Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெகாசஸ் என்றால் என்ன? இஸ்ரேலில் இருந்து ஸ்பைவேர் எப்படி வேலை செய்கிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெகாசஸ் என்றால் என்ன? இஸ்ரேலில் இருந்து ஸ்பைவேர் எப்படி வேலை செய்கிறது?

7 மணி நேரங்களுக்கு முன்னர்
பெகாசஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள், அமைச்சர்கள் உட்பட உலகம் முழுக்க பலர் வேவு பார்க்கப்பட்ட செய்தி வெளியான நிலையில், மீண்டும் பெகாசஸ் பற்றிய விவாதமும் சர்ச்சையும் எழுந்துள்ளது.

பெகாசஸ் எனப்படும் ரகசிய மென்பொருள், இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஒ எனும் இணையப் பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. வங்கதேசம், மெக்சிகோ, சௌதி அரேபியா போன்ற பல நாடுகள், என்எஸ்ஒ நிறுவனத்திடம் இருந்து பெகாசஸ் மென்பொருளை வாங்கிப் பயன்படுத்துகின்றன.

இந்த வேவு பார்க்கும் மென்பொருளை அரசுகள் பயன்படுத்துவது குறித்துப் பல முறை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அத்துடன் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் என்எஸ்ஒ நிறுவனத்துக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளன.

ஆனால், இந்தியா இந்த மென்பொருளை வாங்கியதா இல்லையா என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை.

 

நாட்டின் பாதுகாப்புக்காகவே பெகாசஸை வாங்குவதாகப் பல நாட்டின் அரசுகள் கூறினாலும், அவை மக்களை வேவு பார்க்க இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

பெகாசஸ் எப்படி வேலை செய்கிறது?

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒருவரின் ஐபோன் அல்லது ஆண்டிராய்ட் போனை தொலைவிலிருந்தே ஹேக் செய்யலாம்.

இதன் மூலம் ஹேக்கர்கள், அந்த போனில் இருந்து மெசேஜ், புகைப்படங்கள், மின்னஞ்சல், பயனாளர் செல்லும் இடம் போன்ற அனைத்து தகவல்களையும் திருட முடியும். தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்க முடியும்.

அத்துடன் மறையாக்கம் செய்யப்பட்ட ( encrypted) மேசேஜ்களை கூட பெகாசஸ் மூலம் படிக்கலாம் என கெஸ்பர்ஸ்கி சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெகாசஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மறையாக்கம் செய்யப்பட்ட மேசேஜ்களை அனுப்புநர் மற்றும் பெறுநரால் மட்டுமே படிக்க முடியும். மெசேஜிங் தளங்களை நடத்தும் வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்களால் கூட அதை பார்க்க முடியாது.

ஒரு நபரின் ஃபோனில் பெகாசஸ் நுழைந்தவுடன், வேவு பார்ப்பதற்குத் தேவையான மாட்யூல்களை இன்ஸ்டால் செய்யும். பின்னர் ஃபோனின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக்கொள்ளும்.

மேலும் அதைக் கட்டுப்படுத்துபவர்களுடன் 60 நாட்களுக்கு மேலாக தொடர்புகொள்ள முடியவில்லை என்றாலோ அல்லது தவறான ஃபோனில் இன்ஸ்டால் செய்யப்பட்டாலோ தானாக அழிந்துகொள்ளும் வகையில் அது வடிவமைப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு தொடங்கிய சர்ச்சை

பெகாசஸ் மூலம் மக்கள் உளவுபார்க்கப்படுவதை 2016-ம் ஆண்டு ஐக்கிய அரசு அமீரகத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அகமது மன்சூர் கண்டறிந்தார்.

மன்சூரின் செல்போனுக்கு பல எஸ்.எம்.எஸ்கள் வந்துள்ளன. அதில் உள்ள இணைப்புகள் தவறான நோக்கத்திற்காக அனுப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகப்பட்டார்.

இதனால், டொராண்டோ பல்கலைக்கழகத்தின் சிட்டிசன் ஆய்வகத்தில் உள்ள சைபர் செக்யூரிட்டி நிபுணர்களிடம் தனது செல்ஃபோனை ஒப்படைத்து, தனக்கு வந்துள்ள எஸ்.எம்.எஸ்-கள் குறித்து ஆராயுமாறு கூறியுள்ளார்.

மன்சூரின் சந்தேகம் சரிதான். ஒருவேளை எஸ்.எம்.எஸ்-களில் இருந்த இணைப்புகளை அவர் கிளிக் செய்திருந்தால், அவரது ஃபோன் பெகாசஸ் மால்வேரால் பாதிக்கப்பட்டிருக்கும். மன்சூரின் போனை ஆராய்ந்த சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள், இந்த தாக்குதலைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்று எனக் கூறியுள்ளனர்.

பெகாசஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதன் பின்னர் 2017-ம் ஆண்டு பெகாசஸ் மூலம் மக்களை வேவு பார்ப்பதாக மெக்சிகோ அரசு மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

மெக்சிகோவில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்களுக்கு எதிராக பெகாசஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

தங்களது ஃபோன்களை ஒட்டுக் கேட்பதாகப் பிரபல பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மெக்சிகோ அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பெகாசஸ் பயன்படுத்தப்படும் என்ற நிபந்தனையுடன், இந்த மென்பொருளை என்எஸ்ஓ மெக்சிகோ அரசுக்கு விற்றுள்ளது என அந்த செய்தி கூறுகிறது.

``இந்த மென்பொருளின் சிறப்பு என்னவென்றால், இது ஸ்மார்ட் ஃபோனைக் கண்டறிந்து அழைப்புகள், மெசேஜ்கள் மற்றும் பிற உரையாடல்களைக் கண்காணிக்கும். போனின் மைக் அல்லது கேமராவையும் இதனால் இயக்க முடியும்`` என 2017-ம் ஆண்டில் வெளியான செய்தியில் தி நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

போலி ஃபேஸ்புக் தளத்தை உருவாக்கிய என்எஸ்ஓ

பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் ஹேக்கிங் மென்பொருளை ரகசியமாக அனுப்புவதற்கு, ஃபேஸ்புக் போன்ற ஒரு வலைத்தளத்தை என்எஸ்ஓ உருவாக்கியதாக 2020-ம் ஆண்டு குற்றஞ்சாட்டப்பட்டது.

மதர்போர்டு எனும் செய்தி இணையதளம் நடத்திய புலனாய்வில், பேஸ்புக் போலவே காட்சியளிக்கும் ஒரு தளத்தை உருவாக்கி அதன் மூலம் பெகாசஸ் ஹேக்கிங் டூலை என்எஸ்ஓ பரப்பியது கண்டறியப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகள் `இட்டுக்கட்டப்பட்டவை` என கூறி என்எஸ்ஓ மறுத்தது. இந்த இஸ்ரேலிய நிறுவனம் ஏற்கனவே ஃபேஸ்புக் உடனான சட்டப் போரில் சிக்கியுள்ளது.

பெகாசஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாட்ஸ்அப் மூலம் வேவு மென்பொருளை பரப்பி, தங்களது வாடிக்கையளர்கள் மொபைல்களில் சைபர் தாக்குதல் நடத்தியதாகக் கடந்த 2019ம் ஆண்டு என்எஸ்ஓ நிறுவனத்துக்கு எதிராக ஃபேஸ்புக் வழக்கு தொடர்ந்தது.

இந்த மென்பொருள் மூலம் பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் மொபைல்போன்கள் ஹேக் செய்யப்பட்டதாக ஃபேஸ்புக் கூறியது.

வேவு பார்க்கப்பட்ட ஜமால் கஷோக்ஜி

சௌதியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜி, கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணை தூதரகத்துக்குச் சென்றபோது கொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவரது செல்போனும், கொலை செய்யப்பட்டதற்குப் பின்பு அவரது குடும்பத்தினரின் செல்போனும் பெகாசஸ் மூலம் வேவு பார்க்கப்பட்டுள்ளது.

பெகாசஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த 2017-ம் ஆண்டு பெகாசஸ் மென்பொருளை சௌதி அரேபியா வாங்கியது. நாட்டில் உள்ள மாறுபட்ட கருத்து கொண்டவர்களை நசுக்குவதற்கும், வெளிநாடுகளில் உள்ளவர்களைக் கண்காணிப்பதற்கும் இந்த மென்பொருளை சௌதி பயன்படுத்தியது என தி நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

பாதிக்கப்பட்ட அல் ஜசீரா செய்தியாளர்கள்

கடந்த டிசம்பர் 2020-ல் டஜன் கணக்கான அல் ஜசீரா செய்தியாளர்கள் செல்ஃபோன்கள் வேவு பார்க்கப்படுவதாக சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் குற்றஞ்சாட்டினர்.

டொராண்டோ பல்கலைக்கழகத்தின் சிட்டிசன் ஆய்வகம் வெளியிட்ட அறிக்கையில், அல் ஜசீராவின் தொலைக்காட்சியின் தொகுப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என 36 பேரின் செல்போன் பெகாசஸ் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கண்காணிப்பு

கடந்த ஆண்டு, கொரோனா வைரஸின் பரவலைக் கண்காணிக்க உதவும் மென்பொருளை உருவாக்கியதாக என்எஸ்ஒ நிறுவனம் கூறியது. இதற்கு மொபைல் ஃபோன் தரவைப் பயன்படுத்துகிறது. இதை நடைமுறைப்படுத்த உலகெங்கிலும் பல அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், சில நாடுகள் இதை சோதனை செய்வதாகவும் அந்த நிறுவனம் கூறியது.

பெகாசஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

என்எஸ்ஒவின் பதில் என்ன?

தன் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் என்எஸ்ஒ மறுக்கிறது.

இந்த பட்டியல் எங்கிருந்து வெளியானது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், தங்கள் நிறுவனம் எந்த தவறும் செய்யவில்லை என என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.

இந்தத் தரவுகள் எங்கள் நிறுவனத்தின் 'சர்வர்களில்' இருந்து கசிந்தது என்பதே நகைப்புக்குரியது. ஏனெனில் இந்தத் தரவுகள் எங்கள் கணினிகளின் சர்வகளில் சேமித்து வைக்கப்படவே இல்லை. ஃபார்பிட்டன் ஸ்டோரீஸ் வெளியிட்டுள்ள செய்திகள் முற்றிலும் தவறான அனுமானங்கள் மற்றும் உண்மையுடன் பொருந்தாத கோட்பாடுகளுடனும் உள்ளன. அவர்களுக்கு தகவல் வழங்கியவர்களின் நம்பகத்தன்மை மற்றும் நோக்கம் குறித்து ஐயங்கள் எழுகின்றன என்கிறது என்எஸ்ஓ.

பெகாசஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

``எங்கள் தொழில்நுட்பம் பாலியல் மற்றும் போதை மருந்து கடத்தல் குற்றங்களைத் தடுப்பதற்கும், காணாமல் போன அல்லது கடத்தப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கும், கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைக் கண்டுபிடிப்பதற்கும், ஆபத்தான டிரோன்களிடம் இருந்து வான்வெளியைப் பாதுகாப்பதற்கு, பயங்கரவாத குற்றங்களைத் தடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. எங்கள் நிறுவனம் உயிர்களை காப்பாற்றும் பணியில் இருக்கிறது. எங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை`` என என்எஸ்ஒ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஃபார்பிட்டன் ஸ்டோரீஸ் செய்தியில் உள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கிறோம். அவதூறு வழக்கு தொடர்வது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம் எனவும் கூறியுள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெகாசஸ் ஸ்பைவேர்: நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உளவு பார்க்கப்படலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

  • கார்டன் கோரோரா
  • பாதுகாப்பு செய்தியாளர்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
என் எஸ் ஓ

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருள் பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஏன் அரசியல் தலைவர்களையும் கூட உளவுப் பார்க்க பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டின் மூலம், உளவுப் பார்த்தல் என்பது விற்பனைக்கான ஒன்று என்பது தெரிகிறது.

இந்த மென்பொருள் தயாரிப்புக்கு பின்னணியில் உள்ள என்எஸ்ஓ குழுமம், இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறது அதுமட்டுமல்லாமல் தங்களின் வாடிக்கையாளர்கள் கவனமாக மதிப்பீடு செய்யப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த பெகாசஸ் விவகாரம் நமக்கு உணர்த்தும் மற்றொரு விஷயம் என்னவென்றால், ஒரு சில நாடுகளால் உளவுப் பார்க்க பயன்படுத்தப்பட்ட அதி நவீன தொழில்நுட்பங்கள் தற்போது பரவலாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் இன்றைய டிஜிட்டல் உலகில் நமது தனிமை மற்றும் பாதுகாப்பிற்கு அது சவலாகவும் உள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு உளவு நிறுவனம் உங்களின் தனிநபர் தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்நிறுவனம் கடினமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உங்களின் அலைப்பேசியை டேப்கள் மூலம் ஒற்றுக் கேட்க வேண்டும் அல்லது யாருக்கும் தெரியாமல் உரையாடலை ரகசியமாக பதிவு செய்யும் நுண் ஒலிப்பதிவு கருவியை வீட்டில் மறைத்து வைக்க வேண்டும். அல்லது உங்களை பின் தொடர ஆட்களை ஏற்பாடு செய்ய வேண்டும். நீங்கள் யாரை தொடர்பு கொண்டீர்கள் அல்லது நீங்கள் எவ்வாறு வாழ்ந்தீர்கள் என்பதை கண்டறிய நேரமும் பொறுமையும் தேவை.

 

ஆனால் இப்போது நீங்கள் என்ன பேசுகிறீர்கள், எங்கு இருந்தீர்கள்? நீங்கள் யாரை சந்தித்தீர்கள்? உங்களின் விருப்பம் என்ன இது எல்லாமே நீங்கள் வைத்திருக்கும் கருவியின் மூலம் ஒருவர் அறிந்து கொள்ளலாம். உங்களின் அலைப்பேசியை யாரும் தொடாமலேயே தூரத்திலிருந்தும் அவற்றை ஹேக் செய்ய முடியும். அதே போன்று உங்களின் குரல் கேட்டு வேலை செய்யும் டிஜிட்டல் கருவிகள் யாருக்கேனும் உளவு வேலை பார்ப்பதற்கான கருவியாககூட இருக்கலாம்.

உங்கள் அலைப்பேசியை தூரத்திலிருந்து இயக்க சில நாடுகளால் மட்டுமே முடியும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் நவீன உளவு பார்க்கும் வசதி தற்போது பல நாடுகளின் கையில் உள்ளது. நாடுகள் ஏன்? சிறு குழுக்கள், தனி நபர்கள் என அனைவரிடத்திலும் உள்ளது.

முன்னாள் அமெரிக்க உளவு பார்ப்பு ஒப்பந்ததாரர் எட்வேர்ட் ஸ்னோடென், சர்வதேச தொலை தொடர்பில் அமெரிக்க மற்றும் பிரிட்டனின் உளவு அமைப்புகளுக்கு இருக்கும் ஊடுறுவும் சக்தி குறித்து 2013ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

அந்த முகமைகள் எப்போதும் தங்களது திறமைகள் ஒரு ஜனநாயக நாட்டின் அங்கீகாரத்திற்கும், மேற்பார்வைக்கும் உட்பட்டது என தெரிவித்தன. ஆனால் சில சமயங்களில் இந்த அங்கீகாரம் வலுவற்றதாக இருந்தது ஆனால் அது நாளடைவில் வலுப்பெற்றது.

உளவு பார்த்தல்

எட்வேர்ட் வெளியிட்ட கருத்துக்கள் பிற நாடுகள் தங்களுக்கான வாய்ப்பை தேடும் சந்தர்ப்பத்தை உருவாக்கியது. பல நாடுகளும் இம்மாதிரியான உளவுப் பார்க்கும், பணியில் ஈடுபட நினைத்தன. எனவே அதுவரை வெளியில் பெரிதும் வெளிவராத குழுக்கள் தங்களின் விற்பனையை தொடங்கின.

இஸ்ரேல் எப்போதுமே உளவுப் பார்க்கும் வசதிகளில் சக்தி வாய்ந்த முதல் தர நாடாக இருந்து வருகிறது. அதன் நிறுவனங்களான என்எஸ்ஓ குழுமம் உளவு பார்க்கும் உலகத்தின் ஜாம்பவான்களால் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் உளவுப் பார்க்கும் தொழில்நுட்பத்தை வர்த்தகம் ஆக்கியது.

என்எஸ்ஓ குழுமம் தங்களின் உளவு மென்பொருள், குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு மட்டுமே விற்கப்படுகிறது என்று தெரிவிக்கிறது. ஆனால் அது எவ்வாறு வரையறுக்கபப்டுகிறது என்பதுதான் பிரச்னை.

ஏனென்றால் பல நாடுகள் பத்திரிகையாளர்கள், அரசுக்கு எதிரானவர்கள், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கின்றன. அவர்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயல்படுவதாக தெரிவிக்கின்றன. எனவே இதன் மூலம் அவர்கள் கண்காணிப்பு வளைத்திற்குள் வரலாம் அல்லவா?

என்க்ரிப்ஷன் வசதி அதிகரித்ததும் (ஒரு தகவலை `கோட்`டாக மாற்றுவது) மக்களின் அலைப்பேசிகளில் அரசு ஊடுறுவது அதிகரித்துள்ளது. அலைப்பேசி உரையாடல் என்பது அத்தியாவசமான நிலையில் ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் அலைப்பேசி லைன் வசதியில் ஒயரை இணைக்க (wiretap) செய்ய சொல்வது என்பது எளிதானதே.

தற்போது தகவல்கள் என்க்ரிப்ட் செய்யப்படுவதால் அந்த கருவியினுள் நாம் ஊடுறுவ வேண்டும். ஆனால் கையில் உள்ள கருவி என்பது ஒரு தகவல் களஞ்சியம்.

சில சமயம் நாடுகள் இதை விவரமாக செயல்படுத்துகின்றன. அதற்கு ஒரு சமீபத்திய எடுத்துக் காட்டு அமெரிக்க ஆஸ்திரேலிய கூட்டு நடவடிக்கை. இந்த நடவடிக்கையில் அதீத பாதுகாப்பு என்று கருதிய அலைப்பேசிகள் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்டன. ஆனால் அது அரசால் இயக்கப்பட்டன.

ஆனால் அலைப்பேசியை ஒட்டு கேட்பதை காட்டிலும் விஷயம் பெரிதாகி கொண்டிருக்கிறது.

ஹேக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆன்லைன் வர்த்தகத்தை ஹேக் செய்யும் வசதிகூட இப்போது எளிதானதாகிவிட்டது.

முன்னொரு காலத்தில் உங்களின் கம்ப்யூட்டரை ஹேக் செய்து அதை விடுவிக்க ஹேக்கர்கள் பணம் கேட்பார்கள் ஆனால் இன்றைய ’கள்ள ஆன்லைன்’ உலகத்தில் அது ஒரு சேவையாக விற்கப்படுகிறது.

ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தி லாபமாக ஒரு தொகை கொடுத்தால் இந்த மாதிரியான கருவிகளை விற்று விடுகிறார்கள். விற்ற பிறகு அதற்கான சேவை மற்றும் வழிகாட்டுதலுக்கு உதவி அழைப்பு எண்களும் வழங்கப்படுகின்றன.

அதேபோன்று ஒருவரின் இருப்பிடத்தை கண்டறிவது, ஒருவரின் செய்கை மற்றும் பழக்க வழக்கத்தை கண்டறிவது இதற்கெல்லாம் முந்தைய காலத்தில் பெரும் வசதி தேவை ஆனால் இப்போது இதற்கான கருவி எல்லாம் இலவசமாக உள்ளன.

உளவுப் பார்த்தல் என்பது நாடுகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மட்டுமல்ல.

சில நிறுவனங்களும் நம்மை பற்றிய தகவல்களை சேகரிக்கின்றன. இதை ஒரு உளவு மென்பொருளை பொறுத்திதான் செய்ய வேண்டும் என்பதில்லை. நாம் சமூக வலைத்தளங்களில் எதை அதிகமாக பார்க்கிறோம் எதை அதிகமாக தேடுகிறோம் என நிறுவனங்கள் தகவல்களை சேகரித்து அதை வர்த்தகத்திற்கு பயன்படுத்துகின்றன.

இம்மாதிரியாக நிறுவனங்களால் சேகரிக்கப்படும் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்படும் அபாயமும் உள்ளது.

சில உளவு பார்க்கும் கருவிகள் அல்லது வசதிகள் அனைவரும் வாங்க கூடியதாக உள்ளது. தங்களின் குடும்பத்தின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ள இம்மாதிரியான உளவு கருவியை வாங்குவோரும் உண்டு.

இது எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் நாம் யார் வேண்டுமென்றாலும் யாரை வேண்டும் மென்றாலும் உளவுப் பார்க்கலாம். அதே போன்று நம்மையும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உளவுப் பார்க்க நேரிடும்.

https://www.bbc.com/tamil/global-57922933

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா விவகாரம்: தவறாக வழிநடத்தப்பட்ட தமிழக அரசு முட்டுசந்தில் நிற்கிறது...  திருமுருகன் காந்தி விமர்சனம் - TopTamilNews

கலவரத்தை தூண்டியதாக திருமுருகன் காந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு || case  filed against thirumurugan gandhi by nungambakkam police

 

தமிழ்நாட்டில்... திருமுருகன் காந்தியும்,  இந்த மென்பொருள் மூலம் உளவு பார்க்கப் பட்டுள்ளார்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.