Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்படவிருக்கும் முதல் பெண்... யார் இந்த ஷப்னம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவம் நடந்த அடுத்த மூன்று, நான்கு நாள்களில் தனது குடும்ப நபர்கள் 7 பேரை ஷப்னம் கொலை செய்தது தெரிய வந்தது. மேலும், கொலை செய்வதற்கு ஷப்னமின் காதலர் சலீம் உதவியதும் தெரியவந்தது.

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகாவை சேர்ந்தவர் ஷப்னம். இவருக்கும் இவர் காதலர் சலீமுக்கும் தூக்குத் தண்டனை வழங்கி, 2008-ம் ஆண்டு அம்ரோகா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து அலகாபாத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர் இருவரும். இரண்டு நீதிமன்றங்களுமே தண்டனையைக் குறைக்க இயலாது என்று மறுக்க, குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். அதுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில், ஷப்னம் மற்றும் சலீமை தூக்கிலிடுவதற்கான மரண தண்டனைக்கான ஆணை விரைவில் பிறப்பிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தற்போது ராம்பூர் சிறையில் இருக்கும் ஷப்னம், மதுரா ஜெயிலில் தூக்கிடப்படலாம் என்று கூறப்படுகிறது. எனில், சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவில் தூக்கிலிடப்படும் முதல் பெண் ஷப்னமாக இருப்பார்.

தூக்குத்தண்டனை பெறும் அளவுக்கு ஷப்னம் செய்த குற்றம் என்ன?

ஷப்னம் மற்றும் சலீம் இருவரும் காதலித்து வந்துள்ளார்கள். ஷப்னம் இரண்டு முதுகலைப் பட்டம் (Double MA) பெற்றவர். ஆனால், சலீம் ஆறாம் வகுப்பு மட்டுமே படித்தவர் என்பதால், ஷப்னம் குடும்பத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இதனால் ஆத்திரமடைந்த ஷப்னம் 2008 ஏப்ரல் 14, இரவு வீட்டில் உள்ள அனைவருக்கும் பாலில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்தார். பின்பு ஷப்னமும் சலீமும் ஷப்னமின் அம்மா, அப்பா, அண்ணன்கள், அவர்கள் மனைவிகளை கடப்பாரையால் அடித்துக் கொலை செய்தனர். அண்ணனின் குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்கள்.

இது தொடர்பான போலீஸ் விசாரணையில் ஷப்னம், அடையாளம் தெரியாத நபர்கள் தன் குடும்பத்ந்த் தாக்கியதாகக் கூறினார். சம்பவம் நடந்த அடுத்த மூன்று, நான்கு நாள்களில் குடும்ப நபர்கள் 7 பேரையும் ஷப்னம்தான் கொன்றுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், கொலை செய்வதற்கு உதவியாக இருந்தது ஷப்னமின் காதலர் சலீம் என்றும் போலீஸார் கண்டறிந்தனர். இந்த வழக்கு அம்ரோகா நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டு, மூன்று மாதங்கள் விசாரணையில் இருந்தது. அதன் பிறகு ஜூலை 15, 2010 அன்று மாவட்ட நீதிமன்றம் ஷப்னம் மற்றும் சலீமை தூக்கிலிட தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு தொடர்பாக 29 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அந்த சாட்சிகளிடம் 649 கேள்விகள் கேட்கப்பட்டு அந்த விவரங்கள் 160 பக்கங்களில் எழுதப்பட்டன. ஷப்னம் மற்றும் சலீம் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டது. ஷப்னம் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார், அவை தள்ளுபடி செய்யப்பட்டன. ஷப்னம் மற்றும் சலீம் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் கருணை மனு ஒன்றை கொடுத்தனர். ஆனால், அவர்களது மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், இவர்களுக்குத் தூக்குத்தண்டனை அளித்த நீதிமன்றம் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை. அந்த ஆணை வரும்பட்சத்தில், சுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்படும் முதல் பெண் கைதியாக ஷப்னம் இருப்பார்.

தூக்கு மேடை
 
தூக்கு மேடை

150 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட மதுரா சிறையில் பெண்களைத் தூக்கிலிட தனி அறை கட்டப்பட்டது. அந்த அறை தற்போது பயன்பாட்டில் இல்லை. இதற்கு முன்பு அதில் யாரும் தூக்கிலிடப்பட்டதற்கான சான்றும் இல்லை. மேலும், தூக்கிலிடுவதற்கான விதிமுறைகளில் ஆண், பெண்ணுக்கு தனித்தனி விதிகள் உள்ளன. தூக்குக்கு பயன்படுத்தும் கயிறும் இந்த விதிகளில் அடங்கும். எனவே, அதற்கான ஏற்பாடுகளை சிறை நிர்வாகம் பார்ப்பதாகக் கூறியுள்ளது. தூக்குத்தண்டனை ஆணை பிறப்பிக்கப்பட்ட பின் ஷப்னம், சலீம் தூக்கிலிடப்படுவார்கள்.

இந்நிலையில், நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட்ட, தூக்கிலிடப் பணியாளர் பவன்ஜலால்தான் ஷப்னம் தண்டனையிலும் பணியாற்றுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷப்னமின் கிராமமான பவான்கேடியில், ஷப்னமின் உறவினர்கள் தூக்குத் தண்டனைக்காகக் காத்திருப்பதாகவும், ஷப்னம் மீது தங்களுக்கு எந்தக் கருணையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, தங்கள் கிராமத்தில் எந்தக் குடும்பத்திலும் பெண் குழந்தைக்கு ஷப்னம் எனப் பெயர்வைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். சலீமின் அம்மா, பகல் இரவாக தான் பிரார்த்தனையில் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

- கற்பகவள்ளி.மு

சுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்படவிருக்கும் முதல் பெண்... யார் இந்த ஷப்னம்? - UP teacher who killed her whole family may be the first woman to be hanged in India (vikatan.com)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.