Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரும் தாக்குதலுக்கு தயாராகும் விடுதலைப் புலிகள்: ரொய்ட்டர்ஸ்

Featured Replies

பெரும் தாக்குதலுக்கு தயாராகும் விடுதலைப் புலிகள்: ரொய்ட்டர்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்களில் கடுமையான பயிற்சிகள் நடந்து வருவதாகவும், இத்தாக்குதல் உத்திகள் விரைவில் சிறிலங்காப் படையினருக்கு எதிரான உண்மையான தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயன்படும் என்று அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் போராளி தெரிவித்ததாக அனைத்துலக செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு சைமன் ஹார்ட்னர் எழுதிய ஆய்வுப்பத்தியின் விபரம்:

முதலில் பெரும் வெளிச்சம் தோன்றியது அதன் பின்னர் இடிமுழக்கம் போன்ற ஒசை எழுந்தது. விடுதலைப் புலிகளின் போராளியான எஸ்.கடலரசன் தனது எறிகணை- உந்துகணை செலுத்தியை இறுகப் பற்றியிருந்தார் விடுதலைப் புலி போராளி கடலரசன். இது அவரது எதிர்காலத் தாக்குதலின் வடிவம்.

சிறிய குழிக்குள் படுத்தவாறு தாக்குதலுக்கான பயிற்சிகளை எடுத்து காட்டுப்புற சண்டைகளை விடுதலைப் புலிகள் கற்றுக்கொண்டிருந்தனர். இரு தசாப்தங்களுக்கு மேலாக போரிட்டுக் கொண்டிருக்கும் தமிழீழத் தாயகமானது வடக்கு - கிழக்கில் உருவாகும் என அவர் கருதுகின்றார்.

எவ்வாறு எதிரியின் போர் தாங்கிகளையும், கவச வாகனங்களையும் அழிப்பது என்பது தான் களமுனைகளில் உள்ள பிரதான குறிக்கோள் என அவர் கூறினார். ஏனைய போராளிகள் மறுமுனையில் உள்ள பதுங்குகுழிக்குள் இருந்து 0.50 கனரக கலிபர் துப்பாக்கிகளனால் சுட்டுக்கொண்டிருக்க, போராளிகள் கைப்பற்ற வேண்டும் என முன்னேறிக்கொண்டிருக்கும் திசையில் முட்கம்பிகளும், போலியாக வடிவமைக்கப்பட்ட இலக்கும் இருந்தது.

"நான் எதிரியின் வாகனத்தை தகர்த்தால் பெரும் மகிழ்ச்சி அடைவேன், ஏனெனில் எமது அப்பாவி மக்களை கொல்லவே எதிரியானவன் வருகின்றான். எதிரியை தாக்கி, அவனை கொல்வதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்" என கடலரசன் தொடர்ந்து கூறினார்.

கடலரசன் (வயது 22) மூன்று வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்தார். இந்த உள்நாட்டுப் போரின் புதிய அத்தியாயத்தில் தான் 15 படையினரை கொன்றுள்ளதாக அவர் தெரிவித்தார். 1983 ஆம் ஆண்டில் இருந்து நடைபெறும் இப்போரில் ஏறத்தாழ 70,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த இரகசிய பயிற்சி மைதானம் விடுதலைப் புலிகளின் பலம் பொருந்திய தளமான வடபகுதியின் உட்பகுதியில் அமைந்துள்ளது. ஆனால் பாதுகாப்புக் காரணங்களுக்காக செய்தியாளர்களுக்கு அதன் அமைவிடத் தகவல்கள் வழங்கப்படுவதில்லை. சில மைல்கள் தொலைவில் உள்ள முன்னரங்க நிலைகளுக்கு அண்மையில் பீரங்கி எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. இது அவர்களின் முன்னுள்ள உண்மையான நிலையை உணர்த்தியது.

வரிப்புலி சீருடை மற்றும் பச்சை நிற சீருடை தரித்த டசின் கணக்கான ஏனைய போராளிகளும் போலியான அந்த இலக்கை கைப்பற்றும் வண்ணம் அதனை நோக்கி உண்மையான சூட்டாதரவுடன் முன்னேறிக்கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் சப்பாத்துக்களையும், சிலர் செருப்புக்களையும் அணிந்திருந்ததுடன் சிலர் வெறும் காலுடன் முன்னேறிக் கொண்டிருந்தனர்.

இதில் ஒரு பகுதிக்குரிய தாக்குதலை மகளிர் படையணி மேற்கொண்டிருந்தது. சீனத்தயாரிப்பு ரி-56 ரக தாக்குதல் துப்பாக்கிகளுடன் அவர்கள் விரைவாக முன்னேறிக் கொண்டிருந்தனர். கற்பனையான எதிரியைக் கொல்லும் நோக்குடன் பதுங்கு குழிகளை நோக்கி தாக்குதலை நடத்தியபடியும் ஆதரவுச் சூடுகளை வழங்கிய படியும் அவர்கள் முன்னேறிக் கொண்டிருந்தனர்.

பல நூறு மீற்றர் தூரத்திற்கு அப்பால் இருந்த உலோகத்தகட்டில் வர்ணம் பூசப்பட்ட இராணுவத்தினரின் முகங்கள் துப்பாக்கிச் சன்னங்களால் சல்லடையாக்கப்பட்டிருந்ததை அருகில் சென்று பார்த்த போது காணமுடிந்தது. இத்தாக்குதல் உத்திகள் விரைவில் சிறிலங்காப் படையினருக்கு எதிரான உண்மையான தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயன்படும் என பயிற்சியாளர் தெரிவித்தார்.

கிழக்கில் மேற்கொள்ளப்ப்பட்ட படை நடைவடிக்கைகளில் பெருமளவான நிலப்பரப்பை படையினர் கைப்பற்றியுள்ளனர். எனவே தமது போர் உத்திகளை மாற்றி முக்கிய பொருளாதார மற்றும் படை நிலைகளை தாக்கப் போவதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது நாட்டின் 23 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை முடக்கும் நடைவடிக்கையாகும். அவர்களின் சில உத்திகள் மரபு வழியற்ற போர்முறைகளில் இருந்து உருவாகியவை.

"நாங்கள் பல சமர்களில் இருந்து அனுபவங்களை பெற்று வருகின்ற போதும், போர் உத்திகள், வியூகங்கள் தொடர்பாக நாம் பல நூல்களையும் கற்று வருகின்றோம்" என்று லெப். கேணல் வி.நிசாந்தன் மாஸ்ரர் தெரிவித்தார்.

நிசாந்தன் மாஸ்ரர், தாக்குதல் மற்றும் தற்காப்பு உத்திகளில் மிக சிறந்த பயிற்சியாளர். அவரே இந்த பயிற்சியின் மார்சல் தாக்குதலாளி. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த 20 வருடங்களில் அதிக காலங்கள் மறைந்தே வாழ்ந்து வருகின்றார். அவர் தேசியத் தலைவர் என அழைக்கப்படுகின்றார்.

பழைய காலத்து சீன போரியல் மேதையான சன் சூ, நெப்போலியன் காலத்து போர் தொடர்பான நூல்களை நிசாந்தன் மாஸ்ரருக்கு படிக்கும் படி அவர் கொடுத்துள்ளார். பல தாக்குதல் திரைப்படங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து பல உத்திகளை நாம் பெற்றுள்ளோம் என நிசாந்தன் மாஸ்ரர் மேலும் தெரிவித்தார்.

போர்ப் படங்களையே தாம் பார்ப்பதுண்டு என தெரிவித்த அவர் சேவிங் பிரைவேற் றையன், பிளக் ஹவாக் டவுன் போன்ற படங்களை பட்டியல்படுத்தினார். போராளிகளுக்கு குங் பூ அசைவுகளை கற்பிற்பதற்காக ஜக்கிச்சான் மற்றும் புறூஸ் லீ போன்றவர்களின் படங்களும் காண்பிக்கப்படுவதுடன், அவர்களின் சிறிய ஓய்வுக்காக பைன்டிங் நிமோ போன்ற கேலிச்சித்திர மற்றும் சிறுவர் படங்களும் காண்பிக்கப்படுவது உண்டு.

சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கே எனக்கு விருப்பம். எனினும் ஆக்கிரமிப்புப் படைகளை வெளியேற்றுவதற்காக நான் இங்கு பயிற்சிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றேன். நிச்சயமாக நாம் எமது தாயகத்தில் இருந்து சிறிலங்காவின் ஆயுதப்படைகளை வெளியேற்றுவதுடன் தமிழீழத்தையும் அமைப்போம். அதில் எனக்கு துளி சந்தேகமும் இல்லை என்று நிசாந்தன் மாஸ்ரர் தெரிவித்தார்.

36 வயதான அவர் 19 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்ததில் இருந்து சிறிலங்காப் படையினருடனான பல பெரும் சமர்களில் பங்குபற்றியவர் ஆவார். போர்க்களங்களில் திறமையாக செயற்பட்டமைக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனக்கு புத்தகங்கள், சான்றிதழ்கள், டோர்ச் லைற் போன்ற பரிசில்களை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளை அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் பயங்கரவாதிகளின் பட்டியலில் இணைத்து தடை செய்துள்ளன. கிழக்கில் தாம் கெரில்லா தாக்குதலில் ஈடுபடப் போவதாக விடுதலைப் புலிகள் இந்த வாரம் அறிவித்திருந்தனர். அவர்கள் பல வழிகளில் சாவதற்கு துணிந்துள்ளனர்.

நான் விழ நேரிட்டால் என் இந்த எறிகணை உந்து செலுத்தியை எடுத்துக்கொள்ள மற்றொருவர் வருவார் என பயிற்சி நடவடிக்கையின் போதான உறுதிமொழிகளை எடுத்த பின்னர் கடலரசன் தெரிவித்தார்.

ஏனைய போராளிகளைப் போலவே தனது கழுத்தில் அணிந்துள்ள வெள்ளை நிற சயனைட்டைக்கொண்ட கண்ணாடிக்குப்பியை அவர் எனக்கு காண்பித்தார். நாம் கடுமையாக காயமடையும் போது எதிரி எம்மை கைது செய்ய முயன்றால் நாம் மரணிக்க வேண்டும். எனவே எமது இறுதி முடிவாக இதனை நாம் கடித்து விடுவோம். எதிரியிடம் இருந்து எமது இரகசியங்களை காப்பதற்கும், அவர்களின் சித்திரவதைகளை தடுப்பதற்குமாக நாம் எம்மை அழித்துக் கொள்ள சயனைட் குப்பிகளே தீர்வாகும் என்று சிரித்தவாறே கடலரசன் கூறினார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Puthinam-

Edited by யாழ்வினோ

சமபலம் மீண்டும் நிருபிக்கப்பட வேண்டும். பேச்சவார்த்தைக்குத் தற்போது மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னித்தள முற்றுகைக்கும் அரசும் இராணுவமும் தயாராகிவிட்டனர். முடிவுகளின் தன்மை எத்தகையது என்பதை யாராலும் கணித்த விடுவது இயலாத காரியம். தற்போதைய நிலவரம்???????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.