Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமத்துவம்- நோர்வே பாரளுமன்ற தேர்தல் -பா.உதயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமத்துவம்- நோர்வே பாரளுமன்ற தேர்தல் 

“All men and women are born equal in the human sense”

மூன்றாம் உலக நாடுகளில் முக்கிய பதவிகளிலும் பாராளுமன்ற அங்கத்துவ பங்கீடுகளிலும் ஏனைய அதிகாரம் மிக்க துறைகளிலும் பெண்களின் சமத்துவ உரிமையானது புறக்கணிக்கப்படுகின்ற போதும் Rousseau என்ற தத்துவவியலாளரின் கோட்பாட்டுக்கு இணங்க பிறக்கும் போதே மனிதன் சகல சமத்துவமான உரிமையோடு தான் பிறக்கிறான் என்ற அடிப்படையில் நோர்வே நாட்டில் பெண்களின் சமத்துவ உரிமையானது அங்கீகரிக்கப்பட்டு மதிப்பளிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே.

 ஸ்ரீ லங்காவை பொறுத்த வகையில் சிங்கள தமிழ் பிரதேசங்கள் அனைத்திலும் ஆண்களின் பிரதிநிதித்துவமே அதிகமாக இருக்கிறது. அமைச்சு பதவிகளிலும் பெண்கள் புறக்கணிகப்படுகிறார்கள். அதி தீவிர மத வாதத்தை அடிப்படையாக கொண்ட நாடுகளில் பெண்கள் மனிதரில்லை என்றும் குழந்தை மட்டும் பெற்று தரும் ஒரு உற்பத்தி  பொருள் போன்று பார்க்கப்படுகிறார்கள்.(The only job of women is to give birth). இந்த அபத்தமான அநாகரிகமான செயல்களை அடியோடு நொருக்க வேண்டுமானால் அந்த பெண்கள் முன் வந்து போராட வேண்டும். இது இவர்களுக்கு உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தான் போராட வேண்டும் இதனால் பயத்தின் காரணமாக பலர் முன் வருவதில்லை.

வெள்ளை இனத்தவர்கள் ஆக்கிரமிப்பின் பேரில் வந்து அரேபிய ஆசிய ஆப்பிரிக்க பெண்களுக்கு அந்த நாட்டு ஆண்களிடம் இருந்து விடுதலை பெற்றுத்தர முடியாது. எந்த ஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து விடுதலை அடைவதற்கு அந்த பெண்களே முன் வந்து போராட வேண்டும். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் பெண்களின் சமத்தும் பாதுகாக்கப்படுகிறது. நோர்வேயை பொறுத்த வரையில் இன் நாடு எல்லா வழிகளிலும் பெண் சமத்துவத்தை முன்னிலைப் படுத்துகிறது. அமைச்சு உயர் பதவி உட்பட பெண்களின் விகுதாசாரம் சமத்தும் கொண்டதாகவே இருக்கிறது. வெளிநாட்டுத்துறை உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு உட்பட பல பெண்கள் முக்கிய அமைச்சு பதவிகளில் இருக்கிறார்கள். அண்மையில் நோர்வே பாரளுமன்ற தேர்தலில் பல கட்சிகளை பிரதிநிதுத்துவம் படுத்தும் பெண் வேட்பாளர்கள் வெற்றி அடைந்துள்ளனர். புலம் பெயர்ந்து இங்கு வாழும் வெளிநாட்டவர்கள் நோர்வே பிரஜாவுருமையை பெற்றவர்களும் வெற்றி அடைந்துள்ளனர். இது வரவேற்கத் தக்க ஒரு வரலாற்று நிகழ்வாகும். 

அந்த அடிப்படையில் ஈழத்து பெண்மணி ஒருவரும் தொழிற் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியடைந்துள்ளார். இவரைப் போலவே இன்னும் பல வெளி நாட்டுப் பின்னணியைக் கொண்ட பெண்கள் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். இவருக்கும்  இவரைப் போல் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்லும் பெண் உறுப்பினர்களுக்கும் பலர் வாழ்த்து தெரிவிப்பது மகிழ்ச்சியே. 

ஒடுக்கப்பட்ட உரிமை மறுக்கப்பட்ட நாட்டின் பின்னணியில் இருந்த வந்த பிணைப்புகளோடு பல சிறு பான்மை இன வேட்ப்பாளட்கள் இந்த கடினமான பாதைகளின் ஊடாகவே அவர்களின் அடையாள கலாச்சார  நம்பிக்கைகளோடும் மேலும் வாழும் இந்த நாடு கொடுத்த சக்தியோடும் கடந்து வந்திருக்கிறார்கள். இவர்களில் பலர் தம் தாய் நாடுகளில் முகம் கொடுத்த யுத்தம், அடக்கு முறை, ஒடுக்கு முறை, ஆண் ஆதிக்கம்,பேரினவாதம், இனவாத மோதல், இனவெறி, சமத்துவமின்மை போன்ற ஒடுக்கு முறைகளினாலும் மேலும் சிலர் தொழில் நிமிர்த்தம் கருதியும் புலம் பெயர்ந்த பின்னணியைக் கொண்டவர்கள். 

ஆதலால் இவர்கள் பணி தனியவே அன் நாட்டின் தேசிய அரசியலை மட்டும் பிரதிநிதிதுவது மட்டும் போல் அமையாது அறம் சார்ந்த அரசியலாக தம் மொழி தம் இனம் பெண் ஒடுக்கு முறை சார்ந்தும் இவர்கள் குரல் கொடுக்க வேண்டும். இந்த ஒடுக்கு முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குகளினாலும் இவர்களின் வெற்றி தீர்மானிக்கப்பட்டது என்பதை மறந்து விடக் கூடாது.

உங்களுக்கு வாக்களித்த எல்லா மக்களின் உரிமை சார்ந்து நீங்கள் பேச வேண்டும். முன்பு இருந்த உலகை விட இன்று இந்த உலகு அரசியல் பொருளாதார சுய நல சுரண்டல்களும், உலகு வன்முறையும் , ஒடுக்கு முறையும் , அதி தீவிரவாத மதத்தை முன்னிலைப்படுத்திய வன்முறைகளும் பயங்கரவாதமும், கலவரங்களும், பெண் ஒடுக்கு முறையுமாக தர்மத்தின் அச்சில் உலகம் சுளரவில்லை ஆதலால் உலக சமாதானம் அமைதி வேண்டி குரல் கொடுப்பீர்.

நோர்வே சிறிய நாடக இருந்த போதிலும் சமாதானத்துக்கான நோபல் பரிசு உட்பட பல நாடுகளிடையே சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய தீர்வு முயற்சியில் குறிப்பாக பாலைதீன போராட்டம் உட்பட தமிழர் தீர்வு உட்பட முக்கிய பாத்திரத்தை வகித்த அல்லது எதிர் காலத்தில் வகிக்கக் கூடிய நாடும் கூட இருந்த போதிலும் இன்னும் பல மிகவும் சக்தி வல்லமை மிக்க நாடுகளான பிரித்தானிய பிரான்ஸ் ஜெர்மனி போன்ற நாடுகளிலும் அந்த அரசியலிலும் நாம் சொல்வாக்கு செலுத்துவர்களாக புலம் பெயர் தமிழர்கள் மாற வேண்டும்.

 உனக்கான விடுதலையை நீயே தேட வேண்டும் ஊக்கிவிக்க வேண்டும். அறிவுசார் ( Intellectual) புலமை சார் மனிதர் போல்  அடிக்கடி பெண் விடுதலை என்றும் அரசியல் கருத்தரங்கு என்றும் இலக்கியச் சந்திப்பு என்றும் கதைத்தும் எழுதியும் வந்தால் மாத்திரம் போதாது அதன் படி நடக்க வேண்டும். சுய நலன்களோடும் சந்தர்பவாதங்களோடும் கூடிய சமரசங்களோடு பெயருக்கும் புகழுக்கும் அங்கீகாரத்துக்கும் மாத்திரம் இன்றி  பொய் முகங்களை கழட்டி உண்மை மனிதராக நாம் எல்லாம் மாறவேண்டும்.

பா.உதயன் ✍️


 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.