Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரு தொல்மாவளவனவர்களின் செவ்வி. செவ்விகண்டவர் பர்வீன் சுல்தானா- விகடன் காணொளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

300ரூபாய் சம்பளத்தில் ஜெராக்ஸ் கடையில வேலைசெஞ்சேன் | Thol.Thirumavalavan | Parveen Sulthana|

வன்னியர் சமூகத் தம்பிகள்தான் மாலை கட்டினாங்க - Thirumavalavan | Parveen Sultana | Part 02

திமுக, அதிமுகவை பொம்மைகள் போல கையில்வச்சு அரசியல் செஞ்சவர் ராமதாஸ் | Parveen Sultana | Part 03

நன்றி - யூரூப்


பழைய திரியொன்றிலே குறுவெட்டொட்டு ருவிற்றர் பகிர்வுகளை வைத்து உரையாடுவதைவிட இந்தப் பேட்டியை முழுமையாகப் பார்த்தால் திருதொல்மாவளவன் இருவேறுகாலகட்டத் தமிழர் தாயக மற்றும் சிறிலங்காப் பயணங்கள் தொடர்பாண கருத்துகளையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குட்டி ஸ்டோரி 

இரெண்டு சகோதரிகள். X ம் Yம்.

X அந்த ஏரியாவில் பலம் பொருந்திய ஒரு ஆணாகிய A ஐயும். Y ஒரு கொடுமைகாரனான  B ஐயும் மணம் முடித்துள்ளார்கள்.

XA இடையில் சுமூகமான தாம்பத்யியம். அடிகடி முறுகல் வரும். A கொஞ்சம் அதிகாரம் செய்யும் டைப். பக்கா சுயநலவாதி. ஆனால் X ஐ கொடுமை செய்வதில்லை. ஆனால் அவர்கள் வீட்டில் இறுதி முடிவு எடுப்பது Aதான். எக்காலத்திலும் A ஐ பிரிய X தயாரில்லை.

Y யிற்கு B செய்யாத கொடுமைகள் இல்லை. ஆனால் டிவோஸ் கொடுக்கவும் தயாரில்லை.

A ஐ பொறுத்தவரை அவருக்கு Y பற்றி அதிகம் கவலை இல்லை. Y சார்ப்பாக தான் இறங்கினால் B க்கு தான் நிரந்தர பகையாளி ஆகிவிடுவோம் என A சிந்திப்பதால், YB விடயத்தில் இரெண்டு பக்கமும் பாடி அவர்கள் சண்டையில் தன்னை நிரந்தர நாட்டாண்மையாக வைத்திருப்பதே A யின் ஒரே குறிக்கோள்.

இந்த விசயத்தில் தன் சகோதரிக்காக தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பது X க்கு தெரியும். 

அப்படி செய்ய விழைந்தால் AX இடையான உறவு பாதிக்கும். 

அதை X விரும்பவில்லை.

அப்படி செய்யுமாறு X ஐ Y கோருவது நியாயமும் இல்லை.

கோரினாலும் நடக்காது.

இதுதான் இந்தியா-தமிழகம்-இலங்கை-ஈழத்தமிழர் உறவின் சூத்திரம்.

இதைதான் “தமிழ் நாடு தமிழருக்கே” என முதன் முதலில் சொன்னவரான பெரியார் என்ற கன்னடன், தனது கடுமையான பாணியில், “ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியாது” என்று தந்தை செல்வாவுக்கு சொன்னார்.

இந்தியாவில் தமிழகம் ஒரு சுயவிருப்பில் உள்ள அடிமை

இந்த அடிப்படையை விளங்கி கொண்டால் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் உச்ச வரம்பு விளங்கும். 

நிற்க,

ஆனால் இங்கே கருணாநிதி மீதும், திருமா மீதும் நாம் கோவம் கொள்வது அவர்கள் இயலாமையை இட்டு அல்ல.

அவர்களால் எதுவும் முடியாது எனிலும் கூட அவர்கள் வெளியே வந்திருக்க வேண்டும், ஒரு பொறுப்பு கூறலை வலியுறுத்தாமல் மகிந்தவுடன் பேசி இருக்க கூடாது.

எமது எதிர்பாப்பு மிக சிறியது. ஒரு குறைந்த பட்ச தார்மீக எதிர்ப்பை திருமா காட்டி இருந்தால், கருணாநிதி போராட்டங்களை நசுக்காமல் விட்டிருந்தால், எமது மக்கள் தப்ப ஒரு சிறிய window of opportunity கிடைத்திருக்கலாம் (அதையும் நாம் சரி வர பயன்படுத்தாமல் விட்டிருக்கவும் கூடும்).

இதை கூட அவர்கள் செய்யவில்லை.

ஆகவே எங்கள் கோபம் நியாயமானது.

ஆனால் இந்த நியாமான கோபத்தை நாங்கள் வெளிப்படுத்தும் முறை இன்னும் காலா காலத்துக்கு திமுக, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், திக என தமிழ்நாட்டில் வேரோடி உள்ள அமைப்புகளை நம் நிரந்தர எதிரியாக்க கூடாது.

இந்த இயக்கங்களை தமிழ் நாட்டில் நாம் எமது எதிரிகளாக மாற்றுவதால் அவர்களுக்கு ஒரு இழப்பும் இல்லை. இழப்பு முழுவதும் எமக்குத்தான். இலாபம் முழுவதும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும்.

ஆகவே சினத்தை அடக்கி - அவர்களை நம்ப நடந்து நம்பி நடவாமல்தான் நாம் முன் நகர முடியும்.

இல்லை இவர்களை பகைத்தால், நமக்கு தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பின் ஒரு போதும் நட்பு சக்தியாக இல்லாத அதிமுக, பிஜேபி போன்றவை மட்டுமே தெரிவாக இருக்கும். அவை எம் நலனை இவர்கள் அளவுக்கு கூட சீண்டா.

மொத்தத்தில் பெரும்பான்மையான தமிழ்நாட்டு மக்களால் வெறுக்கப்படும் ஒரு குழுவாக ஈழத்தமிழர் உருவாகுவோம்.

இது இப்போதே கன ஜோராக நடக்கிறது.

சில புலம் பெயர் ஈழதமிழர்கள் தமது அணுகுமுறையை மாற்றாத விடத்து, வரும் காலத்தில் ஈழத்தமிழர் பிரச்சினை என்றாலே அது தமிழ் நாட்டில் ஒரு தீண்டதகாத விடயம் என்றாகி, நாம் ஒரு இனகுழுவாக எமது ஆதரவு தளத்தை அங்கே முற்றாக இழக்கும் அபாயம் விரைந்து உருவாகிறது.

மோடியை நம்புவோம், அல்லது இனவாத இலங்கையின் காலில் விழுவோம் என எழுதும் agent provocateurs விரும்புவதும் இதையேதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.