Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உங்கள் இலக்குகளை அடைவது எப்படி?

Featured Replies

உங்கள் இலக்குகளை அடைவது எப்படி ?

தமிழ்ல வேடிக்கையான பழமொழிகள் நிறைய உண்டு. 'கிட்டாதாயின் வெட்டென மற'ன்னு ஒரு பழமொழி. 'முயற்சி திருவினையாக்கும்'னு ஒரு பழமொழி. என்ன இது ஒண்ணுகொண்ணு முரணா இருக்கு. 'முயற்சி திரு வினையாக்கும்'னு செய்யறதைத் தொடர்வதா? 'இது ஒண்ணும் கிட்டாது. வெட்டென மறப்போம்'னு எழுந்து போயிடலாமா?

ஆசைகளிலே நிறைவேறக் கூடியது, நிறைவேற முடியாததுனு ரெண்டு வகை. எடுத்துக் காட்டா எனக்கு கணினி பற்றி நல்லா கத்துக்கணும்னு தோணினா, அதுக்குன்னு புத்தகம், சொல்லி தரும் இடம் எல்லாம் இருக்கு. முயற்சி எடுத்து படிச்சா திருவினையாகும். நான் அஞ்சடி எட்டங்குலம் உசரம், ஆறடி பத்தங்குலமா வளரணும்னா பேத்தல். அதை வெட்டென மறப்பது நல்லது.

இலக்குகளை அடைவது எப்படினு ஒரு புத்தகம் இருக்கு.

******எதற்கு இலக்கு தேவை*****

மனிதத் தேவைகளில் ஏழு வகையான விசயங்களுக்கு இலக்குகள் தேவை என்கிறார்கள். அவை என்னென்ன?

1. மனம் (நினைவாற்றல், ஈடுபாடு,கற்றல், படைப்பு)

2. உடல் நிலை (ஆரோக்கியம், எடை குறைப்பு, கொழுப்பு குறைப்பு)

3. குடும்பம் (குடும்பத்தினரிடையே நல்லுறவு)

4. சமூகம் (நண்பர்களிடையே நல்லுறவு)

5. ஆன்மீகம் (தேடல், மன அமைதி, பொது சேவை)

6. வேலை (பிடித்த வேலை, அதிக ஊதியம் தரும் வேலை)

7. சொத்து (நிம்மதியான வாழ்க்கைக்குத் தேவையான அளவு)

****ஆசை மட்டும் போதாது*****

ஒரு காரியம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவது மட்டும் போதாது. அதை எப்படி முடிக்க வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கு வேண்டும். 'நான் ஆணையிட்டால்...அது நடந்துவிட்டால்'னு பாடிட்டா காரியம் ஆயிடுமா? இதை நான் செஞ்சாகணூம்னு ஒரு இலக்கு நிர்ணயம் பண்ணிக் கொண்டு அதற்கு உ¨ழைக்க வேண்டும்.

*****உழைக்கத் தயாராயிரு*****

ஒரு இலக்கு உள்ளவனுக்கும் அது இல்லாதவனுக்கும் நல்லா வித்தியாசம் தெரியும். இலக்கு உள்ளவனுக்கு வெற்றி பெறணும்னு ஒரு வெறி இருக்கும். அதற்கு அவன் உழைக்க தயாரா இருப்பான். கருமமே கண்ணாயினார் எப்படி இருப்பாங்க..கண் துஞ்சார், பசி நோக்கார் etc., etc., அல்லவா? இலக்கு இல்லாதவன் காத்து அடிக்கும், கிளை அசையும், பழம் உதிரும், வாயில வந்து விழும்னு குருட்டுக்கனா கண்டுட்டு இருப்பான்.

****இலக்கை எழுத்தில் வடி*****

முதல்படி என்ன? உனக்கு என்ன இலக்கு? என்னத்தை சாதிக்கணும் ? ஒரு பேப்பர் பெனிசில் எடுத்து எழுது.

மனம்: ஞாபகமறதி அதிகமா இருக்கு. எதையாவது மறந்திடறேன். அதுனால நேரம், பொருள் விரயம், உறவு முறிவு. மனக் கஷ்டம் நினைவாற்றலை அதிகமாக்கணும். ஒரு நாவல் எழுதணும்.

உடல் நிலை: எடையைக் குறைக்கணும்.

குடும்பம்: மனைவி, குழந்தைகளோட சண்டை வராம இருக்கணூம்

சமூகம்: புது நண்பர்கள் வேண்டும்.

ஆன்மீகம்: மக்களுக்கு தொண்டு செய்யணும். மன அமைதி வேணும்.

வேலை : இப்ப இருக்கற வேலையில ஊதியம் இல்ல. வேலையில் திருப்தி, மன நிறைவு இல்லை. அதை எப்படி அதிகமாக்குவது? சொத்து : கார், வீடு, பாங்கில பணம் வேணும்

இப்படி நமக்கு என்ன வேணும் என்பதை எழுதிக் கொள்ளுங்கள். எண்ணத்தை எழுத்தில் எழுதும் போது மனத்தில் அது பதிகிறது. கடவுள் பிரசன்னமாகி "என்னப்பா வேணும்"னு கேட்டப்ப, நித்யத்துவம் (சாகாவரம்)னு கேட்கறதுக்கு பதிலா நித்ரத்துவம் (தூக்கம்)னு வாய் குழறி சொல்லி தூங்கும் வரம் பெற்றானாம் ஒருவன். எழுதி வெச்சு ஒழுங்கா கேட்டிருந்தா இது மாதிரி ஆயிருக்குமா?

*****இலக்கு அளவிடக் கூடியதாக இருக்கவேண்டும்*****

இலக்கை எழுதிட்டா காரியம் ஆயிடுச்சா? இல்ல. அளவிடக்கூடிய இலக்கா இருக்கான்னு பார்க்கணும். எடை குறையணும், சரி..எவ்வளவு? அஞ்சு பவுண்டா, அம்பது பவுண்டா? அதிக சம்பளம் வேணும் சரி ஆயிரமா, பத்தாயிரமா? எதுக்குன்னா, நம் முயற்சிகள் எந்த அளவுக்கு வெற்றி கொடுத்திருக்கு, நம்ம முயற்சியை அதிகப்படுத்தணுமா வேணாமான்னு தெரியணூம். விசுவல் பேசிக் படிக்கணும்னு ஆசை, இலக்கு. அதில 'ஏ' வாங்கப்போறியா, சும்மா பாஸ் மார்க்கா, பேருக்கு சர்ட்டிபிகேட்டா?

*******இலக்கு ஒரு கால கட்டத்துக்குள் செய்ய இயல்வதாய் இருக்க வேண்டும்*****

சரி இலக்கு இருக்கு, அளவு நிர்ணயம் பண்ணியாச்சு. அப்புறம்? இதை எவ்வளவு நாளில அடையணும். இருவது பவுண்டு எடை குறையணும் மூணு நாளில. நடக்கற காரியமா? சதையைக் கத்தியால வெட்டினாத்தான் இது நடக்கும். அதுக்குனு மூணு வருச காலம்கிறது பேத்தல். அதுக்குள்ள என்ன என்னவோ ஆயிடலாம்.

சரிய்யா. இலக்கு இருக்கு, என்ன அளவு வேணும்னு தெரியும், என்ன கால கட்டத்துல இதை அடையணும்னு தெரியும். அப்புறம்.

******இலக்கை அடையும் வழிகளை ஆய்ந்து பார்****

இதை எப்படி அடைவது என்று பகுத்துப் பார். எடையைக் குறைக்கணும்.

அனாவசிய தீனியை நிறுத்தல்.

சர்க்கரை போட்ட கோலாக்கு பதில் தண்ணி.

அரிசி சாதம் ரெண்டு கப்பு போதும்.

உருளைக்கிழங்கு வேணாம் கீரை போதும்.

தினம் 2 மைல் நடக்கணும்.

தேகப்பயிற்சி செய்யணும்.

******இலக்கின் கதியை (progress) சோதித்துப் பார்*****

நம்ம இலக்குல எவ்வளவு தூரம் போயிருக்கோம்னு சோதிக்க வரிசயா பல நாள் குறிச்சுக்கணும். சோதிக்கணும். முப்பது நாள்ல பத்து பவுண்டு குறைக்க எண்ணினோம், பத்து நாளில் ரெண்டு பவுண்டுதான் குறைஞ்சிருக்கு. இதே வேகத்துல இலக்கு முழுமையாக அடைய முடியாது. அதிக முயற்சி தேவை.

*******இலக்கை பாதிக்கும் எதிர்மறை விசயத்தை ஒழி******

எதிர்மறையான விசயங்களை இனங்கண்டு அழியுங்கள். "ஒரு ஜோஸ்யர் சொன்னாரு, எனக்கு நல்ல வேலையே கிடைக்காதுன்னு. அதான் நான் முயற்சியே செய்யல". "என்னை விட குண்டா எத்தனை பேரு இருக்காங்க. எடை குறையாட்டா என்ன?" "படிக்கணும்னு ஆசை? யாரு போயி கிளாசுல உட்கார்ந்து...?" "நான் உதவாட்டா என்ன, எத்தனை தன்னார்வத் தொண்டர்கள் இருக்கிறார்கள்?" "எல்லாரும் ஜாலியா டிவி பாக்கறாங்க, நான் மட்டும் முட்டாத்தனமா பரிட்சையில மார்க் வாங்கணும்னு இலக்கு வெச்சிட்டு..."

ஜோஸ்யன் சொல்லட்டும். அதுதான் வேதவாக்கா? மத்தவன் குண்டா இருந்துட்டு போகட்டும், நீ ஏன் குண்டா இருக்கணும்? கிளாசுல உட்கார்ந்து படிக்க முடியலனா, நூலகத்துல போயி புத்தகம் வாங்கி படி, காசு குடுத்து புத்தகம் வாங்கி நீயே கத்துக்க. தொண்டர்கள் இருக்காங்க சரிய்யா, நீ போய் உன்னால முடிஞ்சதைச் செய்யேன். யார் டிவி பாத்தா உனக்கு என்ன? உன் இலக்கு வேற. நீ எங்கியோ போக வேண்டியவன்.

**********இலக்கை உன்னால் அடைய முடியும் என நம்பு*********

இலக்கில் உறுதியான பிடிப்பு தேவை. நாம் ஜெயிக்கமாட்டோம் என்ற எண்ணத்தை ஒழி. மலையேறுபவர்களில், நாம் விழுந்து விடுவோமோ என்று அஞ்சுபவர்களே அதிகம் கீழே விழுகிறார்கள். நான் ஜெயிப்பேன், அதுவரை ஓய மாட்டேன் என்று உறுதி கொள்.

********திட்டமிட்டு படிப்படியாய் செய்********

படிப்படியாய் செய். To do list என்று கேள்விப்பட்டதுண்டா? இன்னிக்கி இதெல்லாம் செய்யணும் என்று பட்டியலிடு. அப்புறம் அதை எந்த வரிசையில் செய்வது உசிதம் என்று மாற்றி அமை. செய்ய முடியாமல் போனதை மறுநாள் பட்டியலில் போடு. ஏன் சில காரியம் முடியாமல் போனது? சிந்தி, சீராக்கு.

*******இலக்கை அடையும் வழிகளை இனங்காண்*******

எதை எப்படிச் செய்யலாம் என்று நம்மாலேயே சில சமயம் முடிவு செய்வது கடினம். ஏன்னா அதற்கான பின்புலம், பயிற்சி, திறமை, அறிவு நம்மிடம் இல்லை. மற்றவர்களைக் கேள். படி. தெரிந்தவர்களை நாடு. இணையத்திலே கேள். கூகிளில் போட்டு தேடு.

******எதுவும் அடையக் கூடியதே*************

சரிதான் எனக்கு படிப்பு வாணாம், வேலை வேணாம், மனநலம் வேணாம், உடல் நலம் வேனாம், சமூக நலம் வேனாம், குடும்ப நலம் வாணாம், சொத்து சேர்த்து பணக்காரனாயிடணும். எந்த இலக்கானாலும் முறை ஒன்றே. இலக்கை ஏற்படுத்து, அளவிடக்கூடியதாக செய், முடிக்க வேண்டிய காலம் ஏற்படுத்திக் கொள், அடிக்கடி வெற்றி அடைஞ்சிருக்கமானு சோதிச்சு, முயற்சியை விரிவு படுத்து, அதிக செய்தி சேகரி....

முதல் ஆறு இலக்கும் இருந்தா ஏழாவது சொத்து சேர்ப்பு தேவையில்லை. மனநலம்,உடல்நலம், குடும்பநலம், சமூகநலம், ஆன்மீகநலம்,நல்ல வேலை இருந்தாலே எதற்கு சொத்து ?

சொத்து எப்படி வரும்?

திருமணத்தால், சொத்துரிமையால் வருவதை விடுங்கள். பாக்கி என்ன? லாட்டிரி, சேமிப்பு, முதலீடு. முதலீடுன்னா வீடு வாங்குதல், பங்கு மார்க்கட், வியாபாரம், காப்பீடு. லாட்டிரியில் வெறி கொண்டு பணமிழக்காதீர்கள். யாரோ ஒரு கிழவிக்கு ஒரு டாலர் டிக்கட்டுக்கு 200 மில்லியன் டாலர் கிடைச்சுதுன்னா, ஆசை வரும்தான். ஒழிஞ்சு போறது வாரம் ஒரு டிக்கட் வாங்குங்க, அதுலயும் பத்து பேரா சேர்ந்து வாங்கினா ஜெயிக்கும் வாய்ப்பு சற்று கூடுதல் அல்லவா? வீடு வாங்குங்கள். வாங்க காசில்லயா? பத்து பேரா சேர்ந்து வாங்கி வாடகைக்கு விடுங்கள். விலை மேல போனவுடன் விற்று தனியாக வாங்க முடியுமா என்று பார். அனாவசிய செலவை நிறுத்து. காசை சேமி. பங்கு மார்க்கட் பத்தி படித்துவிட்டு கொஞ்சம் அதிலும் போடு. எல்லா முட்டையையும் ஒரே கூடையில் வைக்காதே என்பது முதுமொழி. ஒரு கூடை சரிஞ்சாலும் பாக்கியிலுள்ளது மிச்சம்தானே. வியாபாரம் செய்யுங்கள். நெளிவு சுளிவை கற்றுக் கொண்ட பிறகு. எதற்கு சேர்த்து வைக்கிறோம் என்று தெளிவாக இருங்கள். குழந்தைகளுக்கு கொடுக்க என்பது முட்டாள்தனம். ஒருவனுக்கு ஒரு மீன் கொடுத்தால் ஒரு வேளை உணவிட்ட மாதிரியாம், ஒருவனுக்கு மீன் பிடிக்கச் சொல்லிக் கொடுத்தால் வாழ்க்கை முழுவதும் அவனுக்கு சோறிட்ட மாதிரியாம். ஒரு பேச்சுக்கு சொன்னேன், நான் மீன் திங்கறதில்லனு சொல்லி அறுக்காதீங்க. குழந்தைகளுக்கு கல்வியைக் கொடுங்கள். உழைப்பின் உயர்வை, போதுமென்ற மனதுடன் வாழ்வதை கற்றுக் கொடுங்கள். சும்மா வந்தால் அவர்களுக்கு அதன் அருமை தெரியாது. 'எங்கப்பன் கஞ்சன் வயித்தைக் கட்டி வாயைக் கட்டி சேர்த்தான்' என்று சொல்லிக் கொண்டே அழிக்கும்! இன்சூரன்ஸ் காப்பீடு ஒரு சுலப வழி. குறைந்த செலவில் பாதுகாப்பு. "எங்க தாத்தா 80 வயசு வரைக்கும் இருந்தாரு", "இன்சூரன்சு ஏஜெண்டு ரெண்டு லச்சம் டாலர் பாலிசில இருநூறு டாலர் கமிசன் சம்பாதிச்சிருவானோ"ன்னு சனங்கள் எடுக்காது. கார்ல அடிபட்டு சாகும். எடுத்துப் போட எட்டு பேரு தருமம் பண்ணணும். மூலையை பயன்படுத்து. தேவைக்கு அதிகமாய் காப்பீடு செய்யாதே. காசு வீணாக செலவாகும்.

*********இலக்கிலும் உண்டோ சின்னது பெரியது********

சொத்து இருந்தா நல்லதுதான். நல்ல வேலை இருந்தா கசக்காது. ஆனால், மன நலத்தை பாதுகாக்கணும். உடல் நலமும் அவசியம். சித்திரம் எழுத சுவரு வாணாமா? குடும்ப உறவுகள் ஒழுங்கா இருந்தாதான் வாழ்க்கை இனிக்கும். சமூகத்தில நல்ல நண்பர்கள் தேவை. நம்முடைய ஆன்மீக வளர்ச்சி மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது வளர்கிறது. ஆன்மீகத் தேடல்னு சொல்லிட்டு புத்தகத்துல தேடுவது பேத்தல். எழுந்து போய் ஒருத்தருக்கு உதவியா ஒரு கை பிடிச்சா நீங்களே இறைவனாகிற, ஆமாம் சார் நிஜமாகவே, வாய்ப்பு உள்ளது (குறைஞ்ச பட்சம் உதவி பெறுபவன் எண்ணத்தில் !)

*********புதுப்புது இலக்குகள் வைத்து மேன்மேலும் கற்க ஆவல் கொள்************

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.