Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் இராணுவக் கெடுபிடிகளால் "போசாக்கின்மை சிறார்கள்" அதிகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இராணுவக் கெடுபிடிகளால் "போசாக்கின்மை சிறார்கள்" அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் கெடுபிடிகளால் மக்களின் வாழ்வாதாரங்களான விவசாய செய்கைகளும் மீன்பிடித் தொழிலும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால் சத்துள்ள உணவுப் பொருட்களை சந்தைகளில் விலைக்கு வாங்க இயலாமையினால் சிறார்கள் போசாக்கினமை அவலத்துக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது என்று ஐ.ஆர்.ஐ.என். என்ற நிறுவனத்தின் ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் ஆய்வுக் கட்டுரை:

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போசாக்கின்மை அதிகரித்து வருவதாக சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அனைத்துலக நிறுவனங்களின் கணக்கெடுப்புகளில் தெரியவந்துள்ளது.

போர் மற்றும் இடம்பெயர்தல்கள், ஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்டமை ஆகியவற்றால் வாழ்வாதாரங்கள் மற்றும் சந்தைகள் ஆகியன பாதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு தொடர்பிலான தடைகளால் மீன்பிடித் தொழில் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்தோருக்காக உணவுப் பொருட்களை விநியோகிக்கும் அமைப்புகளிடம் சில மாதங்களுக்கான குறைந்த அளவிலான பொருட்களே கையிருப்பில் உள்ளன.

யாழ். மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகைய்ல் 51 விழுக்காட்டினர் அதாவது 96,500 பேர் விவசாயத் தொழிலாளர்கள் என்று யாழ். சிறிலங்கா அரச அதிபர் கே. கணேஸ் தெரிவித்துளார். அதி உயர் பாதுகாப்பு வலயங்களினால் விவசாய விளைபொருட்களை அவர்களால் செய்விக்க இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயத்திற்கான பூச்சிமருந்து உள்ளிட்டவைகளின் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்தினரின் பாரிய கெடுபிடிகளால் யாழ். மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 9 விழுக்காடு உள்ள அதாவது 17,500 கடற்றொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், யாழ்ப்பாணத்தை இலங்கையின் பிற பகுதிகளுடன் இணைக்கும் பிரதான ஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதனால் கப்பல்கள் மற்றும் வான்வழிப் போக்குவரத்தினூடே மிகக்குறைவான பொருட்களே யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

யாழில் 1,65,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் உணவுப் பொருட்களின் உதவியை சார்ந்திருக்கின்றனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் அத்தியாவசிய பொருட்கள் திணைக்களத்தின் ஆணையாளர் இது பற்றி கூறுகையில், 45 ஆயிரம் பேருக்கு அரசாங்கம் உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்கிறார். உலக உணவுத் திட்டத்தின் கீழ் 1,20,000-க்கும் அதிகமானோருக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

"பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக இலவசமாக இடம்பெயர்ந்தோருக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாக" யாழ். அரச அதிபர் கணேஸ் தெரிவித்துள்ளார். ஆனால் யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்கள் விநியோக இலக்கை அடைவது என்பது சவாலானாதாக இருக்கிறது என்கின்றனர் உலக உணவுத் திட்ட அமைப்பினர்.

"ஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்டமையால் உணவுப் பொருட்களை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வருவதில் கடும் சோதனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது" என்கிறார் சிறிலங்காவின் உலக உணவுத் திட்ட தாற்காலிக இயக்குநர் ஜின்யெவ்ஸ் லெகுமி.

"யாழ். மாவட்டத்துக்கு மேலதிகமாக உணவுப் பொருட்கள் தேவைப்படுகின்றன. பாதிக்கப்பட்டிருக்கக் கூடியோரில் விலை கொடுத்து வாங்க முடியாதோருக்கு இவை அவசியமானதாகும்" என்றார் அவர்.

மாதந்தோறும் 1,500 தொன் உணவுப் பொருட்களை கப்பலில் உலக உணவுத் திட்டத்தினர் ஏற்றிச் செல்லலாம் என்று அத்தியாவசிய பொருட்களின் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

அதே நேரத்தில் இடம்பெயர்ந்துள்ள 1,20,000 பேருக்கான உணவுப் பொருட்கள் வழங்க மாதத்துக்கு 2500 தொன் கப்பலில் ஏற்றி வர வேண்டும். தற்போது 20 விழுக்காட்டினருக்கே வழங்கி வருகிறோம்" என்று உலக உணவுத்திட்ட அமைப்பினர் கவலை தெரிவித்தனர்.

ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் 830 தொன் கலவை உணவும் ஜூன் மாதத்தில் 700 தொன் கோதுமை மாவும் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்டன. கடந்த மே மாதம் 200 தொன் கோதுமை மா தான் யாழ்ப்பாணத்துக்கு வந்தது.

யாழ். நகரில் உள்ள பெரிய தேவாலயத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள பாடசாலையில் நலன்புரி மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. தேவாலயத்தின் கூடுமிடத்தில் 28 குடும்பங்கள் தங்கியிருப்பதாக அந்த தேவாலயத்தின் ரெக்கி இராஜேஸ்வரன் அடிகளார் கூறினார். கடந்த ஓகஸ்ட் மாதம் அல்லைப்பிட்டியிலிருந்து நூற்றுக்கணக்கணக்கில் வெளியேறியவர்கள் அவர்கள். "உணவுப் பற்றாக்குறை பாரிய அளவில் உள்ளது. மக்கள் பசியால் வாடுகின்றனர். இங்கே போசாக்கின்மை அதிகரித்துள்ளதாக கருதுகிறேன்" என்றும் அவர் கூறினார்.

"எங்களது நகைகள், ஈருருளிகள், வானொலிகளை அடகு வைத்து காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்குவதாக" ரோசாரியோ செல்வாஜம் என்ற அகதி தெரிவித்தார்.

யாழ். நகரில் நாவாந்துறையில் மற்றொரு நலன்புரி மையம் உள்ளது. அந்த மையத்திலிருந்த ஜசந்த அருள்நேசன் கூறுகையில், ஒரு நாளைக்கு இரு வேளைகளோ அல்லது ஒரு வேளையோ உணவு உட்கொள்கிறோம். கடந்த ஜனவரி மாதம் முதல் சிறிய அளவில் எங்கள் மீது கவனம் செலுத்துகின்றனர்" என்றார் அவர்.

வடமராட்சி புலோலி பிரதேச கல்வி வலய இயக்குநர் வி.செல்வராஜா கூறுகையில், பாடசாலை மாணவர்களில் 50 விழுக்காட்டினர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இரண்டு வாரங்களுக்கு முன்பாக மாகாண சுகாதார ஆய்வாளர் தெரிவித்திருந்தார். ஒன்று முதல் 9 ஆம் தர பிரிவுகள் (grades) வரையிலான மாணவர்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் சார்பில் உணவு வழங்கப்படுகிறது. நாங்கள் 10 முதல் 15 தர பிரிவுகளுக்கு உணவு வழங்குகிறோம்" என்றார். எந்த ஒரு மாணவரும் முழுமையான அளவிலான உணவு பெறுவதில்லை என்றார்.

"பாடசாலைகளில் போசாக்கின்மை அதிகரித்திருக்கிறது. 7 ஆயிரம் சிறுமிகள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டவர்கள். 28 விழுக்காட்டினர் குறைந்த எடையுள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்" என்று யாழ். மாவட்ட கல்வி திணைக்கள இயக்குநரும் மாகாண பிரதி இயக்குநருமான வி.டி.செல்வரத்தினம் தெரிவித்துள்ளார்.

யாழ். உணவுப் பாதுகாப்பு அறிக்கை என்பது ஐ.நா.வின் அனைத்துலக தொழிலாளர் நிறுவனம், ஐ.நா. சிறார் சபை, உலக உணவுத் திட்டம் ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிடுகின்ற அறிக்கை. அதன் ஜூன் மாத பதிப்பில், "யாழ்ப்பாணத்தில் 3,538 சிறார்களுக்கு போசாக்கின்மை பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 234 பேர் (6.6) கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யுனிசெஃப்பின் மறுவாழ்வுத் திட்டத்தில் மார்ச் மாதம் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 5 வயதுக்கு றைவான சிறார்களுக்கான உயரத்துக்கேற்ற எடை தொடர்பிலான கணக்கெடுப்ப்பில் 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 விழுக்காட்டினர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர். இது மார்ச் மாதம் 24.4 விழுக்காடாக அதிகரித்தது.

அரிசி மற்றும் கோதுமை மா கிடைக்காமையினால் மட்டும் இந்தப் பாதிப்பு ஏற்படவில்லை. சத்துணவுப் பொருட்கள்தான் காரணமாக இருக்கும். "புரதச்சத்து கிடைக்காமைதான் காரணம்" என்கிறார் யாழ். அரச அதிபர் கணேஸ். இதனை யுனிசெஃப் அதிகாரியும் ஒப்புக் கொள்கிறார். "மக்களுக்கு போதுமான புரதச் சத்துள்ள உணவுப் பொருட்கள் கிடைப்பதில்லை. ஏனெனில் மீன்பிடித் தொழில் என்பது பாதுகாப்பு காரணங்களினால் பாதிப்புக்குள்ளாகியிருக்கி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.