Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை கடல் தொழில் அமைச்சரும்; புலம்பெயர் கட்சிச் செயல் வீரர்களின் 'CLUB HOUE'ம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கை கடல் தொழில் அமைச்சரும்; புலம்பெயர் கட்சிச் செயல் வீரர்களின் 'CLUB HOUE'ம்?
 
'கனேடிய வசந்தம்' என்ற 'CLUB HOUSE' அறையில், 'மீனவர்கள் பிரச்சினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசுகிறார்' தலைப்பில் சனத்திரள் கூட்டப்பட்டிருந்தது. நாங்களும் அதில் கலந்து கொள்ளச் சென்றிருந்தோம். பிந்திய சமூகமளிப்பாக அமைத்திருந்தது. அப்பொழுது இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசிக் கொண்டிருந்தார். பொதுவாக, புதிதாக எதையும் சொல்லிவிட்டதாக நினைக்கத் தோன்றவில்லை. அது பல கேள்விகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்கிற விம்பம் மீது கேள்வியை எழுப்பியது. அந்த அறையில் காற்றாட உட்கார்ந்திருந்தவர்கள், டக்கிஸ்ட்டுகள் என்பதோடு அமைச்சரைத் தெரிந்தவர்கள், அவரை ஓர் மாற்றீட்டு அரசியல்த் தலைமையாக எண்ணிப் பின் தொடரும் ஆதரவாளர்கள், அனுதாபிகள் மேலும் மிகச் சிறு எண்ணிக்கையிலான அவர் சார் அரசியல் எதிர்பாளர்களென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எல்லைக்குட்பட்டவர்களை உள்ளடக்கிய ஓர் கலந்துரையாடல் ஆகவே அது இருந்தது. அமைச்சரின் உரையென்பது தன் கட்சி அரசியலின் எதிர்த்தரப்பினருக்கானதாக அமைக்கப்பட்டிருந்து. இந்த உரைக் கட்டமைப்புப் போக்கானது தன் அரசியல் தளத்தில் இயங்குபவர்களின் மனநிலையையும் தேவையையும் அதிலும் அரசியல் தேவையையும் பூர்த்தி செய்ய முடியாமல் போனது துயரச் சம்பவமெனக் குறிப்பிடுவதோடு அமைச்சரின் இயலாமையையும் ஆளுமையையும் ஒருசேர கேள்வியின் மீது வைப்பதாக 'CLUB HOUSE' கலந்துரையாடல் வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டுச் சென்றிருக்கிறது. இச்சூழலுக்கு அமைச்சரின் சார்பையோ? அல்லது இக்கலந்துரையாடலை ஒழுங்கு செய்தவர்களைச் சொல்வதென மற்றவர்களைத் திக்குமுக்காட வைத்திருக்கிறது. நல்லதொரு முயற்சி அது இலக்கைச் சென்றடையாமல் போனது 'டக்ளஸ்' என்கிற தனிநபர் விம்பத்தைச் சுற்றிக் கட்டியெழுப்பிய அரசியல் காட்சிப்படிமம் மீண்டும் சிதலமடைதலுக்குள் உட்பட்டிருக்கிறதென்பது உண்மை.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தனதுரையை இரயிலை நிறுத்துவதற்கான வழித்தட நிறுத்தங்கள் பற்றித் தெரியாத ஓட்டுநர் போலவே கண்ட கண்ட இடங்களில், நிறுத்த நடைமேடை இல்லாத நிறுத்துவது போல் நிறுத்தி விடுகிறார். இது கலந்துரையாடலைப் பெரிதும் பாதித்திருக்கிறது; அதை அமைச்சரும் நடத்துநரும் முன்கூட்டிச் சிந்தித்தாகத் தெரியாது. இது பார்வையாளர்களின் வெளியேறும் விகிதத்தைக் கூட்டியதை அவதானிக்க முடிந்தது. ஒர் அமைப்பு கட்டமைப்புக்கு உட்பட்டு தனது உரையை அமைச்சர் அமைக்க முயற்சிக்கவில்லை. இது அமைச்சரின் அமைச்சு இணைப்பாளர்களோ? அல்லது கட்சி அரசியல் பொறுமிக்கவர்கள் அமைச்சரோடு கலந்து பேச முற்படவில்லை. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜெயமோகன் போன்றோ, எஸ். இராமகிருஸ்ணன் போன்ற எழுத்தாள பேச்சாளர்களாக இல்லையென வாதமொன்றை முன்வைத்தாலும் குறைந்த பட்ச கட்சிப் பேச்சாளராக கட்டுக்குள் நிகழ்வினை இருத்திக் கொள்ள வேண்டுமென அமைச்சர் நினைத்தாலோ ஒழிய இந்தவிதமான பிரச்சினைகளைத் தவிர்க்க முடியாது. இதற்கு அவருடைய அரசியல் வாழ்க்கை முறை காரணமாக அமைந்துவிடுகிறது. அவரோடு சார்ந்தவர்களும் அவர் போக்கிலே அவரைப் பயணிக்க விடுவதும் அவரது கதாபாத்திரத் தன்மையை புரிந்து கொண்டவர்களாகவும் இரு சமதளப் பயன்பாட்டு முறைக்குள் முரண்பாட்டைத் தவிர்ப்பதுவும் தம் இருப்பின் மீதான நலன் போக்கும் காரணமாக அமைந்திருக்கலாம் எனலாம். இதனால் வரையறைக்குள் கட்டுப்பட்டு கலந்துரையாடலை நடாத்த முடியாத சூழலை நாம் அண்மித்தே செல்கிறோம். இது பொதுவாக, அவர் சார் கூறுகளில் இப்போக்கு மிகுதியாக காணப்படுகிறது.
இந்த மீனவர் பிரச்சினைக்குள் இரயில் கதையும், பிரபாகரனும், மாகாண சபையும் அதன் முன்னால் இணைந்த இணையாத முதலமைச்சர்களும் விமர்சனக் கதையாடலுக்குள் அமைச்சர் மீண்டும் வந்து செல்கிறார். இந்த மாதிரியான கதையாடல்களை அமைச்சரின் அரசியல் வாழ்வு வழி நெடுகிலும் ஒரே மாதிரிப் பாணியில் கதை சொல்லியே காரியத்தை திசை திருப்புதல், சேதாரத்துக்குள் தள்ளுதலென கெடுத்தே வந்திருக்கிறார். அமைச்சரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்த நிலையில் அக்கேள்விக்கு சம்பந்தப்படாத கதையாடலுக்குள் உரையாடலை இழுத்துச் சென்று தன் இயலாமையை அசட்டைத்தனத்தினால் பூஸ்வாணமாக்கிட்டு இடை நடுவில் நிகழ்வைவிட்டு வெளியேறுகிறார். இதில் அமைச்சரின் பொறுப்புத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அவரிடம் இருந்து அவர் சார்புநிலையாளர்களை சரியான பதிலைப் பெற முடியாமல் தவிப்பது இந்த மாதிரியான நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டினாலும் அமைச்சர் தன்னை மறுசீரமைப்பு செய்து கொள்ளப் போவதில்லையென்பதே நிதர்சனமாகுகிறது. இதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பாகுமென்றாலும் அவரோடு நெருக்கமாக அரசியல் பயணம் செய்பவர்களால் அவரோடு இது பற்றிப் பேச முடியாத தயக்கமே காரணமாக அமைந்து விடுகிறது. இன்று அவரது இரயிலில் பயணிப்பவர்கள் அனைவரும் அவரால் அப்பயணத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்களாவார்கள்; ஆகவே அவரிலோ அல்லது அவரது கட்சியிலோ எந்த மாற்றத்தை நாமோ அல்லது தமிழ் மக்களோ காணமுடியாதென்பது நிதர்சன உண்மையாகுகிறது.
கச்சதீவில் அமைந்திருக்கும் கோயிலுக்கு தமிழகத்து மக்கள் கலந்து கொள்ள இலங்கை அரசு இந்த வருடம் அனுமதி மறுத்திருந்தது. இதற்காக தமிழக முதலமைச்சர், நடுவன் அரசின் தலைமை அமைச்சருக்கு கடிதமொன்றை தி.மு.க நடுவன் அரசு பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மூலமாக கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனடிப்படையில் இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இந்திய நடுவன் அரசு தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு இவ்விடயம் தொடார்பாகப் பேசியதாக இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா CLUB HOUSE' கலந்துரையாடலில் தெரிவித்தாகத் தகவல் சொல்லப்படுகிறது.
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டும் விடயத்தை தமிழக அரசுடன் இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோ அல்லது இலங்கை வெளிநாட்டு அமைச்சோ பேசுவதற்கான சந்தர்ப்பங்களை, வாய்ப்புக்களை அல்லது தமிழக அரசு அல்லது இந்திய நடுவன் அரசு இலங்கை அரசு பேசுவதற்கான சூழலை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்படுத்த முனையவில்லையென்பது ஒரு கேள்வியாக நிற்கிறது. 'தொப்புள்க்கொடி' என்ற சொல்லின் ஊடாக கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏன் எல்லை தாண்டுகிறார்? இதற்காக மீன்களுக்கு கடலில் பாஸ்போர்ட் அல்லது கடலில் எல்லைகள் கிடையாதென குழப்பல் கதைகளை அவிட்டு விட்டுக் கொண்டு திரிகிறார் என்பதற்குள் மறைந்திருக்கும் கேள்விக்கான விடையும் தேட வேண்டியிருக்கிறது?
(Feb 14, 2022)
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.