Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2031க்குள் குடிசையில்லா தமிழகம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2031க்குள் குடிசையில்லா தமிழகம்!

 

spacer.png

ரியல் எஸ்டேட் டெவலப்பர்களின் கூட்டமைப்பான CREDAI சார்பில், சென்னையில் இன்று (டிசம்பர் 13) மாநாடு நடைபெற்றது.

முதல்வர் ஸ்டாலின், வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “வேளாண் துறைக்கு அடுத்தபடியாக மிக அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பு தருகிற தொழிலாக இந்த கட்டுமான தொழில் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

ஒரு உதாரணத்தைச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் கீழடியில் கிடைத்துள்ள கட்டடங்களின் இடிபாடுகளின் மூலமாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகர்ப்புற நாகரீகம் கொண்டதாகத் தமிழ்ச் சமூகம் வளர்ந்து இருக்கிறது என்பதை நாம் உணர்கிறோம் என்று தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் கட்டுமான தொழில் முக்கியமான பங்கு வகிக்கிறது. மாநிலத்தின் மொத்த உற்பத்தி வருவாய்க்கு 18.3 விழுக்காடு பங்களிப்பு செய்கிற தொழில்தான் கட்டுமான தொழில்.

கடந்த செப்டம்பரில் வீடு மற்றும் நிலம் பதிவுசெய்யப்பட்ட வகையில் தமிழக அரசுக்கு 5,973 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில், பதிவு செய்யப்பட்ட புதிய கட்டுமான திட்டங்கள், அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 17 விழுக்காடு அதிகமாகியிருக்கிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் தொழிற்சாலைகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளுக்குத் தேவையான கட்டுமானங்களும் உயர்ந்து அந்த பணிகளுக்கு மூன்றாவது காலாண்டில் 4.4 மில்லியன் சதுர அடி இடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

இவை அனைத்தும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளதன் ஒரு குறியீடு. அரசும் தனியார் நிறுவனங்களும் மாநிலத்தின் வளர்ச்சி என்ற ஒரே இலக்கோடு செயல்படும்போது மக்கள் பயன்பெறுவார்கள். ஒரு நாடு வளர்ந்து வருகிறது என்பதை வெளிப்படையாகக் காட்டும் அடையாளங்களாக கட்டுமானப்பணி அமைந்திருக்கிறது.

தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் கட்டுமான தொழிலை ஊக்கப்படுத்தவும் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் ஏற்றுமதிக்கான புதிய திட்டக் கொள்கையை வெளியிட்டோம். தகவல் தொழில்நுட்ப கொள்கையையும் வெளியிட்டுள்ளோம்.

சென்னை நந்தம்பாக்கத்தில் 10 லட்சம் சதுரடியில் ‘ஃபின்டெக்சிட்டி’ உலகத்தரத்தில் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் பல பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களும் தமிழகத்திற்கு வரும் வாய்ப்பு ஏற்படும்.

தமிழகத்தில் கட்டுமான துறையில் பல புதிய முயற்சிகளை அரசு மேற்கொண்டு இருக்கிறது. தமிழகத்தின் சீரான நகர்ப்புற வளர்ச்சிக்காக 12 மண்டல திட்டங்கள் தயாரிக்கப்படும் என அறிவித்து இருக்கிறோம். கோவை, நீலகிரி மற்றும் மதுரை மண்டலங்களுக்கான திட்டங்கள் தயாரிக்கும் பணியை முதல்கட்டமாக தொடங்கியிருக்கிறோம்.

தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரமைப்பு சட்டம் 1970ன்படி தற்போதைய நகர்ப்புற வளர்ச்சிக்கு ஏற்ப சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சென்னை நகருக்கான மூன்றாவது பெருந்திட்டம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்தத் திட்டம் 2026 முதல் 2046 ஆம் ஆண்டுக்கானது. இந்தத் திட்டத்தில் வெள்ளம், நகரப் பரவலாக்கம், போக்குவரத்து இடையூறுகள், தேவையான அளவு குடியிருப்பு வீடுகள் இல்லாதிருக்கும் நிலை போன்ற சென்னை சந்தித்து வரக்கூடிய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும்.

பட்டினப்பாக்கத்தில் ஒரு மிகப்பெரிய உலகத் தரத்திலான தொழில் வணிக மையம் ஒன்று அமைக்கும் பணி தனியார் பங்களிப்புடன் விரைவில் துவங்கப்படும்.

தமிழகத்தில் குடிசைப் பகுதிகளில் வாழும் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திட 1970ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழ வழிவகை செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டை 2031 ஆம் ஆண்டுக்குள் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றத் திட்டமிட்டு அதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி 9.53 லட்சம் ஏழை மக்களுக்கு அடுத்த பத்தாண்டுகளில் வீடுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 6.2 லட்சம் வீடுகளை 31,579 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட ஒன்றிய அரசின் அனுமதி பெறப்பட்டு உள்ளன.

“நியாய வாடகை வீடு குடியிருப்புகள்” திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்கள் அவர்கள் சொந்த நிலத்தில் வீடுகள் மற்றும் தொழிலாளர்கள் தங்குமிடங்கள் கட்டி 25 ஆண்டுகள் வாடகை அடிப்படையில் தேவையானவர்களுக்கு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்

 

https://minnambalam.com/politics/2021/12/13/30/tamilnadu-cm-speech-in-CREDAI-state-level-meeting

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.