Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கள மக்களுக்கு ஏகபோக உரிமையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களுக்கு ஏகபோக உரிமையும்

வீரகேசரி நாளேடு

மட்டக்களப்பு எம்.பி. த.கனகசபை துறைநீலாவணை, பல்லின சமூகங்கள் வாழும் இந்நாட்டில் சிங்கள மக்களுக்கு மட்டும் ஏகபோக உரிமைகளையும் சலுகைகளையும் அளித்து விட்டு சிறுபான்மை தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பறித்தும், அவர்களின் நிலங்களை சிங்களப் பேரினவாத சக்திகள் சூறையாடியும் வருகின்றனர். இதனால் இன்று இந் நாட்டில் வாழக்கூடிய சகல தமிழ் பேசும் மக்களும் அகதிகள் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளனர். இந்நிலையை மாற்றியமைக்க வேண்டுமாயின் அரசாங்கம் சிறுபான்மைத் தமிழ் பேசும் மக்களின் எண்ணங்கள் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய தீர்வுத் திட்டத்தினை முன்வைத்து கௌரவமான சமாதான சூழலை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அகதிகள் தினத்தை ஒட்டி கனகசபை எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அகதிகள் என்ற சொல்லை அகராதியில் இருந்து நீக்க வேண்டும். காரணம் தமது சொந்த நிலங்களில் பூர்வீகமாக வாழ்ந்த மக்களை யுத்தம் என்ற போர்வையில் விரட்டி அடித்து விட்டு மக்களை ஏமாற்றுவதற்காகவே இச் சொற்பதத்தினைப் பேரினவாத சக்திகள் இந்நாட்டில் பிரயோகித்து வருகின்றனர்.

வடக்கு கிழக்கில் போர்ச் சூழல் காரணமாகவும், சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் காரணமாகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நாதியற்ற நிலையில் புலம் பெயர்ந்து வாழ்கின்றனர்.

இயற்கை அனர்த்தங்களால் மக்கள் இடம் பெயர்ந்தமை இறை நியதி ஆனால் போர்ச் சூழலால் மக்களை இடம் பெயர வைத்தது பேரினவாத சக்திகளின் சதி. மூவின மக்களும் சரிசமமாக வாழ்ந்த திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர், சம்பூர் பிரதேசங்களை அண்டியுள்ள கிராமங்களில் காலங்காலமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் ஒருவருட காலமாகியும் தமது சொந்த மண்ணில் மீளக் குடியமர்த்தப்படவில்லை. ஆனால் இந்த மக்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து தமிழ் மக்களை விரட்டி அடிக்கும் செயற்பாடுகளை சிங்களப் பேரினவாத சக்திகள் மேற்கொண்டு வருகின்றன.

இதனையிட்டு சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் காரியாலயமும் கூடிய கவனமெடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன். திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்களின் சனத்தொகையை குறைக்கவும், அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் நிலங்களைச் சூறையாடி தமிழ் பேசும் மக்களின் விகிதாசாரத்தை குறைக்க சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளவும் பேரினவாதிகள் முனைப்புடன் தொழில்பட்டு வருகின்றனர். இதனால், திருகோணமலை அம்பாறை மாவட்டங்கள் சிங்கள மயமாகி வருகின்றன. இதனையிட்டு தமிழ் பேசும் மக்கள் விழிப்புடன் இருந்து தமது பூர்வீக நிலங்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளைத் தேட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக உயிர்களையும் உடைமைகளையும் இழந்த நிலையில் விரக்தியின் விழிம்பில் வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் பேசும் மக்களில் பலர் இன்றும் நலன்புரி நிலையங்களில் பல்வேறுபட்ட அவதிகளுடன் அவல வாழ்வை சுமந்த வண்ணமுள்ளனர். ஒப்பீட்டளவில், சுனாமியின் தாக்கம் குறைவாக காணப்பட்ட தென்பகுதி மக்களுக்கு, சகல வசதியும் செய்து கொடுக்கப்பட்டு அவர்கள் மீளக்குடியேற்றம் செய்யப்பட்டுள் ளனர். இந்நிலையில் எமது மக்களின் நிலை பரிதாபகரமாகவே உள்ளது.

இயற்கை அனர்த்தமானது இனம், மொழி, சமயம் பார்த்து வந்ததா? இல்லவே இல்லை. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீள் குடியேற்றம் தொடர்பில் இனப்பாகுபாடு காட்டப்படுவது ஏன்? என்ற வினாவை முன்வைக்கிறேன். இந்நாடு இன்று அகதிகள் மலிந்த நாடாக மாறியுள்ளமைக்கு காரணம் ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வரும் அடக்கு முறைகளே. எனவே, சகல மக்களும் தமது பூர்வீக நிலங்களில் பாதுகாப்பான முறையில் நிம்மதியாக வாழக்கூடிய கௌரவமான சமாதான சூழலை உருவாக்க வேண்டியது அரசின் கடமையாகும். அப்போது இந்நாட்டில் இத்தினத்திற்கு இடமிருக்காது என்றார் எம்.பி. கனகசபை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.