Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"18 இராணுவத்தினர் பலியாகி 78 பேர் படுகாயமடைந்த மன்னார் சமரில் புலிகள் கடைப்பிடித்த உத்தி என்ன?: கொழும்பு ஆங்கில ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"18 இராணுவத்தினர் பலியாகி 78 பேர் படுகாயமடைந்த மன்னார் சமரில் புலிகள் கடைப்பிடித்த உத்தி என்ன?: கொழும்பு ஆங்கில ஊடகம்

[வெள்ளிக்கிழமை, 20 யூலை 2007, 21:41 ஈழம்] [சி.கனகரத்தினம்]

மன்னாரில் கடந்த வாரம் நடைபெற்ற சமரில் தமிழீழ விடுதலைப் புலிகள் கடைப்பிடித்த உத்தி என்ன? என்று கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

குடும்பிலையை கைப்பற்றியதைத் தொடர்ந்து வடபகுதியில் சிறிலங்கா இராணுவ முன்னரங்க நிலைகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டிப்பாகத் தாக்குதல் நடத்துவார்கள் என்று சிறிலங்கா புலனாய்வுத்துறை எச்சரிக்கை செய்திருந்தது.

இந்தத் தகவல் இராணுவத்தினரை சென்றடையும் போது முன்னரங்க நிலைகளில் பாரிய எண்ணிக்கையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதலுக்கான "மாதிரிப் பயிற்சி" நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

பெருந்தொகையான கனரக ஆயுதங்களும் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளுக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. வடபகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக நீண்டகாலமாக எதுவித பாரிய தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தியிருக்கவில்லை.

தற்போது வெலிஓயா தொடக்கம் மடுப்பகுதி வரை நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகள் இராணுவத்தை நோக்கி முன்நகரத் தொடங்கியுள்ளனர்.

கடந்த வாரம், மடுப்பகுதியில் பாரிய தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் நடத்தினர். இத்தாக்குதலுக்கு 57-2 ஆம் படைப்பிரிவின் கேணல் சூல அபேயநாயக்க தலைமை வகித்தார். கடந்த சனிக்கிழமை காலையில் இத்தாக்குதல் தொடங்கப்பட்டது. 4 மற்றும் 6 ஆம் விஜயபாகு காலாட்படையினரும் மன்னார்-வவுனியா வீதியில் தம்பனையிலிருந்து இணைந்துகொண்டனர்.

தொடக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து எதிர்ப்பு வெளிப்படவில்லை. எதுவித எதிர்ப்புமின்றி சுமார் 700 மீற்றர் தொலைவுக்கு இராணுவத்தினர் உள்நுழைந்த பின்னர் கனரக ஆயுதங்களைக் கொண்டு இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் இராணுவத்தினர் விலக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

சிறிலங்கா இராணுவத்தினரின் இராணுவ நடவடிக்கையை அறிந்திருந்த விடுதலைப் புலிகள், திட்டமிட்டிருந்த வகையில் முற்றுகைகளை ஏற்படுத்தியிருந்தனர். அமுக்க வெடிகளை அனைத்துப் பகுதிகளிலும் புதைத்து வைத்திருந்தனர். அதனால் இராணுவத்தினருக்கு கடும் இழப்பு ஏற்பட்டது. முன்னரங்க நிலைகளுக்கு அருகாமையில் புலிகள் அமைத்திருந்த பதுங்கு குழிகள் அனைத்தும் காலியாகவே இருந்தன.

மூன்று மணி நேர சமருக்குப் பின்னர் இராணுவம் தமது முன்னைய முன்னரங்க நிலைக்குத் திரும்பியது. மொத்தமாக இராணுவத் தரப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர். 78 பேர் படுகாயமடைந்தனர்.

அப்பகுதியில் மட்டுமே விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவத்துக்கு மூன்றாம் முறையாக இத்தகைய தோல்வி ஏற்பட்டிருக்கிறது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெற உள்ள மடு தேவாலய திருவிழாவுக்கு முன்பே மடு தேவாலயப் பகுதியை கைப்பற்றிவிட வேண்டும் என்று அரசாங்கம் விரும்புவதையே இது வெளிப்படுத்துகிறது.

விடுதலைப் புலிகள் ஆளணி வளத்துடன் மட்டுமே இராணுவத்தினரின் முன்னகர்வை முறியடிக்கவில்லை. வெடிபொருட்களையும் பயன்படுத்தித்தான் முறியடித்தனர்.

அறிவிக்கப்படாத 4ஆம் கட்ட ஈழப் போரில் விடுதலைப் புலிகளுக்கு ஆள் பற்றாக்குறை என்பது பாரிய பிரச்சனையாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

puthinam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிவிக்கப்படாத 4ஆம் கட்ட ஈழப் போரில் விடுதலைப் புலிகளுக்கு ஆள் பற்றாக்குறை என்பது பாரிய பிரச்சனையாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது>>

ஓ!!

இதுக்கு என்னதான் தீர்வு?!!!!!!

puthinam

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிக்கப்படாத 4ஆம் கட்ட ஈழப் போரில் விடுதலைப் புலிகளுக்கு ஆள் பற்றாக்குறை என்பது பாரிய பிரச்சனையாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது>>

ஓ!!

இதுக்கு என்னதான் தீர்வு?!!!!!!

இராணுவ தந்துரோபாயமும்,அதி நவீன ஆயுதமும் இதற்கான விடை..உதாரணம்:இஸ்ரேல்.

கேணல் சூல அபேயநாயக்க இவரென்ன புலிகளின் ஆயுதப் பற்றாக்குறையை நீக்க இராணுவத்தைக் கூட்டிக்கொண்டு சென்றவரா? புதிய யுக்தி, புலிகளுக்கு ஆட்பற்றாக்குறை இவையெல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கும் கொழும்பு ஊடகம் பலே கில்லாடிதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.