Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அ.தி.மு.க. வின் 50ஆவது ஆண்டு பொன்விழா இன்று!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க. வின் 50ஆவது ஆண்டு பொன்விழா இன்று!

spacer.png

அ.தி.மு.க. வின் 50ஆவது ஆண்டு பொன்விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

1972ஆம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர். அதே ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் திகதி அ.தி.மு.க.வை தொடங்கினார். கட்சி தொடங்கி இன்றோடு 49ஆண்டுகள் நிறைவடைந்து, 50வது ஆண்டு பொன்விழா தொடங்குகிறது.

இதையொட்டி, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியின் பொன்விழாவை பிரமாண்டமாக கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர்.

அதன்பின்னர் கட்சி கொடியை இருவரும் ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கவுள்ளனர். தொடர்ந்து, அ.தி.மு.க. பொன்விழா சிறப்பு மலர் வெளியிடப்படவுள்ளது.

அதன்பிறகு தொண்டர்கள் புடைசூழ ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைக்கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

 

https://athavannews.com/2021/1245257

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மலரஞ்சலி

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடத்தில் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரான சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதிமுக கட்சி தொடங்கப்பட்டு பொன்விழா கொண்டாடப்படும் தருணத்தில் அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான சசிகலா, ஜெயலலிதா மட்டும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

image_poli_161021.jpg

இதற்காக இன்று காலை சென்னை தி. நகரில் உள்ள அவரது வீட்டிலிருந்து அதிமுக கொடி கட்டப்பட்ட வாகனத்தில் புறப்பட்டார். சசிகலாவின் வருகையை முன்னிட்டு ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

சசிகலா ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வருகை தந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

poli_2.jpg

''கடந்த ஐந்து ஆண்டுகளாக என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்திருக்கிறேன். 

ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஏன் தாமதமாக வந்தேன்? என்று அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதாவுடன் நான் இருந்த காலங்கள் என் வயதின் முக்கால் பகுதியாகும். எம்ஜிஆர், ஜெயலலிதா தமிழக மக்களுக்காகவும், தொண்டர்களுக்காகவும் வாழ்ந்தனர்.  

இருவரும் அதிமுகவை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் புறப்படுகிறேன்.'' என்றார்.

poli_3.jpg

 

https://www.virakesari.lk/article/115409

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.