Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள் இன்று 24.06.2007

Featured Replies

தமிழன் என்றால் இப்படிதான் வாழவேண்டும் என்று வழிகாட்டிய கவிஞர் .

இன்று இருந்திருந்தால் தமிழீழ விடுதலைக்கே ஒரு வெண்பா பாடி இருப்பார்

அவரைப்பற்றி மீள்நினைவுகளை தெரிந்தவர்கள் இங்கே பதியுங்களேன்

  • கருத்துக்கள உறவுகள்

`நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை'

[23 - June - 2007]

* நாளை கவியரசரின் 80 ஆவது பிறந்த தினம்

அரசவைக் கவிஞர் கண்ணதாசனின் 80 ஆவது பிறந்ததினம் நாளையாகும். 23 வருடங்களாக இவரது பிறந்த தினம், இறந்ததினத்தை அகில இலங்கை கண்ணதாசன் மன்றம் நினைவுகூர்ந்து வருகிறது. ஆனால், இவ்வருடம் நாட்டு நிலைமை காரணமாக வழமையாக இந்நிகழ்வை நடாத்தும் கொழும்பு தமிழ்ச் சங்கம் இம்முறை நடத்தவில்லை. கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அன்னாரது உருவச் சிலை 1995 ஆம் ஆண்டு கையளிக்கப்பட்டு அங்கு பாதுகாத்து வரப்படுவதற்கு அகில இலங்கை கண்ணதாசன் மன்றம் பணிவுடன் நன்றி கூறுகிறது. தமிழகத்தில் கவியரசர் வாழ்ந்த தியாகராஜ நகரிலே 09.12.1994 ஆம் ஆண்டு தமிழக அரசு சிலை அமைத்து திறப்பு விழாச் செய்தது. பழைமை வாய்ந்த கொழும்புத் தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இன்றும் கவிஞரின் உருவச் சிலையைப் பாதுகாத்து வருவது பெருமைக்கும் போற்றுதற்கும் உரியதாகும்.

பாடல்கள் எழுதுவது என்பது இலக்கணம் படித்த பண்டிதர்களுக்குத்தான் சொந்தமானது அல்ல. இந்நிலையை மாற்றியவர்கள் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், பின்னர் அவர் வழியைப் பின்பற்றிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

இவர்கள் தம் பின்னால் தோன்றிய ஆயிரக்கணக்கான கவிஞர்கள் நட்சத்திரக் கூட்டத்தில் பிரகாசித்து பூரண சந்திரனாக மிளிர்ந்து பலராலும் போற்றப் படுபவர் கவியரசன் கண்ணதாசன்.

மனிதன் பிறக்கிறான், வாழ்கிறான் ஈற்றில் இறந்து மடிகிறான். அதனைக் கவியரசன் அழகு தமிழில் இவ்வாறு பாடினார்;

"பிறக்கும் போதும் மனிதன் அழுகின்றான், இறக்கும் போதும் அழுகின்றான்"

இந்நிலையிலேயே இன்று இலங்கைத் தமிழர்களாகிய நாங்கள் வாழும் போதும் அழுகின்றோம், செத்து மடிவோரைப் பார்த்தும் அழுகின்றோம். இது எமது தமிழினத்தின் விதி. இன்று கவியரசர் எம் மத்தியில் வாழ்ந்து நின்றால் இலங்கைத் தமிழர்களுக்கே தனிப்பாடல்கள் பல எழுதியிருப்பார்.

மனித வாழ்க்கை காலம் பூராவும் கண்ணீர் நிறைந்த வாழ்க்கை என்பதனைத் தன் சொந்த வாழ்க்கையில் கண்டறிந்தவர் கவியரசர். அவர்தம் தனிப் பாடல்கள். கவிதைகள், திரையிசைப் பாடல்கள், கட்டுரைகள், சிறந்த கருத்துரைகள், இன்னும் மேலாக அர்த்தமுள்ள இந்து மதம் 10 பாகங்கள் எம்மால் காலமெல்லாம் மறக்க முடியாது. தனது சொந்த வரலாற்று உண்மைகளைத் தயங்காது தத்துவத்தோடு திரையிசைப் பாடல்களில் கள்ளம் கபடமற்று துணிந்து சொன்ன கவிஞர் கண்ணதாசன் காதல், தத்துவம் நிறைந்த பாடல்களை இருவகையாக நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். கவியரசர் தம் அனுபவ மொழிகள் சொல்லும் நூலிலே இவ்வாறு கூறுகின்றார். "காரியம் செய்வது என்று துணிந்து விட்டால் யாரையாவது பகைத்துக் கொண்டுதான் தீரவேண்டும். பகையே இல்லாதவன் என்று ஒருவன் பெயர் எடுத்தால் அவன் ஒரு காரியமும் செய்யாதவன்" என்று பொருள். மகாத்மா காந்தி அடிகளாருக்கும் பகைவர்கள் இருந்தார்கள். கடவுளுக்கும் பகைவர்கள் இருந்திருக்கிறார்கள் இருக்கிறார்கள். இவை எமக்கும் எமது வாழ்வில் பொருந்தும்.

இங்கு கவியரசர் தம் தத்துவம் நிறைந்த அனுபவக் கற்பனைகளைத்தான் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம். அந்த நிம்மதியற்ற சூழ்நிலையிலேயே நாம் இன்று வாழ்கின்றோம். அதனைத் தேடி காடு, மேடு, தெருவென்று இன்று நாம் அலைகின்றோம். பிறந்த மண்ணிலேயே நிம்மதியற்று வாழ்கின்றோம். அன்றே அதனைக் கூறிச்சென்ற பெருமை மிக்க கவிஞர் கண்ணதாசன் இல்லாதவருக்குத்தான் இல்லை என்ற கவலை என்று சிந்திக்கின்றோம். ஆனால் இருப்பவனுக்குத்தான் கவலை என்று தாம் நாம் கருதுகிறோம். ஆனால் உண்மையில் இருப்பவனுக்குத்தான் கவலைகூட எனக் கவியரசர் தனது வாழ்க்கை பற்றிக் கூறுகிறார்.

என் வாழ்வில் சலனம், சஞ்சலம், சபலம், பல முறை வந்திருக்கிறது. தற்கொலை தலை தூக்கியிருக்கிறது. ஒரு நாள் வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்துவிட்டால் நிம்மதி. நம்பிக்கை, பசி தாங்காமல் சாகலாம் என்று நினைப்பவனை அழைத்து ஒரு வேளை சாப்பாடு போடுங்கள். அவன் "ஏன் சாகவேண்டும்"என உங்களையே கேட்பான். அந்த ஏழையின் இடத்திலிருந்து தனது சொந்தக் கற்பனைகளை தந்தவர் கண்ணதாசன். தனது கடைசிக் காலத்தில் ஆன்மீக வழியில் பட்டினத்தார் வழியில் நின்று வாழ்ந்தார்.

கவியரசர் தம் புகழ் அவர்தம் இறவாப்புகழ் கொடை பெற்ற திரையசைப் பாடல்களை எழுதி இன்றும் எம்மை வழிநடத்தி நிற்கும் மறக்கமுடியாத மாபெரும் கவிஞர் ஒரு மனிதனைப் போல் இன்னுமொரு மனிதன் பிறக்கமாட்டான். அதேபோல் இப் பூவுலகில் இன்றுமொரு கண்ணதாசன் பிறக்கமாட்டான்.

வாழ்க கவியரசர் நாமம் என்று இன்றைய அவரது 80 ஆவது பிறந்த தினத்தில் வாழ்த்தி மகிழ்வோமாக.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.