Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவுக்கு மேலதிக "அதிர்ச்சிகள்" காத்திருக்கின்றன: புலிகளின் இராணுவப் பேச்சாளர்.

Featured Replies

சிறிலங்காவுக்கு மேலதிக "அதிர்ச்சிகள்" காத்திருக்கின்றன: புலிகளின் இராணுவப் பேச்சாளர்.

சிறிலங்காவுக்கு மேலதிக அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் எச்சரித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகமான த நேசனுக்கு இராசையா இளந்திரையன் அளித்துள்ள நேர்காணல்:

சிறிலங்கா அரசாங்கமானது இரண்டு தடங்களில் பயணிக்கிறது. போர் ஒருபுறம் என்றும் மறுபுறம் அமைதி என்றும் கூறிவருகிறது. இரண்டையும் அடையக்கூடிய சாத்தியம் இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கில் இல்லை என்கின்றனர். புலிகள் எங்கும் இருப்பார்கள். மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலையில் நாம் நிலைகொண்டுள்ளோம். ஆனால் உங்களுக்குத் தெரியாது.

சிறிலங்கா அரசாங்கமானது தமிழ் மக்கள் மீது இனப்படுகொலைத் தாக்குதல்களை நடாத்தி வருகிறது. இதற்குப் பதிலடியாக எமது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தி இனப்படுகொலையிலிருந்து எமது மக்களைப் பாதுகாப்போம்.

குடும்பிமலை வெற்றி நிகழ்வை கொண்டாடுகிறது மகிந்த ராஜபக்ச அரசாங்கம். புலிகளிடம் நிறைய "அதிர்ச்சிகள்" காத்திருக்கின்றன.

குடும்பிமலையில் கடந்த 15 ஆண்டுகாலமாக எதுவித நிரந்தர இராணுவ முகாமையும் நாங்கள் அமைத்திருந்தது இல்லை. குடும்பிமலை வெற்றி என்று சிறிலங்கா அறிவித்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அது ஒன்றும் பாரிய தோல்வி அல்ல.

கிழக்கில் தங்களது படைபலத்தை விரிக்க வேண்டிய நிலை சிறிலங்காவுக்கு உருவாகியுள்ளது. அவர்களால் அங்கிருந்து வடக்குக்கோ இதர பகுதிகளுக்கோ எளிதில் நகர்ந்துவிட முடியாது. குடும்பிமலையை எத்தனைகாலம்தான் தக்க வைப்பார்கள் என்று நாங்களும் பார்ப்போம்.

குடும்பிமலை என்பது ஒரு மலைப் பிரதேசம். அதனை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாயின் ஆளணி மற்றும் வளங்களை வீணடிக்க வேண்டியதிருக்கும். மலைகளை ஊடுருவிச் செல்ல சிறிலங்கா இராணுவம் விரும்புவதில்லை. அந்தப் பிரதேசத்தை சில படையணிகளால் மட்டுமே பாதுகாத்துவிட முடியாது.

குடும்பிமலையில் தற்போது இரு படையணிகள் மட்டுமே இருப்பதாக கேள்விப்படுகிறோம். இந்த இரு படையணிகளால் நீண்டகாலத்துக்கு குடும்பிமலையை தக்க வைத்துக் கொள்ள முடியாது.

குடும்பிமலையை அரசாங்கம் எடுத்துக் கொண்டதால் அதற்கு நிச்சயமாக கூடுதல் பலன் இருக்கலாம். ஆனால் இதுவே இறுதியல்ல.

கிழக்கில் அரசாங்கம் தேர்தலை நடத்தினாலும் அங்கு ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடைபெறாது. பெரும்பாலான மக்கள் தேர்தலில் பங்கேற்பதை விரும்பவில்லை. கிழக்கில் தன் கட்டுப்பாட்டைக் காட்டுவதற்கு மகிந்த அரசாங்கம் முயற்சிக்கிறது என்றார் இளந்திரையன்.

-Puthinam-

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

புலிகளால் அறிவித்தபடி கொழும்பில் தாக்குதல் நடத்த இயலாது: சிறிலங்கா இராணுவப் பேச்சாளர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்தபடி கொழும்பில் தாக்குதல் நடத்த இயலாத அளவுக்கு பாதுகாக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க கூறியுள்ளதாவது:

கொழும்பில் உள்ள பொருளாதார நிலைகளைத் தாக்கப் போவதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளமை குறித்து நாங்கள் கவலைப்படவில்லை.

கடந்த ஆண்டு முதல் வலிந்த நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ளும்போதெல்லாம் இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் அவர்களால் அறிவித்தபடி எதனையும் செய்ய இயலாது.

கொழும்பு நகரமானது பாதுகாப்புத் தரப்பினரால் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகருக்காக நன்கு பாதுகாக்கப்பட்ட திட்டமிடல்களை வைத்துள்ளோம். இப்போதும் முன்னரும் பயங்கரவாதிகளின் சதிகளையும் தளபாடங்களையும் நாம் கைப்பற்றியிருக்கிறோம் என்றார் பிரசாத் சமரசிங்க.

-Puthinam-

அரசாங்கமும் இப்படி டூப் விட்டி கொண்டு தான் இருக்கு ஆனால் அடிக்கிற்வர்கள் அடித்து கொண்டு தான் இருகிறார்கள்.................

அப்ப நான் வரட்டா............... :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.