Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்கள் கடத்தப்படும் சம்பவங்களை நாடகமாக்குவதற்கு பொலிஸார் முயற்சி * மக்கள் கண்காணிப்புக் குழு குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் கடத்தப்படும் சம்பவங்களை நாடகமாக்குவதற்கு பொலிஸார் முயற்சி * மக்கள் கண்காணிப்புக் குழு குற்றச்சாட்டு

சிங்கள நபரொருவரின் கடத்தல் நாடகத்தை உதாரணமாகக் கொண்டு அனைத்து கடத்தல் சம்பவங்களையும் ஏமாற்று நாடகங்களாக காட்டுவதற்கு பொலிஸார் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய மேலக மக்கள் முன்னணி தலைவரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோகணேசன் எம்.பி.கடத்தல் நாடகம் தொடர்பாக ஊடகவியலாளர் மாநாடு நடத்துவதை விடுத்து உண்மையில் காணாமல் போனோர் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் விளக்கமளிக்கவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிலிருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சிங்கள நபர் மீண்டும் வத்தளை மாபாகே பகுதியிலுள்ள அவரது வீட்டிலிருந்தே மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கடத்தல் சம்பவத்தை எமது மக்கள் கண்காணிப்புக் குழு அறிவிக்கவில்லை. அதேவேளையில் இச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அனைத்து கடத்தல் சம்பவங்களையும் வெறும் ஏமாற்று நாடகங்களாகக் காட்டுவதற்கு பொலிஸ் முயற்சி செய்கின்றது.

கடந்த ஒரு வருடத்துக்குள் சுமார் 20 கடத்தல் சம்பவங்கள் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் மட்டும் நடத்தப்பட்டுள்ளன. கடத்தல் நாடகம் ஒன்றைப் பற்றி பத்திரிகையாளர் மாநாடு நடத்துவதைவிட உண்மையாகவே கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் பொலிஸாரின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி பொலிஸ்மா அதிபர் விளக்கம் தரவேண்டும்.

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் ஒரு சிங்கள நபர் உண்மையிலேயே கடத்தப்படவில்லை எனவும், இது வெளிநாட்டில் வதிவிட அந்தஸ்து பெற்றுக்கொள்வதற்காக அந்நபரால் நடத்தப்பட்ட ஒரு கடத்தல் நாடகம் என்றும் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந் நபர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரது உறவினர் என்பதுவும் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸார் உடனடியாகவே பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்தியுள்ளனர். இது எமக்குப் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. ஒரேயொரு போலி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அனைத்து கடத்தல் சம்பவங்களும் வெளிநாட்டில் வதிவிட வசதி பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்படும் நாடக சம்பவங்கள் என கூறுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அதேபோல் கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வீடு திரும்பி விட்டதாகவும் அரசாங்கம் பொய்ப் பிரசாரம் செய்கின்றது. இத்தகைய முயற்சிகள் மூலம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கு அரசாங்கம் எத்தனிக்கின்றது.

கடத்தப்பட்டு காணாமல் போன பெருந்தொகையான தமிழர்களின் நிர்க்கதி நிலைமைகளை அரசாங்கம் தனது அரசியல் தேவைகளுக்காக மூடி மறைக்க எத்தனிக்கிறது. எமது மக்கள் கண்காணிப்புக்குழுவிற்கு கிடைத்துள்ள அனைத்து புகார்களையும் நாம் பட்டியலிட்டு பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். ஒரு சில பொலிஸ் நிலையங்களிலிருந்து பதில்கள் கிடைத்துள்ளன. இதுவரையில் எந்தவொரு நபரும் மீண்டும் வீடுகளுக்கு திரும்பிவிட்டதாகவோ, வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டதாகவோ பதில்கள் கிடையாது.

இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடகமாடுகின்றார்கள் என்றும் வீடு திரும்பிவிட்டார்கள் என்றும் இந்த அரசாங்கம் நடத்தும் நாடகங்களை எம்மால் அனுமதிக்கமுடியாது. கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் நிலைமைகள் தொடர்பில் விளக்கம் தருவதற்கு அரசாங்கத்திற்கும் பொலிஸாருக்கும் இம்மாத இறுதிவரை மக்கள் கண்காணிப்புக் குழு காலக்கெடு அளித்துள்ளது.

- தினக்குரல்

இச்சம்பவம் தொடர்பில் கடத்தப்பட்ட நபரின் வாக்குமூலம்: இவ்வாறு செய்வதன் மூலம் லண்டன் செல்வதற்கு விசாவை பெற்றுக் கொள்ளவே இவ்வாறு செய்தேன்!

கடத்திய நண்பரின் வாக்குமூலம்: அவரின் மனைவியிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொள்வதற்காகவே அவ்வாறு செய்யும்படி நண்பர் என்னிடம் கூறினார்!

மனைவியின் வாக்குமூலம்: அவருக்கும் எனக்கும் லண்டன் செல்வதற்காக விசா ஏற்கனவே உள்ளது. ஏன் பொலிசார் அவரை இவ்வாறு கூறும்படி நிர்பந்திக்கின்றனர் என்று தெரியவில்லை!

தெரிவிப்பது நாங்கள் தீர்மாணிப்பது நீங்கள்.

சக்தி செய்திகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.