Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பந்த், கோலி முயற்சி வீண் - தென்னாப்பிரிக்காவிடம் தொடரை பறிகொடுத்தது இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பந்த், கோலி முயற்சி வீண் - தென்னாப்பிரிக்காவிடம் தொடரை பறிகொடுத்தது இந்தியா

14 ஜனவரி 2022
 

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

விராட் கோலி

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஒன்றில் தென்னாப்பிரிக்காவும், மற்றொன்றில் இந்தியாவும் வென்று சமநிலையில் இருந்த நிலையில், மூன்றாவது போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது.

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளை விளையாடின.

தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில், இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

அடுத்து ஜோஹன்ஸ்பர்க்கில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி முதல் நடந்தது.

முதலில் டாஸ் வென்ற இந்தியா, முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. 77.3 ஓவர்களை எதிர்கொண்டு 223 ரன்களைக் குவித்தது. இந்த இன்னிங்ஸில், இந்திய அணியின் விக்கெட் சரிவைத் தடுக்க, 201 பந்துகளுக்கு 79 ரன்களைக் குவித்த இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி பெரிதும் புகழப்பட்டார்.

ரபாடா 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜேன்சன் 3 விக்கெட்டுகளையும், டுவான் ஆலிவர், லுங்கி நிகிடி, கேஷவ் மஹராஜ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 

ககிசோ ரபாடா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ககிசோ ரபாடா

முதல் இன்னிங்ஸ் பேட் செய்ய வந்த தென்னாப்பிரிக்கா 76.3 ஓவர்களை எதிர்கொண்டு 210 ரன்களுக்கு தன் மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது.

ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், மொஹம்மத் ஷமி தலா 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ரவிச்சந்திரன் அஸ்வின் 9 ஓவர்களை வீசி 15 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 1.66 எகானமியொடு முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தார்.

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள், சீட்டுக் கட்டு போல சடசடவென சரிய விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் மட்டுமே கொஞ்சம் நிதானம் காட்டினர்.

கோலி 143 பந்துகளை எதிர்கொண்டு 29 ரன்களையும், ரிஷப் பண்ட் 139 பந்துகளை எதிர்கொண்டு 100 ரன்களையும் குவித்தனர். ரிஷப் பண்ட் கடைசி வரை தன் விக்கெட்டை இழக்கவில்லை.

தென்னாப்பிரிக்க மண்ணில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் என்கிற பெருமையையும் பெற்றார் ரிஷப் பண்ட். கே எல் ராகுல் 10 ரன்களை மட்டுமே எடுத்தார்.

இந்த மூவர் போக மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.

 

ரிஷப் பண்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ரிஷப் பண்ட்

இந்த முறை மார்கோ ஜேன்சன் 4 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் நிகிடி தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்ஸில் 198 ரன்களை மட்டுமே இந்தியா எடுத்தது.

தென்னாப்பிரிக்க அணியின் கீகன் பீட்டர்சன் சிறப்பாக பேட்டிங் செய்து 82 ரன்கள் குவித்தார். தொடக்க வீரரும் கேப்டனுமான டீன் எல்கர் 30 ரன்கள் அடித்தார். 3 விக்கெட்டுக்கு பிறகு 4வது விக்கெட்டுக்கு வாண்டர் டசனும் டெம்பா பவுமாவும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி, வெற்றி இலக்கை எட்டினர்.

212 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய தென்னாப்பிரிக்கா, போட்டி முடிய மேலும் ஒரு நாள் இருந்த நிலையில், தொடரை கைப்பற்றியிருக்கிறது.

https://www.bbc.com/tamil/sport-59992634

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்டிலும் வெற்றிபெற்று தொடரை வென்றது தென்னாபிரிக்கா அணி!

spacer.png

இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி கைப்பற்றியுள்ளது.

கேப்டவுனில் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, விராட் கோஹ்லி 79 ஓட்டங்களையும் புஜாரா 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், ரபாடா 4 விக்கெட்டுகளையும் மார்கோ ஜென்ஸன் 3 விக்கெட்டுகளையும் ஒலிவியர், லுங்கிடி மற்றும் மஹாராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 210 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கீகன் பீட்டர்சன் 72 ஓட்டங்களையும் டெம்பா பவுமா 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பும்ரா 5 விக்கெட்டுகளையும் உமேஷ் மற்றும் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் தாகூர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

13 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 198 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்கா அணிக்கு 212 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஷப்பந்த் ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மார்கோ ஜென்ஸன் 4 விக்கெட்டுகளையும் லுங்கி ங்கிடி மற்றும் ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 212 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கீகன் பீட்டர்சன் 82 ஓட்டங்களையும் ராஸ்ஸி வெண்டர் டுஸன் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பும்ரா, மொஹமட் ஷமி மற்றும் சர்துல் தாகூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரு விருதுகளையும் கீகன் பீட்டர்சன் பெற்றுக்கொண்டார்.
 

 

https://athavannews.com/2022/1261967

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.