ய முயலும் அமைச்சர் திஸ்ஸ விதாரண முதலில் அந்தப் பிரச்சினையின் அடிப்படைகளையும், பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் தமிழ் தேசத்தின் நியாயமான அபிலாஷைகளையும் அதன் பின்னணியில் புதைந்து கிடக்கும் நீதி நியமங்களையும் தாம் புரிந்து கொள்வது அவசியமாகும்.

மாவட்ட மட்டத்தில் அதிகாரத்தைப் பகிரும் திட்டம் எண்பதுகளின் முற்பகுதியில் பிரேரித்துத் தோல்வியடைந்து போன மூடப்பட்ட அத்தியாயம். அதை, ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தூக்கிப்பிடித்து நிற்பது இணக்கத்தீர்வுக்கு வழி சமைக்காது என்று அடித்துக் கூறும் அமைச்சர் திஸ்ஸ விதாரண, ஆகையினால் மாகாண மட்ட அரசியல் தீர்வுக்கு அக்கட்சி இணங்கவேண்டும் என்றும் வற்புறுத்துகின்றார்.

அமைதித் தீர்வுக்கு வழியாக முன்வைக்கப்பட்ட மாவட்ட மட்ட அதிகாரப் பகிர்வு முயற்சி எண்பதுகளின் ஆரம்பத்திலேயே தோற்றுப் போன விடயம் என்றால், அமைச்சர் திஸ்ஸ விதாரண இப்போது தூக்கிப்பிடிக்கும் மாகாண மட்ட அதிகாரப்பகிர்வுத்திட்டம் எண்பதுகளின் இறுதியிலேயே பிசுபிசுத்துப்போன அம்சமாகும். அதுவும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒன்றுபட்ட தமிழர் தாயகத்திற்கு அதிகாரப்பகிர்வு என்ற திட்டம் இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம், இந்தியாவின் நேரடி உறுதிப்படுத்தலோடு முன்வைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு, பயனின்றி முடிந்த காலாவதியாகிப் போன முயற்சி.

இணைந்த ஐக்கியப்பட்ட தமிழர் தாயகத்துக்கான மாகாண ரீதியிலான அதிகாரப் பகிர்வு முயற்சியே, இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு தராமல் தோற்றுப் போன சூழலில், இப்போது வடக்கு, கிழக்கைப் பிரித்துத் துண்டுபட்ட தமிழர் தாயகத்துக்கு மாகாணங்கள் மட்டத்தில் அதிகாரத்தைப் பகிரும் பகிர்வு யோசனையை பெரிய விடயமாகத் தூக்கிக்கொண்டு, தாம் புதிய கண்டுபிடிப்பை எட்டிவிட்டவர் மாதிரி புதுக் கோஷத்தோடு வலம் வருகின்றார் திஸ்ஸ விதாரண.

ஏதோ மாவட்ட மட்ட அதிகாரப்பகிர்வு என்ற கீழ் நிலையை விட்டு, மாகாண மட்ட அதிகாரப்பகிர்வு என்ற நிலைமைக்கு ஜனாதிபதியும் அவரது ஆளும் கட்சியும் மேலேறி வந்து விட்டால், சாத்தியமான தீர்வு கிட்டும் என்று கதை விடுவதன் மூலம் தமிழரின் தேசிய இனப் பிரச்சினை விவகாரத்தில் அனைவரினதும் கவனத்தையும் தவறான திசைக்கு திருப்ப முயல்கிறார் அமைச்சர் திஸ்ஸ விதாரண. அவரது அபத்த வாதத்தை எண்ணி வேதனைப்படுவதைத் தவிர தமிழருக்கு வேறு வழியே இல்லை.

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் யதார்த்தப் புறநிலைகளையும், அதன் உட்கிடையாகப் புதைந்து கிடக்கும் வரலாற்று நியாயங்களையும், புரட்சிகரமான மாற்றத்துக்காக ஆயுதம் ஏந்தி நிற்கும் தமிழ் இளைஞர்களின் மனவெழுச்சியின் தீவிரத்தையும் புரிந்துகொள்ளாத சிங்களத் தலைமைகள் காலத்துக்குக் காலம் அர்த்தமற்ற அபத்தமான யோசனைத்திட்டங்களை தீர்வு வடிவங்களாகப் பிரேரித்து உலகை ஏமாற்றுவதற்கு முயற்சிக்கத் தவறுவதில்லை. அந்த வகையில் வரிசையில் திஸ்ஸ விதாரண தரப்பு யோசனையும் ஓர் அலங்காரமாக இப்போது வெளிவந்திருக்கின்றது.

இலங்கைத் தீவில் தனியான மொழி, பாரம்பரியம், பண்பாடு, நீண்ட கால ஆட்சி நிர்வாகம், தனியாகத் தாயக நிலப்பரப்பு ஆகியவற்றைக் கொண்டு காலங்காலமாக வாழ்ந்து வரும் தனித் தேசிய இனத்தவர்கள் தமிழர்கள்.

அவர்கள் தனித்துவமான தேசிய இனக் கட்டமைப்பைக் கொண்டவர்கள். அவர்களுக்கு தனித்துவமான இனங் காணக்கூடிய தாயகம் உண்டு. அத்தகைய தமிழர் தேசத்துக்கு எவராலும் பறித்தெடுக்க முடியாத சுய நிர்ணய உரிமை உண்டு. இதுவே திம்புக் கோட்பாடாக சகல தமிழர் தரப்புகளாலும் ஒன்றிணைந்து இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தங்களது ஒருமித்த நிலைப்பாடாக ஒரே குரலில் முன்வைக்கப்பட்டது.

இந்த அடிப்படைகளை ஏற்று அங்கீகரிக்காத அவற்றின் வழி அமையாத எந்தத் தீர்வுத்திட்டமும் அது மாவட்ட மட்டம் அல்ல, மாகாண மட்ட அதிகாரப் பரவலாக்கலுக்கு வழி செய்தாலும் கூட தமிழர் தரப்பால் ஏற்கப்படவே மாட்டாது. நிரந்தர தீர்வுக்கு அவை வழி செய்யா. அத்தகைய பொருத்தமற்ற திட்டங்களை வைத்துக் கொண்டு வீண் கதை பேசுவதிலும் பகல் கனவு காணுவதிலும் பயனேதுமில்லை. இதை தென்னிலங்கை இடதுசாரி வேடதாரிகளும் புரிந்து கொள்வது நல்லது.

நன்றி -உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.