Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்குப் பெரும் கீர்த்திகளை தேடித்தரும் மஹிந்த அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-06-21

இலங்கைக்குப் பெரும் கீர்த்திகளை தேடித்தரும் மஹிந்த அரசு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி இலங் கைக்கு சர்வதேச ரீதியில் பல்வேறு "கீர்த்திகளை' பெற்றுத் தந்து, இலங்கை மக்களை அதுவும் குறிப்பாகத் தென்னி லங்கை மக்களை தலை நிமிர்ந்து நின்று "பெருமிதம்' கொள்ள வைத்திருக்கின்றது.

உலகில் அமைதியும், சமாதானமும் நிலவும் நாடு களின் பட்டியலில் ஆகப் பிந்தியதாக 111ஆவது இடமே இலங்கைத் தீவுக்கு என்பதை ஏற்கனவே நாம் அறிந்துள் ளோம்.

இப்போது உலகில் தோல்வியடைந்த நாடுகளில் முதல் இருபத்தியைந்துக்குள் இலங்கையும் அடக்கம் என்ற பெருமை கௌரவம் நமது இலங்கை தேசத் துக்குக் கிட்டியிருக்கின்றது.

உலகின் நூற்றிஎழுபத்தியேழு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட புள்ளி விவரக்கணக்கீட்டின் பெறுபேறாக இந் தத் தகைமை இலங்கைக்குக் கிடைத்திருக்கின்றது.

இந்த வரிசையில் 113.7 மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் சூடான் முதல் இடத்தில். அடுத்து 111.4 புள்ளிகளுடன் ஈராக். மூன்றாம், நான்காம் இடங்களில் முறையே சோமா லியா மற்றும் ஸிம்பாப்வே. இந்த வரிசையில் மத்திய ஆபி ரிக்கக் குடியரசு, ஆப்கானிஸ்தான், வடகொரியா, பாகிஸ் தான், உஸ்பெக்கிஸ்தான், சியாரி லியோன் ஆகியவற்றை அடுத்து யேமன் 93.2 புள்ளிகளுடன் 24 ஆவது இடத்தை யும் 93.1 புள்ளிகளுடன் இலங்கை 25 ஆவது இடத்தையும் பெற்றிருக்கின்றன.

இத்தகைய (கெட்ட) பெயரைச் சம்பாதிப்பதில் கொங்கோ குடியரசு, லைபிரியா, லெபனான், மாலாவி, ருவண்டா, சிரியா, கம்போடியா, அங்கோலா, ஈரான் போன்ற நாடுகளையும் முந்திக்கொண்டு இலங்கை முன்னிலை வகிப்பது கேவலத்திலும் கேவலமாகும்.

அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தோர், பொருளாதாரம், மனித உரிமைகள், பாதுகாப்புக் கட்டமைப்புகள், நகர அபிவிருத்தி, பொதுச்சேவை மற்றும் கற்றறிந்தோர் விகி தாசாரம் போன்ற பன்னிரண்டு தலைப்புகளில் மோச மான நிலைக்கு உச்சப் புள்ளிகள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு தலைப்புக்கும் தலா பத்துப் புள்ளிகள் என்ற விகிதாசார முறையில் சர்வதேச ரீதியில் சகல நாடுகளும் கணிப்பீடு செய்யப்பட்டு, அதனடிப்படையில் இந்த மதிப்பீட்டுப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு உலகின் தோல்வியடைந்த நாடுகளின் சுட்டெண் பட்டியலை வெளியிட்டுள்ள "சமாதானம் மற் றும் வெளிவிவகாரத்துக்கான நிதியம்' என்ற சர்வதேச இதழ், 2006 மே முதல் டிசெம்பர் வரையான காலகட்டத் தில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டது என்றும் அறிவித்துள்ளது.

2007 ஜனவரி முதல் ஜூன் வரையான காலத்துக்கான தோல்வி யடைந்த நாடுகளின் சுட்டெண் பட்டியல் இதை அடுத்து வெளிவரவிருக்கிறது.

அப்போது, அந்தப் பட்டியலில் இலங்கை தற் போதைய 25 ஆவது இடத்திலிருந்து முன்னேறி, தோல்வி யடைந்த நாடுகளின் பட்டியலில் மேலும் முன்நிலை வகிக்கும் "உயர் தகைமையை' எட்டும் என்று ஆய்வாளர் கள் கருதுகின்றார்கள்.

இந்தக் காலகட்டத்தில் இலங்கைத் தீவில் இடம்பெற் றுள்ள மோசமான மனித உரிமை மீறல் அனர்த்தங்கள், சீர்கெட்டுவரும் பாதுகாப்புநிலைமை, சீரழிந்து வரும் பொரு ளாதாரம் ஆகியன அந்தக் கீர்த்தியை இலங்கைக்கு நிச்சயம் பெற்றுத்தரும் என்று உறுதியாக நம்பலாம்.

புறநிலை யதார்த்தங்களைப் புரிந்து கொள்ளாமல், போர்வெறிப் போக்கில் மிகத் தீவிரமாகச் செயற்படும் மஹிந்த அரசு அதன் காரணமாக ஒருபுறம் மோசமான மனித உரிமை மீறல்களுக்குத் தாராளமாக இடமளித்துக் கொண்டு மறுபுறம் பெரும் பொருளாதாரச் சீர்குலை வுக்கும் வழிசெய்து நிற்கின்றது.

பௌத்த சிங்கள மேலாண்மைத் திமிரில் மூழ்கி நிற்கும் தென்னிலங்கையைத் திருப்திப்படுத்தும் ஒரே முனைப்பில் இவ்வாறு செயற்படும் மஹிந்த அரசு, அதன் மூலம் சர்வதேச ரீதியில், தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு மேன்மையான இடத்தைப் பெற்றுத்தந்து, இலங்கைத்தீவின் வரலாற்றில் மறக்க முடியாத மோசமான ஆட்சி என்ற பெயரைத் தான் பொறித் துக் கொள்வதை உறுதிசெய்து நிற்பதும் கண்கூடு.

நாட்டில் விலைவாசி எகிறிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கைச் செலவு வீதம் உயரப் பாய்கிறது. ரூபாவின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாதவாறு வீழ்ச்சி கண் டுள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் சுருங்குகின்றன. உல்லாசப்பயணத்துறை உட்பட நாட்டுக்கு வருமானம் ஈட்டித்தரும் துறைகள் படுத்துவிட்டன. ஆனால் மறுபக் கத்தில் பாதுகாப்புச் செலவினம் கட்டுமட்டில்லாமல் உயர்ந்து நாட்டின் நிதி நிலைமையையே மோசமாக வற் றச் செய்துவிட்டது.

ஆனால் மஹிந்தரின் நிர்வாகமோ, கணக்கு வழக்கின்றி அமைச்சர்களை நியமித்து, "துக்ளக்' தர்பார் நடத்திக் கொண்டிருக்கின்றது.

"வேலிக்கு ஓணான் சாட்சி' என்பது போல, அந்த அர சின் பொருளாதாரப் பொட்டுக்கேடுகளை மூடி மறைத்து, திறமையைப் பறைசாற்றும் புள்ளிவிவரங்களை அரசின் ஊதுகுழல் அதிகார வர்க்கம் வெளியிட்டு, மக்களை ஏமாற் றிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலை தொடர்ந்தால் தோல்வியுற்ற நாடுகளின் பட்டியலில் மென்மேலும் முன்னணி நிலைமை இலங் கைக்குக் கிட்டுவது நிச்சயம்.

நன்றி -உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.