Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக முகாமிலிருந்து கனடாவுக்கு தப்பமுயன்ற 64 தமிழரக்ளுக்கு நேர்ந்த கதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முகாமிலிருந்து கனடாவுக்கு தப்பமுயன்ற 64 தமிழரக்ளுக்கு நேர்ந்த கதி!

தமிழகத்தில் உள்ள  ஈழத்தமிழா் அகதிகள் முகாம்களில் இருந்து 64 போ் படகு மூலமாக,  தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்று மாலத்தீவு அருகே சா்வதேச பொலிஸாரிடம் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .

 அகதிகள் முகாம்களில் வசிக்கும் 64 போ் கடந்த செப்டம்பா் முதல் வாரத்தில் கேரளத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் இந்தியப் பதிவு பெற்ற படகை விலைக்கு வாங்கி அதில் 20 பேரை ஏற்றிக் கொண்டு கனடாவில் தஞ்சம் புகத் திட்டமிட்டிருந்தனராம்.

இந்நிலையில் மாலைத்தீவு மற்றும் மொரீஷியஸ் நாடுகளுக்கு இடையிலான கடற்பரப்பில் இவா்கள் சென்ற படகு மோசமான வானிலை காரணமாக, சா்வதேச பொலிஸாரிடம் சிக்கினராம். மாலைத்தீவு அருகே உள்ள டிக்கோ காா்சியா என்ற தீவு அமெரிக்காவுக்கு சொந்தமானதாக உள்ளது.

அமெரிக்காவின் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் தீவில் அத்துமீறி இவா்களின் படகு நுழைந்ததாகக் கூறி அமெரிக்க படைகள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. எனினும் இதுவரை இந்தியத் தூதரகத்துக்கு இது குறித்து எந்தவிதமான தகவலும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

தமிழகத்தில் உள்ள முகாம்களில் இருந்து 64 அகதிகள் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தப்ப முயன்றதாக வந்த தகவலையடுத்து க்யூ பிரிவு பொலிஸாா், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் கடந்த 3 நாள்களுக்கும் மேலாக தீவிர சோதனை நடத்தி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் , தற்போது வரை இந்த 64 பேர் யார் என்பதை உளவுத்துறை பொலிஸாரால் உறுதி செய்ய முடியவில்லை. அதேநேரத்தில் கடற்பரப்பில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படும் 64 நபா்களின் விவரங்களைப் பெறுவதற்காக தமிழக பொலிஸார் சா்வதேச பொலிஸாா் உதவியை நாடி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

https://www.thaarakam.com/news/0f655dbf-c4ff-4b0e-b3ee-5b6ee3b7ee02

  • கருத்துக்கள உறவுகள்

தங்களிடம் தஞ்சம் அடை.ந்த இலங்கை தமிழ் அகதிகள் நிம்மதியாக வாழ்வதற்கு தளம் அமைத்து கொடுக்க முடியாத பாரத நாடு இலங்கை தமிழர்களுக்கு உரிமைகளை பெற்று கொடுக்கும், தனிநாடு கிடைக்க உதவும் என்று எல்லாம் நம்புவதற்கும், கனவு காண்பதற்கும் இன்னும் பலர் உள்ளார்கள்.

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாலத்தீவில் தத்தளிக்கும் ஈழத்தமிழர்கள்! – தோ.ம.ஜான்சன், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்

October 20, 2021

தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அகதிகள்கடந்த 08.10. 2021 வெள்ளிக்கிழமை அன்று தியேகோ கார்சியா தீவுக்கும் மாலத்தீவுக்குமிடையில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அகதிகள் 85 பேர் அமெரிக்கக் கடற்படையால் மீட்கப்பட்டு, மாலத்தீவு அரசிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் உள்ளன. இவர்களில் கிட்டத்தட்ட  59 பேர் தமிழ்நாட்டின் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களிலிருந்து தப்பிச் சென்றவர்கள் எனக் கருதப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகிறன.

தமிழ்நாட்டின் மதுரை, திருச்சி, கரூர், சேலம் போன்ற இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களிலிருந்து கனடா செல்லும் நோக்கத்தோடு கேரளாவில் கொல்லம் என்ற இடத்திலிருந்து கடல்வழியாக ஆப்பிரிக்கா சென்று அங்கிருந்து கனடா செல்லும் திட்டத்தில் இவர்கள் பயணித்ததாக சொல்லப்படுகிறது.

இந்தியாவில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களை அகதிகளாகப் பதிவு செய்து, முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியிலும் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்கள், தாங்கள் எதிர்பார்த்த வாழ்க்கைச் சூழல் இந்தியாவில் இல்லாத நிலையில், தங்கள் உயிரைப் பணயம் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் 108 முகாம்களில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களுக்கு இதுநாள்வரையில் இந்திய அரசால் குடியுரிமை வழங்கப்படவில்லை. இலங்கைத் தமிழ் அகதிகளின் குழந்தைகளுக்கான கல்வி, வேலைவாய்ப்புப் போன்றவை இன்னும் கேள்விக்குறியாக உள்ளன. நாடற்றவர்களாக அயல் நாட்டவர் என்ற முத்திரையில் இந்தியாவில் வாழ்ந்து வருகின்ற காரணத்தால், தனிப்பட்ட தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியாமலும், தொழில்துறையில் முன்னேற முடியாமலும் பெரும்பாலான ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டில் வறுமையில் துன்பப்பட்டு வருகின்றனர்.

 

மாலத்தீவில் தத்தளிக்கும் ஈழத்தமிழர்கள்இந்தியாவில் அகதியாக இருந்து கனடா சென்று குடியேறும் ஈழத்தமிழர் ஒரு சில ஆண்டுகளில் அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டு நிலைமையோ மிகவும் மோசமாக உள்ளது.

இந்தியா அகதிகள் நிலை குறித்த பன்னாட்டு உடன்படிக்கை 1951 இல் கையெழுத் திடாத காரணத்தால், இன்று வரையில் ஈழத்தமிழர்களைச் சட்டவிரோதக் குடியேறிகள் என்று ஒற்றை வார்த்தையில் அவர்களுக்கான உரிமைகளை மறுத்து விடுகிறது. இந்தியாவுக்குள் நுழைவதற்கும் இந்தியாவைவிட்டு வெளியேறுவதற்கும் பல்வேறு சட்டதிட்டங்களும், கட்டுப்பாடுகளும் ஈழத்தமிழர்களுக்கு தடையாக உள்ளன.

இலங்கை இனப்பிரச்சினையில் 2009இல் இறுதி முடிவு வந்துவிட்டதாக கூறி இந்தியாவில் புதிதாக வரும் ஈழத்தமிழர்களுக்கு அகதிப் பதிவு கூட வழங்கப் படுவதில்லை. ஆனால் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் பேரவையானது இலங்கையில் இன்னும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாகப் பதிவு செய்கிறது. இந்நிலையில் யாராவது ஒரு ஈழத்தமிழர் தன் உயிரைக் காத்துக்கொள்ள கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தால்,  அவர் கைது செய்யப்பட்டுக் கடவுச்சீட்டு வழக்குகள் தொடுக்கப்பட்டு அவர் சிறையிலிருந்து பிணையில் விடுதலையானாலும், வழக்கை முடித்து சிறையிலிருந்து வெளிவந்தாலும் மீண்டும் கைது செய்யப்பட்டு இந்திய அயல் நாட்டினர் சட்டம் பிரிவு 3 (2 )இ-ன் படி சிறப்பு முகாம் என்கின்ற ஒருவகையான சிறைக்குள் மீண்டும் அடைக்கப்பட்டு கேள்வி கேட்பாரற்று பல்லாண்டுகள் அங்கு இருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

இந்தியாவில் தங்களை அகதிகளாகப் பதிவு செய்து கொண்டவர்களும், இந்தியாவில் திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டவர்களும் இதுபோன்ற கடவுச்சீட்டு வழக்குகளில் தொடர்பு உள்ள பொழுது அவர்களும்  சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுகின்றனர்.

ஈழத்தமிழர்களின் வாழ்க்கைத் தரம் என்பது பிற தேசங்களில் வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிடும் பொழுது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. எவ்வளவு கல்வி கற்றாலும் எத்தகைய திறமை இருந்தாலும் தலைமுறை தலைமுறையாக ஈழத்தமிழர்கள் அடுத்தகட்ட முன்னேற்றத்துக்குச் செல்ல முடியாத தடைகள் இந்தியாவில் உள்ளன. இதன் காரணமாக ஏதாவதொரு வகையில் தங்கள் வாரிசுகளையும், குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற உந்துதலில் வேறுவழியின்றி ஈழத்தமிழர்கள் இது போன்று உயிரைப் பணயம் வைத்து பல நாட்கள் நெடுந்தொலைவு அலைகடலில் ஆபத்துடன் பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கியமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதுதான் உண்மை.

ஏற்கனவே இத்தகைய கடல் பயணங்களில் நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்கள் நடுக்கடலில் மாண்டு போனதையும், பல்வேறு துன்பங்களுக்கு ஆளானதையும் நாம் அறிவோம். கடல் வழியாக வருகின்ற அகதிகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளதையும், ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பயணம் செய்து நூற்றுக்கணக்கானவர்கள் கடலில் தத்தளித்து, பல்லாண்டுகள் இன்றளவும் மிகவும் பின்தங்கிய போராட்டச் சூழலில் இந்தோனேசியாவில் வாழ்ந்து வருகின்ற நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அண்மையில் சில மாதங்களுக்கு முன்னர் இதேபோன்று இந்தியாவிலிருந்து மங்களூர் வழியாக கனடா செல்ல முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கர்நாடக மாநிலத்தில் 38 பேரும் மதுரையில் 23 பேரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு தற்பொழுது அவர்களையும் சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கும் முயற்சிகளை கர்நாடக, தமிழக அரசுகள் செய்து வருகின்றன.

https://www.ilakku.org/sltamil-refugees-staggering-between-the-maldives/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.