Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எஸ் பி பாலசுப்ரமணியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எஸ் பி  பாலசுப்ரமணியம்

 

பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி சினிமாவில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியவர் எஸ்.பி.பி. ஆரம்பகாலத்தில் மெல்லிசை குழுவில் கச்சேரி நடத்தியதில் தொடங்கி பின்பு கின்னஸ் சாதனை படைத்தது வரை அவரைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றில் சில சுவாரஸ்ய துளி.......................

1. சினிமாவிற்கு வருவதற்கு முன் இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோருடன் இணைந்து மெல்லிசைக் குழு ஒன்றை நடத்தி வந்திருக்கின்றார் எஸ்பிபாலசுப்ரமணியம்.

2. தெலுங்கு பட இசையமைப்பாளர் எஸ்.பி.கோதண்டபாணி மூலம் திரைப்படத்தில் பின்னணி பாடும் வாய்ப்பினை முதன் முதலாக கிடைக்கப் பெற்றார். படம் : "ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா". இதனால் தனது 'ரிக்கார்டிங்' தியேட்டருக்கு 'கோதண்டபாணி' என பெயர் சூட்டி குருவுக்கு நன்றி செலுத்தினார் எஸ்.பி.பி.,

3. எம்ஜிஆருக்கு இவர் பின்னணி பாடிய முதல் பாடல் "அடிமைப் பெண்" திரைப்படத்தில் வரும் "ஆயிரம் நிலவே வா" என்ற பாடல் ஆகும்.

4. "பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ" என்ற "சுமதி என் சுந்தரி" படப் பாடலின் மூலம் சிவாஜி கணேசனுக்கும் முதன்முதலாக பின்னணி பாடும் வாய்ப்பினை பெற்றார்.

5. இசையமைப்பாளர் ஜி தேவராஜன் இசையமைப்பில் "கடல்பாலம்" என்ற திரைப்படத்தில் பின்னணி பாடியதன் மூலம் மலையாளத் திரையுலகில் கால்பதித்தார்.

6. இசையமைப்பாளர் கே.வி.மஹாதேவன் இசையமைப்பில் இவர் பாடிய முதல் பாடல் "ஆயிரம் நிலவே வா" எனும் "அடிமைப் பெண்" படப் பாடல்.

7. இசையமைப்பாளர்கள் சங்கர்- கணேஷ் இசையமைப்பில் இவர் பாடிய முதல் பாடல் "கல்யாண ராமனுக்கும்" எனத் தொடங்கும் "மாணவன்" திரைப்படப் பாடல்.

8. நடிகர் ரவிச்சந்திரனுக்கு இவர் பாடிய முதல் பாடல் "இறைவன் என்றொரு கவிஞன்" என ஆரம்பிக்கும் "ஏன்?" திரைப்படப் பாடல்.

9. இளையராஜாவின் இசையமைப்பில் இவர் பாடிய முதல் திரைப்பட பாடல் "பாலூட்டி வளர்த்த கிளி" என்ற படத்தில் வரும் "நான் பேச வந்தேன்" என்ற பாடல். எஸ் ஜானகியோடு இணைந்து பாடியிருப்பார்.

10. சில பாடல்களுக்கிடையே இவர் உதிர்க்கும் சிரிப்பு, பாடலின் சுவையை இன்னும் அதிகப்படுத்துவதோடு மட்டுமின்றி இவருக்கே உண்டான தனித்தன்மை என்றால் அது மிகையல்ல.

11. ரஜினி, கமல், விஜயகாந்த் என அவரவர் உச்சரிப்புக்கு தகுந்தவாறு பாடும் வல்லமை பெற்றவர் எஸ் பி பாலசுப்ரமணியம். உதாரணம் பல. அதில் சில "கம்பன் ஏமாந்தான்" கமலுக்கு, "ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன" ரஜினிக்கு, "சின்ன...மணிக் குயிலே" விஜயகாந்திற்கு.

12. கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜெமினிகணேசன், நாகேஷ், அர்ஜுன், கே பாக்யராஜ், மோகன், சல்மான்கான், அனில் கபூர், கிரிஷ் கர்னாட் என பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஏனைய மொழித் திரைப்படங்களில் பின்னணி பேசி டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணிபுரிந்திருக்கின்றார்.

13. "துடிக்கும் கரங்கள்", "மயூரி", "சிகரம்", "தையல்காரன்", "ஊர்பஞ்சாயத்து" மற்றும் "உன்னைச் சரணடைந்தேன்" போன்ற பல தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணிபுரிந்திருக்கின்றார்.

14. "மனதில் உறுதிவேண்டும்" "கேளடி கண்மணி", "சிகரம்", "குணா", "தலைவாசல்", "திருடா திருடா", "காதலன்", "உல்லாசம்" "ரட்சகன்", "பிரியமானவளே", "நாணயம்" என பல தமிழ் படங்களில் நாயகனாகவும், குணச்சித்திர வேடமேற்று நடித்தும், தனக்குள் இருக்கும் அபார நடிப்பாற்றலை வெள்ளித்திரையில் மின்னச் செய்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம்.

15. "சங்கராபரணம்" படப்பாடல்கள் அனைத்தும் கர்னாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டவை. தனது கேள்வி ஞானத்தைக் கொண்டு அப்படப்பாடல்களை அபாரமாக பாடி, முதல் முறையாக தேசிய விருதினையும் வென்றெடுத்தார் எஸ் பி பாலசுப்ரமணியம்.

16."ஏக் துஜே கே லியே" திரைப்படத்தில் "தேரே மேரே பீச் மே" என்ற பாடலை பாடி, ஹிந்தி திரையுலகில் தனது திரையிசை கணக்கை துவக்கினார் எஸ் பி பாலசுப்ரமணியம்.

17. மத்திய அரசின் "தூய்மை இந்தியா" திட்டத்திற்கு, ஆந்திர மாநிலத்தின் தூதராக 2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார் எஸ் பி பாலசுப்ரமணியம்.

18. இத்தனை பன்முகத்தன்மை வாய்ந்த இந்த மாபெரும் இசைக் கலைஞன் ஏறத்தாழ இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் 40000க்கும் அதிகமான பாடல்களை பாடி "கின்னஸ் புத்தகத்தில்" இடம் பிடித்துள்ளார்.

19. ஜி.தேவராஜன், எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மஹாதேவன், சங்கர் கணேஷ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, மணிசர்மா, பரத்வாஜ், யுவன் ஷங்கர் ராஜா, இமான், அனிருத் என அந்தக்கால ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் முதல் இந்தக்கால இசையமைப்பாளர்கள் வரை பலரது இசையமைப்பாளர்களின் இசையில் பாடி உள்ளார்.

20. நிலவை மையமாக வைத்து எஸ்.பி.பி., பாடிய 250க்கும் மேற்பட்ட பாடல்கள் 'சூப்பர் ஹிட்' ஆனது. ஆயிரம் நிலவே வா, இளையநிலா பொழிகிறதே, வா வெண்ணிலா, நிலாவே வா, வண்ணம் கொண்ட வெண்ணிலவே. கண்ணுக்குள் நுாறு நிலவா, நிலவு துாங்கும் நேரம், பாடு நிலாவே, வெள்ளி நிலவே, வான் நிலா நிலா, வானிலே தேன் நிலா போன்ற பாடல்கள் ரசிகர்கள் நெஞ்சை விட்டு அகலாதவை.

21 .'கேளடி கண்மணி'யில் 'மண்ணில் இந்தக் காதல்' அமர்க்களத்தில் 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாடல்களை மூச்சுவிடாமல் பாடினார்.

22. ரஜினியின் பல படங்களுக்கு இவர் பாடிய 'ஓபனிங் சாங்' ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.

23. பல தொலைக்காட்சி தொடர்களுக்கு 'டைட்டில்' பாடல் பாடியுள்ளார்.

24. 'முதல் மரியாதை' படத்தில் சிவாஜி வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. பாரதிராஜா வற்புறுத்தியும் எஸ்.பி.பி மறுத்துவிட்டார்.

25. சில பாடல்களுக்கிடையே எஸ்.பி.பி., உதிர்க்கும் சிரிப்பு, அதன் சுவையை அதிகரிக்கும். பல குரலில் பாடுவது இவருக்கே உரிய தனித்தன்மை-------------------------------.

26. கன்னடத்தில் ஒரே நாளில் (1981 பிப்., 8ல் காலை 9:00 - இரவு 9:00 மணி) 21 பாடல்களை பாடி சாதனை படைத்தவர். தமிழில் 19, ஹிந்தியில் 16 பாடல்களை ஒரே நாளில் பாடினார்.

27. நெல்லுாரில் உள்ள தன் பூர்வீக வீட்டை சமஸ்கிருத வேத பாடசாலை அமைக்க காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் வழங்கினார்.

28. ஏ.ஆர்.ரஹ்மான் - எஸ்.பி.பி., கூட்டணி பெரிய வெற்றியை பெற்றது. முதல் படமான ரோஜாவில் மூன்று பாடல்களை பாடினார் எஸ்.பி.பி.

29. சினிமா பாடல்கள் தவிர்த்து ஏராளமான பக்தி பாடல்களை எஸ்.பி.பி. பாடி உள்ளார். குறிப்பாக சிவனை வைத்து இவர் பாடிய ஆல்பம் மிகவும் பிரசித்து பெற்றவை.

30. பின்னணி பாடகி பி.சுசீலாவுடன் மட்டும் 6 மொழிகளில் கிட்டத்தட்ட மூவாயிரத்திற்கும் அதிகமான டூயட் பாடல்களை எஸ்.பி.பி., பாடியிருக்கிறார்.

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

“SPB பாடகன் சங்கதி”  என்ற ஒரு புத்தகத்தை வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. இசையுலகில் மொழி வேறுபாடின்றி அனைவராலும் போற்றப்பட்ட ஒருவரின் இசைப் பயணத்தின் பதிவுகள்தான் இந்தப் புத்தகம். இதை வாசிக்கும் பொழுதுதான் நான் அறியாப் பல இசையமைப்பாளர்களையும், அவர்களது இசையில் SPB பாடிய நல்ல பாடல்களையும் அறிய முடிந்தது. எழுதியவர் பாராட்டுக்குரியவர். 

F2-DB6-E62-F7-C6-4-EA3-A847-AFD104-A490-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.