Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பெண் சுகாதார தொண்டர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பெண் சுகாதார தொண்டர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

 

March 15, 2021
 

625.500.560.350.160.300.053.800.900.160.90.jpg
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பெண் சுகாதார தொண்டர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் 8ஆவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) தொடர்கின்றது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவந்த யாழ்ப்பாணம் – நிலாவரை பகுதியை சேர்ந்த செல்லத்துரை கஜனி எனும் பெண்ணின் உடல்நிலை திடீர் என மோசமடைந்ததால் 1990 எனும் அவசர நோயாளர் காவு வண்டியின் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

கடந்த முதலாம் திகதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் தமக்கான தீர்வு வழங்காத நிலையில் கடந்த 8 ஆம் திகதி தொடக்கம் தமது போராட்ட வடிவத்தை உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றி முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டம் இடம்பெறுகின்ற இடத்திற்கு ஒரு சில தமிழ் அரசியல் பிரதிநிதிகள் வருகைதந்திருந்த போதிலும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் இதுவரை வருகை தரவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.battinews.com/2021/03/blog-post_614.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வரும் சுகாதார பணியாளர்களில் மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் 9 வது நாளாக இன்றும் தொடர்கின்றது.கடந்த 16 நாட்களாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சுகாதாரப் பணியாளர்கள் கடந்த 8 நாட்களாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வந்திருந்த நிலையில் நேற்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் குறித்த சுகாதார பணியாளர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.கலந்துரையாடலின் போது ஜனாதிபதியுடன் கதைத்து தீர்வினைப் பெற்றுத் தருவதாக தெரிவித்தது மாத்திரமன்றி அதனை எப்போது பெற்றுத் தருவது என உறுதிமொழி வழங்கவில்லை எனத் தெரிவித்து சுகாதார பணியாளர்கள் நேற்றைய தினம் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார்கள்.

இந்நிலையில் கடந்த முதலாம் திகதியிலிருந்து தமக்கு நிரந்தர நியமனத்தினை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுகாதார பணியாளர்களில் நேற்றைய தினம் மூவர் மயக்கமடைந்து வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இன்றைய தினம் காலை மேலும் ஒருவர் மயக்கமடைந்து அம்புலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை தமக்கு நிரந்தர நியமனத்திற்குரிய சரியான முடிவு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக மட்ட பிரதிநிதிகள் தங்களை வந்து சந்தித்து தமது பிரச்சினை தொடர்பில் விசாரித்து செல்வதாகவும் எனினும் இன்றுவரை எவரும் தமது பிரச்சினக்கு தீர்வினைப் பெற்றுத் தரவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.(15)
http://www.samakalam.com/உணவு-தவிர்ப்பு-போராட்டத-2/
 

 

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே - சட்டத்தரணி சுகாஸ் இடையில் முறுகல்..!

வாயை மூடு என கூறிய அமைச்சருக்கு நீ வாயை மூடு என பதிலளித்த சட்டத்தரணி சுகாஸ்..

NEUIWN-SUENGI.jpg

நியமனத்தை கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுகாதார தொண்டர்கள் போராட்டத்தில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே - சட்டத்தரணி சுகாஸ் இடையில் வாய்த்தர்க்கம் உருவாகியிருக்கின்றது. 

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சுகாதார தொண்டர்களை கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுகாதாரத் தொண்டர்களுடன் கலந்துரையாடினார். 

அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர், தான் ஜனாதிபதியை சந்தித்து கதைப்பதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும், அதற்கு இரு வார கால அவகாசம் கொடுக்க வேண்டுமென குறிப்பிட்டார். 

இச்சந்தர்ப்பத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி சுகாஸ் சுகாதாரத் தொண்டர்களுக்கு ஆதரவு தெரிவித்து கடிதங்களை அமைச்சருக்கு சமர்ப்பித்திருந்தார்.

சுகாஸின் கருத்துக்களினால் ஏற்பட்ட முரண்பாட்டினால் நீங்கள் இங்கே அரசியல் செய்ய வேண்டாம். வாயை மூடுங்கள் என மஹிந்தானந்த தெரிவிக்க, 

சுகாசும் நீங்கள் வாயை மூடுங்கள் என கூறினார். இதனால் அமைச்சரின் பாதுகாப்பு பிரிவினர் சுகாசை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். 

இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களில் சிலர் அமைச்சரின் கால்களில் விழுந்து தமது பிரச்சினையை தீர்க்க கோரியதை அவதானிக்க முடிந்தது.

https://jaffnazone.com/news/24095

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சுகாதார தொண்டர்கள் போராட்டத்தில்

 

8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுகாதாரத் தொண்டர்களுடன்

நம்ம மீன்பிடித் துறை அமைச்சரும் கலந்திருக்கலாம் செய்தி இன்னும் செவிக்கு போகேல்லைபோல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.