Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பெண் கைது: தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோதமாக படகில் தப்ப முயன்றபோது காவல்துறையினர் பிடித்தனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடு தப்பிச் செல்ல அவர் தமிழகம் வந்தாரா என மத்திய உளவுத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சிவனேசன் இவருடைய மகள் கஸ்தூரி (19). இறுதி கட்ட போரின் போது இலங்கையில் இருந்து தப்பி தமிழகம் வந்து இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி இருந்த நபருடன் ஏற்பட்ட காதலால் கஸ்தூரி 2018ஆம் ஆண்டு விமான மூலம் சென்னை வந்துள்ளார்.

விசா முடிந்த பின்னும் இலங்கைக்கு திரும்பி செல்லாமல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில்; சட்ட விரோதாக தங்கி வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவலை கிராமத்தில் வசித்து வரும் கஸ்தூரியின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் இலங்கைக்கு திரும்பிச் செல்ல இன்று அதிகாலையில் அவர் தனுஷ்கோடி வந்தார். அங்குள்ள நாட்டுப்படகு மூலம் கஸ்தூரி சட்டவிரோதமாக முல்லைத்தீவுக்கு புறப்பட்டுள்ளார்.

 

அப்போது தனுஷ்கோடியை அடுத்த இரண்டாம் மணல் திட்டு பகுதியில் இந்திய கடலோர காவல் படை ரோந்து படகு வந்ததையறிந்த படகோட்டி கஸ்தூரியை முதல் மணல் திட்டு பகுதியில் இறங்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தமிழக கடலோர பாதுகாப்பு குழும ராமேஸ்வரம் ஆய்வாளர் கனகராஜ் தலைமையிலான போலீசார் படகில் சென்று கஸ்தூரியை கைது செய்து தனுஷ்கோடிக்கு அழைத்து வந்தனர்.

கஸ்தூரியிடம் மெரைன் போலீசார் முதல் கட்ட விசாரணை செய்த பிறகு அவரை ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சமீப காலமாக இலங்கை மக்கள் சிலர் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகம் வந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக தப்பி செல்கின்றனர். எனவே பிடிபட்ட கஸ்தூரி வெளிநாடு செல்லவதற்காக தமிழகம் வந்து சட்டவிரோதமாக தங்கி இருந்தாரா என்ற கோணத்தில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோமாக நாட்டுபடகில் அழைத்து செல்ல அவருக்கு உதவிய ஏஜென்டை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கஸ்தூரியிடம் இருந்து பாஸ்போர்ட் உள்ளிட்ட இலங்கை குடியுரிமை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ராமேஸ்வரம் மெரைன் போலீசார் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்தனர். காவல்துறை விசாரணைக்கு பின் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பெண் கைது: தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோதமாக படகில் தப்ப முயன்றபோது காவல்துறையினர் பிடித்தனர் - BBC News தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.