Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான்கரை மணிநேரம் மின்விநியோகம் துண்டிப்பு ; நாட்டில் முதலீடு செய்வதற்கு யார் முன்வருவார்கள்? - ரோஹினி கவிரத்ன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான்கரை மணிநேரம் மின்விநியோகம் துண்டிப்பு ; நாட்டில் முதலீடு செய்வதற்கு யார் முன்வருவார்கள்? - ரோஹினி கவிரத்ன

(நா.தனுஜா)

உள்நாட்டு கைத்தொழில் உற்பத்தி நடவடிக்கைகளில் முதலீடு செய்வதற்கும் அவற்றை ஊக்குவிப்பதற்கும் முன்வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்புவிடுத்துள்ளார். ஆனால் நாளொன்றில் சுமார் நான்கரை மணிநேரம் மின்விநியோகம் துண்டிக்கப்படும் நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு யார் முன்வருவார்கள்? அத்தோடு இறக்குமதிகளும் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் கைத்தொழில் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு அவசியமான மூலப்பொருட்களை எவ்வாறு பெற்றுக்கொள்ளமுடியும்? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இன்றுமுதல் (நேற்றுமுதல்) நாடளாவிய ரீதியில் மின்விநியோகம் துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, மறுபுறம் எரிபொருளைத் தடையின்றி விநியோகிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிடுகின்றார். ஆனால் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில கூறுகின்றார். அத்தோடு எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படாது என்று ஜனாதிபதியும் எரிபொருள் விலைகளை அதிகரிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் ரமேஷ் பத்திரணவும் கூறுகின்றனர். தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் தொடர்பில் அதில் அங்கம்வகிக்கும் உறுப்பினர்களே அறிந்திருக்காத நிலையில், எதிர்வருங்காலங்களில் நாட்டின் நிர்வாகத்தை அவர்களால் எவ்வாறு முன்னெடுத்துச்செல்லமுடியும் என்ற கேள்வி எழுகின்றது.

இன்றளவிலே தனியார் பஸ்சேவை முழுமையாகப் பாதிப்படைந்திருக்கின்றது. அச்சேவையைப் பொறுத்தமட்டில் சுமார் 250 பயணசேவைகள் தற்போது 50 ஆகக் குறைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோன்று பாண், பனிஸ் போன்ற பேக்கரி உற்பத்திகளுக்கு அவசியமான கோதுமைமா, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பற்றாக்குறையின் காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 300 பேக்கரிகள் மூடப்பட்டிருக்கின்றன. அதேபோன்று பெரும் எண்ணிக்கையான பேக்கரிகளில் தற்போது 5 நாட்கள் மாத்திரமே பாண் தயாரிக்கப்படுகின்றது. எனவே அரசாங்கத்தின் முறையற்ற தீர்மானங்களாலும் செயற்திறனற்ற நிர்வாகத்தினாலும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் சாதாரண பொதுமக்களே பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அடுத்ததாக உள்நாட்டில் முன்னெடுக்கப்படும் கைத்தொழில் உற்பத்தி நடவடிக்கைகளில் முதலீடு செய்வதற்கு முன்வருமாறு ஜனாதிபதி அழைப்புவிடுக்கின்றார். ஆனால் நாளாந்தம் நான்கரை மணிநேரம் மின்விநியோகம் துண்டிக்கப்படவுள்ள நிலையில், கைத்தொழில் துறையில் முதலீடு செய்வதற்கு யாரேனும் முன்வருவார்களா? அதேவேளை கைத்தொழில் உற்பத்திகளுக்கு அவசியமான மூலப்பொருட்கள் எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பதுடன் இங்கு இறக்குமதிகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறிருக்கையில் உள்நாட்டுக் கைத்தொழில்துறையை எவ்வாறு வலுப்படுத்தமுடியும்?

அதேவேளை கடந்த காலங்களில் நிர்மாணத்துறை வெகுவாக விரிவடைந்தமையினாலேயே நாட்டில் சீமெந்திற்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறுகின்றார். ஆனால் உண்மையில் டொலர் நெருக்கடி காரணமாகவே அதற்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதுடன் வேறு சிலரது தனிப்பட்ட தேவைகளுக்காக இப்பற்றாக்குறை திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டிருப்பதாகவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. மறுபுறம் விவசாயிகள் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவசியமான உரத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன் அதன் விளைவாக நாட்டின் தேசிய உணவுற்பத்தி வீழ்ச்சிகண்டுள்ளது. ஆகவே அரசியல்வாதிகள் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்தவாறு தீர்மானங்கள் மேற்கொள்வதைவிடுத்து, வீதிகளில் இறங்கி சாதாரண மக்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் புரிந்துகொள்வதற்கு முயற்சிக்கவேண்டும்.

மேலும் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள குறிகாட்டியின் பிரகாரம் கடந்த 2021 ஆம் ஆண்டில் நாட்டில் இடம்பெறும் ஊழல்மோசடிகளின் வீதம் உயர்வடைந்துள்ளது. இவ்வாறு நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதுடன் மக்களும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள சூழ்நிலையில், அரசாங்கம் அவற்றுக்கு உரியவாறான தீர்வை வழங்குவதைவிடுத்து எதிர்க்கட்சியைப்பற்றி மாத்திரமே பேசிக்கொண்டிருக்கின்றது. எனவே அதனைவிடுத்து மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். 
 

 

https://www.virakesari.lk/article/122983

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.